ஐசிசி மீண்டும் நடத்தவேண்டிய கைவிடப்பட்ட 3 தொடர்கள்

With the ICC taking various steps to increase the fan base, let's look at 3 discontinued tournaments which can now be re-introduced.
With the ICC taking various steps to increase the fan base, let's look at 3 discontinued tournaments which can now be re-introduced.

கிரிக்கெட் விளையாட்டிற்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இருப்பினும், ரசிகர்களின் பட்டாளத்தை மேலும் அதிகரிக்க ஐசிசி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த காலங்களில் கைவிட்ட மூன்று தொடர்களை பரிசீலனை செய்து மீண்டும் ஐசிசி நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன். அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் கிரிக்கெட், இரண்டாவது இடத்தில் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டிற்கென சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட நாடுகள் குறைவே. கால்பந்துக்கான உலக கோப்பையில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்றன.

ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்க, ஐசிசி உலக கிரிக்கெட் லீக் போட்டிகளை பல்வேறு நாடுகளில் நடத்தியுள்ளது. 93 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. சிறப்பாக விளையாடும் அணி ஐசிசி-ஆல் அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றது. ஆப்கானிஸ்தான் அணி இதற்கான சிறந்த உதாரணமாகும். ஐசிசி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தொடங்கியுள்ளது. மீண்டும் பரிசீலனை செய்து, ஐசிசி நடத்தவிருக்கும் மூன்று தொடர்களை குறித்து இத்தொகுப்பில் காண்போம்.

#1.ஐசிசி சூப்பர் சீரியஸ்:

Australia won the series in 2005
Australia won the series in 2005

1992 முதல் 2005ம் ஆண்டு வரை சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியா அணி இழந்தது இல்லை. 1999 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி, எவரும் வீழ்த்த முடியாத அணியாக பார்க்கப்பட்டது. இதனால் ஐசிசி சூப்பர் சீரியஸ் என்னும் தொடரை உருவாக்கியது. இத்தொடரில் மற்ற அணிகளைச் சேர்ந்த 11 வீரர்கள் ஒரு அணியாக(வேர்ல்ட் 11) சேர்ந்து, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட வேண்டும். இதனை ஐசிசி நிர்வாகிகளும் ரசிகர்களும் பெரிதும் வரவேற்றனர். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்தொடரை தொடங்கினர். மேலும், இத்தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புள்ளி பட்டியல் முதலிடம் வகிக்கும் அணியுடன், வேர்ல்ட் 11 எதிர்த்து விளையாட வேண்டும் என ஐசிசி அறிவித்தது.

இத்தொடரில் நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது. ரசிகர்களின் கூட்டம் குறைந்ததாலும், இத்தொடர் ஒருதலைப்பட்சமாக அமைந்தாலும், ஐசிசி இத்தொடரை கைவிட்டது.

#2. ஆப்ரோ-ஆசிய கோப்பை:

MS Dhoni and Mahela Jayawardene stitched together a 218-run partnership in the 2007 Afro-Asia Cup
MS Dhoni and Mahela Jayawardene stitched together a 218-run partnership in the 2007 Afro-Asia Cup

இந்த தொடரில் ஆசியாவை சேர்ந்த சிறந்த 11 வீரர்கள் ஒரு அணியாகவும் (ஆசிய 11) ஆபிரிக்காவை சேர்ந்த சிறந்த 11 வீரர்கள் ஒரு அணியாகவும் (ஆப்பிரிக்கா 11) இருப்பர். இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றிற்கு நிதி திரட்டவே போட்டிகள் நடைபெற்றது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெற்காசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டவும் இத்தொடர் உதவியது.

இத்தொடர் முதலில் 2005 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று மற்றொரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, ஆதலால் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. 2007ஆம் ஆண்டு நடந்த தொடரில் ஆசிய 11 அணி, 3-0 என்ன தொடரை வென்றது. இத்தொடரில் 1892 ரன்கள் அடிக்கப்பட்டது .இதுவே 2017ஆம் ஆண்டு வரை , 3 போட்டிகள் கொண்ட தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.

ஒளிபரப்பாளர்கள் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மூன்றாவது தொடர் கைவிடப்பட்டது. இத்தொடரை அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் நடத்த ஐசிசி முயன்று வருகிறது.

#3. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிகள்:

An amount of 6 Million USD was the prize pool, with the winners getting 2.5 Million USD.
An amount of 6 Million USD was the prize pool, with the winners getting 2.5 Million USD.

2007-இல் நடந்த உலக கோப்பை டி20 போட்டிகள் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உள்ளூர் டி20 தொடர்களை நடத்த தொடங்கின. தொடரின் மொத்த பரிசுத் தொகை 6 மில்லியன் அமெரிக்க டாலர்கலாகும். தொடரில் வெற்றி பெறும் அணி 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெறும். இதனால் லீக் போட்டிகளை நடத்தும் அமைப்பாளர்கள் பெறும் லாபம் அடைந்தனர். ஆனால், ரசிகர்களின் கூட்டம் குறையத் தொடங்கியதால் ஆறு ஆண்டுகளுக்குப் பின் இத்தொடர்கள் கைவிடப்பட்டன.ஐபிஎல் தொடர் மட்டும் சிறந்த முறையில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற தொடர்கள் இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பெரிதும் உதவியது. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதால் பொல்லார்டு, சுனில் நரேன், கிரிஸ் மோரிஸ், போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

சாமுவேல் பத்ரி, பொல்லார்ட், சுனில் நரேன் போன்ற வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தனர்.‌ இது போன்ற தொடர்கள், இளம்வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவிகரமாக இருக்கும். ரசிகர்களின் நீண்ட கால தாகத்தினை தீர்க்க்இந்த மூன்று தொடர்களை மீண்டும் நடத்த ஐசிசி பரீசீலித்து வருகின்றது.