2019 உலகக்கோப்பையில் இறுதி தருணத்தில் இங்கிலாந்து தடுமாறுவதற்கான காரணங்கள்

England v Australia - ICC Cricket World Cup 2019
England v Australia - ICC Cricket World Cup 2019

ஆதிக்கங்கள் எப்போதும் நிரந்தரம் அல்ல! கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த அணி இங்கிலாந்து. எனவே இவ்வருட உலகக்கோப்பை இங்கிலாந்திடம் வந்து சேரும் என ரசிகர்கள் நம்பினர். கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பையில் இங்கிலாந்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என நினைத்தனர்.

ஒரு சிறந்த அணி கட்டமைப்புடன் இங்கிலாந்து உலகக்கோப்பையில் களம் கண்டது. மண்ணின் மைந்தர்கள் மற்றும் உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியான இங்கிலாந்தில் அதிரடி மற்றும் நிலையான பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை உள்ளனர். அத்துடன் மின்னல் வேக பந்துவீச்சு, சரியான சுழற்பந்துவீச்சு மற்றும் நடுநிலை கேப்டன் இயான் மோர்கன் ஆகியவற்றை கொண்டு தலைசிறந்த அணியாக வலம் வந்தது.

முழு உத்வேகத்துடனும், பாகிஸ்தானிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-0 என உலகக்கோப்பைக்கு முன்னதாக நடந்த தொடரை கைப்பற்றிய உற்சாகத்திலும் இங்கிலாந்து களம் கண்டது.

அதிரடியான தொடக்கம்

இங்கிலாந்து உலகக்கோப்பையை மிகவும் சிறப்பானதாக தொடங்கியது. தனது பழைய எதிரியான தென்னாப்பிரிக்காவை முதல் போட்டியில் வீழ்த்தி தன் ஆதிக்கத்தை தொடங்கியது. இங்கிலாந்து வீரர்களின் சிறந்த பங்களிப்பால் 300+ ரன்கள் குவிக்கப்பட்டது, பந்துவீச்சாளர்கள் மின்னல் வேகத்தில் வீசி எதிரணி பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர்.

அந்தச் சமயத்தில் பார்க்கும் போது இங்கிலாந்து அணி இவ்வுலகக் கோப்பையில் சாதனை மேல் சாதனை படைக்க உள்ளனர் என்பது தெரிந்தது.

ஏற்றங்கள் - இறக்கங்கள்

பின்னர் இங்கிலாந்து வானிலை படிப்படியாக மாறத் தொடங்கின. உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டிகளில் கடும் மழை பாதிப்பு இருந்து வந்தது. அத்துடன் ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஒரு முக்கிய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி‌.

ஆசியாவைச் சேர்ந்த பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளினால் துவண்டு போயிருந்தது. இருப்பினும் இங்கிலாந்திற்கு எதிராக தனது முழு ஆட்டத்தையும் வெளிபடுத்தி 348 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான். இங்கிலாந்து அந்த இலக்கை சேஸ் செய்ய தவறியது. ஜோ ரூட் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் இப்போட்டியில் சதமடித்தனர். மற்ற வீரர்கள் ஜொலிக்கவில்லை.

ஜேஸன் ராயின் அற்புதமான ஆட்டத்தால் வங்கதேசத்திற்கு எதிராக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது இங்கிலாந்து, மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான எகானமிக்கல் பௌலிங்கை வெளிபடுத்தியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து வென்றது.

மேலும் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 17 சிகஸர்களை விளாசி 397 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினார். அனைத்து நிகழ்வுகளும் இங்கிலாந்திற்கு சாதகமாத்தான் சென்று கொண்டிருந்தது.

தவறுக்கு மேல் தவறு

இதன் பின் இங்கிலாந்து ஆட்டத்திறன் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சற்று ரன் குவிக்க கடினமான ஆடுகளத்தில் இலங்கையின் பௌலர் லாசித் மலிங்கா தனது ஆதிக்கத்தை செலுத்தினார். பரபரப்பாக சென்ற இப்போட்டியில் இங்கிலாந்து 232 என்ற இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவி தனது தீமை காலத்தை தானகவே தொடங்கி கொண்டது.

இங்கிலாந்தின் மோசமான பேட்டிங் மீண்டுமொருமுறை லார்ட்ஸ் மைதானத்தில் தனது பரம எதிரியான ஆஸ்திரேலிய அணியிடம் வெளிபடுத்தியது. 285 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து ஆல்-அவுட் ஆகி வெளியேறியது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜேஸன் பெஹரன்ஹாப் ஆகியோர் தங்களது இடதுகை ஸ்விங் பந்துவீச்சு மூலம் இங்கிலாந்து பேட்டிங்கை சிதைத்தனர், அத்துடன் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் இந்த சவாலான மைதானத்தில் தங்களது சிறப்பான பேட்டிங் பங்களிப்பை அளித்தனர்.

இதன் மூலம் ஒரு அணியின் கட்டமைப்பு முழுவதும் நொறுக்கப்பட்டது.

எந்த இடத்தில் தவறு நடந்தது?

தொடரின் ஆரம்பத்தில் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளதாக திகழ்ந்தது இங்கிலாந்து அணி, அத்துடன் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முண்ணணி அணிகளுள் முதல் அணியாகவும் திகழ்ந்தது. ஆனால் இங்கிலாந்து வெல்ல வேண்டும் என்ற போட்டியில் வெல்லாமல் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இரு தொடர் தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்துள்ள இங்கிலாந்தை பற்றிய வருத்தங்கள் ரசிகர்களுக்கு ஓய்ந்த பாடில்லை.

இலங்கை அணிக்கு எதிராக நிலைத்து விளையாட வேண்டிய இடத்தில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது இங்கிலாந்து. இயான் மோர்கன் மற்றும் ஜோ ரூட் போன்ற பொறுப்பான பேட்ஸ்மேன்களும் கூட ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினர். இப்போட்டியில் செய்த அதே தவறை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் செய்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் சொதப்பினார்கள்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்திறனை சரியாகத்தான் வெளிபடுத்தி வருகிறார்கள், கடந்த காலங்களில் வெளிபடுத்திய அதே சிறப்பான ஆட்டங்களைத்தான் தற்போதும் வெளிபடுத்துகின்றனர். ஆனால் போட்டியில் நெருக்கடியை சமாளிக்கத் தவறுகின்றனர். பென் ஸ்டோக்ஸ் மட்டுமே ஆட்டத்தின் பொறுப்புணர்ந்து விளையாடுகிறார்.

ஜோஃப்ரா ஆர்சரின் பௌலிங் மிகவும் அற்புதமாக அனைத்து போட்டிகளிலும் உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடுகளம் நன்றாகவே அவருக்கு உதவியது. இப்போட்டியில் தொடக்க பௌலர்கள் ஷார்ட் பந்தை வீசியது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. ஸ்விங் பந்துவீச்சை வெளிகொணர தவறினர்.

சிறப்பான ஃபீல்டிங்கை கொண்ட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் கடுமையாக சொதப்பியது. இதனையெல்லாம் காணும் போது ஒரே நிகழ்வு தான் நியாபகம் வருகிறது. உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த இங்கிலாந்து அணி சொதப்புவது பெரும் வருத்தத்தையும் சந்தேகத்தையும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ஜேஸன் ராயின் காயம் அந்த அணிக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது இதன்மூலம் நமக்கு தெரிகிறது. இருப்பினும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமையுள்ள 11 வீரர்களைத்தான இங்கிலாந்து தேர்வு செய்து களமிறக்கியது. பல வருட கடும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இங்கிலாந்து இவ்வாறு சொதப்பியது அந்த அணிக்கு நம்பிக்கையை குலைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த தோல்விகளின் மூலம் கேப்டன் இயான் மோர்கன் கடும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

"தற்போதுள்ள சூழ்நிலையிலிருந்து மீண்டு வெளிவருவோம்" என ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி முடிவில் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

"இங்கிலாந்து தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணிகளாக நிகழும் இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இரு தொடர் தோல்வி இங்கிலாந்து மனநிலையை வெகுவாக பாதித்திருக்குமா ? இங்கிலாந்தின் ஆட்டத்திறன் திரும்புமா ? காலம் மட்டுமே இதற்கு பதில் சொல்லும்.

Quick Links

Edited by Fambeat Tamil