தங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 3 பௌலர்கள்

Mohammad Amir recently announced retirement from Test cricket
Mohammad Amir recently announced retirement from Test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போழுதும் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டுமே அனல் பறக்கும் விதமாக இருக்கும். மற்ற இருவகை கிரிக்கெட் போட்டிகளான ஓடிஐ/டி20-யானது பேட்டிங் அல்லது பௌலிங் என இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே சாதகமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் பௌலர்களிடம் மிகவும் பணிந்து நடப்பர். இந்த வகை கிரிக்கெட்டில் பெரும்பாலான ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களை விட பௌலர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். ஆகஸ்ட் 1 அன்று தொடங்க உள்ள டெஸ்ட் சேம்பியன் ஷீப்பிற்காக கிரிக்கெட் வீரர்கள் தங்களை ஓடிஐ கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக மாற்றி வருகின்றனர்.

டெஸ்ட் சேம்பியன் ஷீப்பில் உலகில் உள்ள தலைசிறந்த பௌலர்கள் தங்கள் அணிக்காக வெற்றி வாய்ப்பை தேடும் முயற்சியில் களமிறங்குவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். சமீபத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக அசத்தி வருகிறது. இதற்கு காரணம் அந்த அணியின் வலிமையான பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிபடுத்துவதே காரணமாகும். இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வருகின்றனர். இதற்கு காரணமாகவும் அந்தந்த அணிகளின் பௌலிங் வலிமையே காரணமாகும். ஆனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சீரன ஆட்டத்தை வெளிபடுத்த தவறுகின்றனர். இதற்கு காரணம் அந்த அணிகளில் டெஸ்ட் வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதும் ஒரு காரணமாகும். இந்த இளம் வயது ஓய்வினால் அவர்கள் அளவிற்கு திறமை கொண்ட வீரர்களை மீண்டும் அணிக்கு கொண்டு வர அந்த அணி நிர்வாகம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது. நாம் இங்கு தங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 3 பௌலர்களைப் பற்றி காண்போம்.

#3 ஜாஃபேர் அன்சாரி

Zafar Ansari
Zafar Ansari

ஜாஃபேர் அன்சாரி முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். இவர் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் கடைநிலையில் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர். இவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரகல் சர்ரே அணிக்காக 2010 முதல் 2017 வரை 71 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 128 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் கடைநிலையில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி அசத்தியுள்ளார். இவர் மழையின் காரணமாக கைவிடப்பட்ட அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். எதிர்பாராத விதமாக இதுவே அவரது கடைசி சர்வதேச ஓடிஐ-ஆகவும் அமைந்தது.

இங்கிலாந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடிய போது ஜாஃபேர் அன்சாரி அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அச்சமயத்தில் இவருக்கு ஏற்பட்ட காயத்தினால் அத்தொடரில் விளையாட இயலவில்லை. இறுதியாக வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த போட்டியில் இரு விக்கெட்கள் மற்றும் 13 ரன்களை அடித்தார். அதன்பின் இந்தியாவிற்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஜாஃபேர் அன்சாரி இடம்பெற்றிருந்தார். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அஜீன்க்யா ரகானேவை முதல் இன்னிங்சிலும், ரவிச்சந்திரன் அஸ்வினை இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜாஃபேர் அன்சாரியால் வீழ்த்தப்பட்டனர். முதுகுவலியினால் அதன்பின் இத்தொடரிலிருந்து விலகினார். அதன்பின் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட இவர் பங்கேற்கவில்லை. ஏப்ரல் 2017 அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அப்பொழுது ஜாஃபேர் அன்சாரியின் வயது 25.

#2 முகமது அமீர்

Mohammad Amir
Mohammad Amir

பாகிஸ்தான் அணி எப்பொழுதும் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை தன்னிடத்தில் கொண்டிருக்கும். வாஷீம் அக்ரம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோரை இதற்கு சான்றாக நாம் கூறலாம். இந்த வரிசையில் தற்காலத்தில் பாகிஸ்தான் அணியில் வலம் வந்தவர் முகமது அமீர். இவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஷீம் அக்ரமினால் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவர் ஆவார். இதன்மூலம் 19-வயதிற்கு உட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டதால் 2009ல் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். இத்தொடரில் பாகிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் முகமது அமீர் பங்கேற்றிருந்தார்‌. 2009 டி20 உலகக்கோப்பையையும் பாகிஸ்தான் கைப்பற்றியது. இவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இப்போட்டியில் முகமது அமீர் இலங்கை அணியின் மிகப்பெரிய பேட்டிங் ஜாம்பவான்களான குமார் சங்கக்காரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்‌.

இதே ஆட்டத்திறனை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் முகமது அமீர் வெளிபடுத்தினார். 2010ல் இங்கிலாந்து மண்ணில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் பௌலர் முகமது அமீர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இவர் சூதாட்ட புகாரில் சிக்கிய காரணத்தால் 5 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார். 5வருட தடைக்குப் பின்னர் 2016ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வந்தார். இந்த சமயத்தில் தன்னை சிறந்த வீரராக நிறுபிக்கும் வேண்டும் என்ற கட்டாயத்தில் முகமது அமீர் இருந்தார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தலா இரு டெஸ்ட் போட்டிகளில் முகமது அமீர் பங்கேற்றார். முகமது அமீரின் சொந்த காரணங்களுக்காக தனது 27 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் மொத்தமாக 30.40 சராசரியுடன் 119 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

#1 லாசித் மலிங்கா

Lasith Malinga
Lasith Malinga

கடைசி ஓவரில் எதிரணி வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்படும் போது தொடர்ந்து சரியான யார்க்கரை வீசி தன்னுடைய அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தரக்கூடிய பௌலராக லாசித் மலிங்கா திகழ்வார். தற்போதைய தலைமுறையின் சிறந்த டெத் ஓவர் பௌலராக லாசித் மலிங்கா திகழ்கிறார். இவரது அன்ஆர்தோடாக்ஸ் பௌலிங்கின் மூலம் தனிதிறமை கொண்டு கிரிக்கெட் உலகில் வலம் வந்தார். 2004ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை டெஸ்ட் அணியில் தனது இடத்தை உறுதிபடுத்திக் கொண்டார். இதற்கு காரணம் அவரது வேகம் மற்றும் ஆடுகளத்தில் அவர் உருவாக்கும் கூடுதல் பவுண்ஸ். லாசித் மலிங்காவிற்கு 2006ல் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சிறப்பாக அமைந்து பெரும்பாலான இளம் வீரர்களுக்கு முன் மாதிரியாக மாறினார்.

இதன்மூலம் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக லாசித் மலிங்கா வலம் வந்தார். அதே சமயத்தில் இலங்கை அணியின் டி20 மற்றும் ஓடிஐ கிரிக்கெட் அணியின் முன்னணி பௌலராகவும் லாசித் மலிங்கா இருந்தார். குறிப்பிட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் வகைகளில் சிறந்து விளங்கிய லாசித் மலிங்கா, தனது உடல் தகுதியை சரியாக கடைபிடிக்கவும், ஓடிஐ மற்றும் டி20 கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தும் நோக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அச்சமயத்தில் மலிங்காவின் வயது 28 ஆகும். 30 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் 101 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.