உலகக்கோப்பையை 'தவறவிட்ட' மூன்று நிகழ்வுகள் 

Steve Waugh
Steve Waugh

பொதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் போட்டியில் கேட்ச் மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்பர். ஓரிரு கேட்சுகளை தவறவிட்டாலும் போட்டியை தவற விடுவது போன்றதாகும். இவற்றின் காரணமாகவே அனைத்து அணிகளும் பீல்டிங் பயிற்சியாளரை நியமித்துள்ளது.

1990களிலிருந்து கிரிக்கெட் போட்டியை காணும் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக நினைவு இருக்கும், ஸ்டீவ் வாக் கிப்ஸ் இடம் எளிதான கேட்சை தவறவிட்ட உடன் இதைக் கூறினார் "நீங்கள் உலகக்கோப்பையை தவறவிட்டீர்கள்".

இருப்பினும் உலககோப்பை முடிந்து சில நாட்களில் ஸ்டீவ் வாக், நான் அப்படி எதுவும் சொல்லவில்லை இது தவறான செய்தி என்று கூறினார், ஆனாலும் இன்றைய போட்டிகளிலும் இவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதே போல் சில முறை சில வீரர்களால் அவர்களது அணிக்கு இவ்வாறு நிகழ்ந்துள்ளன. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இவற்றில் காணலாம்.

1.கிப்ஸ்

உலகக் கோப்பை 1999 - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - சூப்பர் சிக்ஸ் போட்டி - பிர்மிங்காம்)

அன்றைய தினத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு நாயகனாக இருந்திருப்பார் கிப்ஸ், ஆனால் அந்த கேட்சை தவறவிட்டதன் மூலம் இவர் முதல் இன்னிங்சில் 101* ரன்களை குவித்தும் ஆஸ்திரேலியாவின் நாயகனாக மாறினார். ஆஸ்திரேலியா இன்னிங்சில் 31 வது ஓவரில் ஸ்டீவ் வாக் 56 ரன்கள் குவித்த நிலையில் இவரது கேட்சை தவறிவிட்டார் கிப்ஸ்.

இதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை நொறுக்கிய ஸ்டீவ் வாக் 115 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். கிப்ஸ் எளிதான கேட்சை தன்வசப்படுத்தி இருந்தால் ஸ்டீவ் வாக்கின் ஆட்டத்தைப் பற்றிய பேச்சு இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

அன்றைய ஆட்டத்தில் கிப்ஸ் கேட்ச்சை பிடித்ததும் அவர் உணர்ச்சி வசத்தில் பந்தை வானத்தை நோக்கி எரிந்தார் அப்பொழுது அவரின் கைகளில் இருந்து பந்து தப்பின.

2. டுமினி மற்றும் பெபெஹர்டியன்

( உலகக் கோப்பை 2015 - அரையிறுதி 1 - ஆக்லாந்து - ஆஸ்திரேலியா vs தென் ஆப்ரிக்கா)

Duminy and Behardien
Duminy and Behardien

நீங்கள் உலகக் கோப்பையை பற்றி சோகமான கட்டுரைகளைப் படித்தால் அவற்றில் மீண்டும் மீண்டும் இடம் பெறக்கூடிய ஒரே அணி தென் ஆப்பிரிக்கா. கிப்ஸ் உணர்ச்சிவசத்தால் தவறவிட்டார் என்றால் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பெஹர்டியன் விரக்தியில் தவறிவிட்டார் என்று நன்றாக தெரிகின்றது.

எலியாட் 75 ரன்களில் களத்தில் இருந்த பொழுது பெஹர்டியனிற்க்கு கேட்ச் வாய்ப்பு ஏற்பட்டது, இவற்றை எளிதாக பிடிக்கும் தருணத்தில் டுமினி ஃபைன் லெக் திசையிலிருந்து ஓடி வந்தார், இருவரும் தனக்கான கேட்ச் என்று கூறாமல் இருவரும் மோதி கீழே விழுந்தனர், இதன் மூலம் கேட்ச் வாய்ப்பு பறிபோனது. வாய்ப்பு பெற்ற எலியாட் நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

அந்த கேட்சை பிடித்திருந்தால், நியூசிலாந்து அணி 284/7 எனவும் கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவை என்ற வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா இருந்திருக்கலாம். அணியின் சிறந்த வேக பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் கடைசி ஓவர் வீசுவதால் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் உலகக் கோப்பை இறுதி போட்டியை அடைந்திருக்கலாம்.

3. நுவான் குகுலசேகரா

(உலகக் கோப்பை 2011 - இறுதிப் போட்டி - இந்தியா vs இலங்கை - மும்பை)

Nuwan Kulasekara
Nuwan Kulasekara

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் கெளதம் கம்பீர் அதிக ரன்களை விளாசினர். இவர் 122 பந்துகளில் 97 ரன்களை குவித்தார், 30 ரன்களில் இருக்கும் பொழுது நுவான் குலசேகராவிடம் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார் இருப்பினும் அதை தவறவிட்டா் குலசேகரா.

கெளதம் கம்பீர் பவுண்டரி அடிக்க முயன்ற பொழுது பந்து நுவான் குலசேகராவின் இடத்திற்கு மிக அருகில் சென்றன, கேட்சையைப் பிடிக்க தனது இடத்திலிருந்து சற்று முன்னால் ஓடி வந்த குலசேகரா பந்தை பிடிக்க கீழே விழுந்தும் கேட்சை தவறவிட்டா்.

இதன் பின்பு கம்பீர் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் 250 ரங்களுக்கு மேல் இலக்கை அடைந்து வெற்றி முதல் அணி என்ற பெருமையை பெற்றது. குலசேகரா அந்த கேட்சை பிடித்திருந்தால் இந்திய அணி 68/3 இந்த நிலையில் இருந்திருக்கும், அதுமட்டுமின்றி சச்சின்,சேவாக் மற்றும் கம்பீர் ஆகிய மூவரும் வெளியேறி இருப்பார்கள், இதன் மூலம் இறுதிப் போட்டியை இலங்கை அணி வென்று இருக்கலாம்.

70 ரன்களுக்குள் இந்தியா அணியின் மூன்று முன்னணி பேட்ஸ்மென்கள் வெளியேறி இருந்தால் அது இந்தியா அணி ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவே அமைந்திருக்கும் என்பது உறுதி. குலசேகரா கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட கெளதம் கம்பீர், விராட் கோலியுடன் கைகோர்த்து வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார்.

Quick Links