2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா வெளியேறியதற்கான 3 காரணங்கள்

Heartbreak for India
Heartbreak for India

இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர் கொண்டது. இப்போட்டி மழையின் காரணமாக இரு நாட்கள் நடந்தது. நியூசிலாந்தின் சிறப்பான நம்பிக்கை மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளியேற்றப்பட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேகமூட்டத்துடன் வானிலை காட்சியளித்த காரணத்தால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் சிறப்பான தொடக்கத்தை அளிக்க இயலவில்லை. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது ஆட்டத்திறனை சரியாக வெளிபடுத்தி நியூசிலாந்து டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.

ஜாஸ்பிரிட் பூம்ரா ஆட்டத்தின் ஆர்ம்பத்திலேயே மார்டின் கப்திலை வீழ்த்தினார். ஆனால் கானே வில்லியம்சன், ராஸ் டெய்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். யுஜ்வேந்திர சகால் கானே வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தும் முன்பு வரை டெய்லர் மற்றும் வில்லியம்சன் 64 ரன்கள் பார்ட்னர் ஷீப் செய்து விளையாடினர். மழை குறுக்கிடும் முன் நியூசிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தவறியதால் 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

ரிசர்வ் நாளில் 3.5 ஓவர்களுக்காக களமிறங்கிய நியூசிலாந்து மிகவும் கட்டுக்கோப்பாக விளையாடி 28 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்தியா 240 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. இந்திய அணி ஆரம்பத்திலேயே மிகவும் தடுமாற்றத்தை வெளிபடுத்தி மோசமான தொடக்கத்தை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக தடுமாறியது இந்தியா. சற்று சுமாரன இலக்கை இந்தியா எட்டி விடும் என்று நினைத்த போது தொடர்ந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியதே இரண்டு உலகக்கோப்பை சேம்பியனான இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கை ஊட்டியதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நியூசிலாந்தின் அதிரடி பௌலிங்கிற்கு முன்னால் ரன் குவிப்பது கடும் சவாலாக இருந்ததால் 221 ரன்களில் இந்தியா சுருட்டப்பட்டது. மேட் ஹன்றி 10 ஓவர்களை வீசி 37 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாம் இங்கு இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியதற்கான காரணங்களை காண்போம்.


#3 டாப் ஆர்டரின் மோசமான தொடக்கம்

Matt Henry took three wickets
Matt Henry took three wickets

இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், இவ்வுலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சீரான அதிரடி ரன்களை குவித்தவர்களாக வலம் வந்தனர். 240 என்ற இலக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக சேஸ் செய்து முடித்து வைத்து விடுவார்கள் என அனைவரும் நம்பினர். 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகம் நம்பியிருந்தது. ஆனால் இப்போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பிய காரணத்தால் மிடில் ஆர்டர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்த சவாலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், மேட் ஹன்றி ஆகியோர் இந்திய பேட்டிங்கிலிருந்து ரன்கள் கசியாமல் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தினர். இந்தியா 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டத்தின் பொறுப்பு மிடில் ஆர்டர் வசம் வந்தது. ஆனால் இந்திய அணியால் அதன் பிறகு மீள முடியாத காரணத்தால் இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து.

மேட் ஹன்றி 10 ஓவர்களில் 37 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார். டிரென்ட் போல்ட் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

#2 பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட குழப்பங்கள்

MS Dhoni might have come a little too
MS Dhoni might have come a little too

இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருந்தது. அந்த சமயத்தில் இந்திய அணிக்கு ஆரம்ப ஸ்விங் பந்துவீச்சிற்கு எதிராக நிலைத்து விளையாட விராட் கோலிக்கு பேட்ஸ்மேன்கள் தேவைப்பட்டனர். இச்சமயத்தில் அனுபவம் நிறைந்த மகேந்திர சிங் தோனியை களமிறக்காமல் அவருக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் களமிறக்கியது. இதுவே இந்திய அணிக்கு விபரீதமாக அமைந்தது.

தோனி சற்று முன்னதாக களமிறக்கப்பட்டிருந்தால் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கை சிறப்பாக வழிநடத்தி ஒரு சரியான அடித்தளமிட்டு ஆட்டத்தை முடித்து கொடுத்திருப்பார். தோனி களமிறங்கும் போது இந்தியா 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த காரணத்தால் போதுமான அளவு பேட்டிங் இல்லாமல் இருந்தது.

ஜடேஜா மற்றும் தோனியின் 100+ ரன்கள் பார்டனர் ஷீப் இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பின்னர் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை. தோனி விக்கெட் வீழ்ச்சி பற்றி சிறிதும் கவலைப்படாமல் நிலைத்து விளையாடினார். இதனால் தேவையான ரன் ரேட் அதிகமாகியது. இக்கட்டான சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அவ்வாறுதான் செய்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதி சமயத்தில் இந்திய அணியால் ரன் இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியது.

#1 நியூசிலாந்தின் அணியின் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு

A great day for New Zealand
A great day for New Zealand

நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு முன்னர் கடைசியாக விளையாடிய 3 தகுதிச் சுற்று போட்டியிலும் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. இவ்வுலக கோப்பை தொடரின் ஆரம்பத்தில் அதிரடி ஆட்டத்தை நியூசிலாந்து வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை குவித்திருந்தது. 2015 உலகக்கோப்பை தொடரின் ரன்னர்களான நியூசிலாந்து நெட் ரன் ரேட் அடிப்படை 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் மூலம் நியூசிலாந்து வெல்ல மிகக்குறைந்த வாய்ப்புகள் இருப்பதாக அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சிறிது கூட நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிகொணர்ந்து, 2019 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் என அனைவரும் நினைத்திருந்த இந்தியாவை வீழ்த்தியது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் குவித்த 239 ரன்களை பார்க்கும் போது ஒரு சுமாரான ரன்களாகவே அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நியூசிலாந்து பௌலிங்கில் சிறப்பாக அசத்தி இந்திய வலிமையான பேட்டிங் வரிசையை கட்டுபடுத்தியது.

நியூசிலாந்தின் சில சிறப்பான ஃபீல்டிங் மற்றும் அதிரடி பௌலிங் இந்திய அணியை 2019 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்ற காரணமாக இருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனியின் அதிரடி பார்டனர் ஷீப்பை கண்டு சிறிதும் மனம் தளராத நியூசிலாந்து அணி எதிர்பாரத வகையில் வெற்றி பெற்றது. நெருக்கடியை சிறப்பாக சமாளித்து இறுதி வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடியது நியூசிலாந்து அணி.

Quick Links

Edited by Fambeat Tamil