ஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை கையாண்ட இந்தியர்கள்

Pathan initially started as a genuine bowler 
Pathan initially started as a genuine bowler 

நீங்கள் சிறு வயதில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு ஆட்டத்தின் இரு தொடக்கம் ஓவர்களையும் கையாண்டது உண்டா? அப்படி இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இவ்வாறே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களும் கூட ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கண்டதில்லை. இத்தகைய அரிய சாதனையை புரிந்த வீரர்கள் வெகு சிலரே. அணியில் பன்முகத்தன்மை கொண்ட சிறந்த ஆல்ரவுண்டர்கள் மட்டுமே இத்தகைய அரிய வகை சாதனையை புரிந்துள்ளனர். அவர்கள் மட்டுமல்லாது, சிலநேரங்களில் பகுதிநேர பந்துவீச்சாளராக உருவெடுக்கும் தொடக்க பேட்ஸ்மேன்களும் கூட இவ்வகை சாதனைகளை கிரிக்கெட் உலகில் அரங்கேற்றியுள்ளனர். எனவே, ஒரே ஒரு நாள் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடக்க ஓவர்களை கையாண்ட 5 இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.

#5.ரோஜர்ஸ் பின்னி:

Roger Binny
Roger Binny

ஸ்விங் வகை பந்து வீச்சிற்கு பெயர் போன ரோஜர்ஸ் பின்னி, இதுவரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 77 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் நன்கு எடுபடும் இவரது ஸ்விங் வகை பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்துள்ளது. இவர் வெறும் இரு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டுள்ளார். அதுவும் 1980-81 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரு ஒரு நாள் போட்டிகளில் இவர் ஆட்டத்தின் தொடக்கம் பேட்ஸ்மேன் ஆகவும் இன்னிங்சை தொடங்கி, பந்துவீச்சாளராகவும் திகழ்ந்துள்ளார். முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் முறையே பேட்டிங்கில் 31 மற்றும் 27 ரன்களை குவித்துள்ளார். அந்த இரு போட்டிகளிலும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உடன் இணைந்து பேட்டிங்கை துவங்கினார், பின்னி. துரதிஷ்டவசமாக அந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு ரோஜர் பின்னி முக்கிய காரணமாய் விளங்கினார்.

#4.மனோஜ் பிரபாகர்:

Manoj Prabhakar
Manoj Prabhakar

1990களில் தொடக்கத்தில் இந்திய அணியின் நிரந்தர வீரரான மனோஜ் பிரபாகர், தனது பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த கூடியதாகவும் திகழ்ந்துள்ளார். அதுவும் குறிப்பாக, புதிய பந்தில் ஸ்விங் தாக்குதலை தொடுத்துள்ளார். இதுவரை இவர் விளையாடியுள்ள 130 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இவர் வெறும் பந்துவீச்சாளர் மட்டுமின்றி, அணிக்கு ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் திறந்துள்ளார். பேட்டிங்கில் 11 அரை சதங்களையும் 2 சதங்களையும் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோராக 106 ரன்கள் பதிவாகியுள்ளது. பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ள மனோஜ் பிரபாகர், இந்திய அணிக்கு தொடக்க பேட்ஸ்மேனாகவும் களமிறக்கப்பட்டு வெற்றி கண்டுள்ளார். ஒட்டு மொத்தமாக 45 ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடக்க ஓவர்களை கையாண்டுள்ளார். மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டமையால் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக இவரது ஒருநாள் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

#3.இர்பான் பதான்:

Irfan Pathan 
Irfan Pathan

2003-ம் ஆண்டு தமது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய இர்பான் பதான், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தேவையை பூர்த்தி செய்தார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இர்பான் பதான், அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவும் அறியப்பட்டார். தமது பந்துவீச்சில் ஸ்விங் முறையை மேற்கொளும் இர்பான், ஒருமுறை ஆட்டத்தின் தொடக்கம் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். இருப்பினும், அக்காலகட்டத்தில் இந்திய அணியை தமது பயிற்சியின் கீழ் வழிநடத்திய சேப்பல், இவரின் அசாத்திய திறமையை பயன்படுத்த தவறிவிட்டார். பேட்டிங்கில் மூன்றாம் இடத்திலும் கூட களமிறங்கி மறக்க முடியாத அளவிற்கு சில இன்னிங்சை தொடுத்துள்ளார், இர்ஃபான். 2005-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட இர்பான், விரைவிலேயே ஆட்டம் இழந்ததால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆல்-ரவுண்டராக உருவெடுத்த நேரத்தில் சற்று வீழ்ச்சி கண்ட இர்பான் பதானின் கிரிக்கெட் வாழ்க்கை நிலையற்றதாக மாறியது. இறுதியாக 2012-ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இவர் களம் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2.விரேந்திர சேவாக்:

 Virender Sehwag 
Virender Sehwag

தமது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர் பணியை மேற்கொண்டா சேவாக், இந்திய அணியின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் இல்லாத காரணத்தினால் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடிக்கடி விரேந்திர சேவாக்கை பந்துவீச செய்துள்ளனர். 2005-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் நான்காம் ஆட்டத்தில் இரு வலதுகை தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டு களம் இறங்கியது, ஆஸ்திரேலியா. கில்கிறிஸ்ட் மற்றும் ஹெய்டன் ஆகியோரின் தொடக்க கூட்டணியை உடைக்க இந்திய கேப்டன் டிராவிட் சுழற்பந்து வீச்சாளரான விரேந்திர சேவாக் இன்னிங்சில் தொடக்க ஓவரிலேயே பந்துவீச பணித்தார். இருப்பினும், டிராவிட்டின் முயற்சி தோல்வி கண்டது. பேட்டிங்கிலும் தொடக்கம் கண்ட விரேந்திர சேவாக் ரன்கள் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விரேந்தர் சேவாக் ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் ஓவர்களை கையாள்வது அதுவே முதல் மற்றும் கடைசி முறையாகவும் அமைந்தது.

#1.கபில்தேவ்:

Kapil Dev
Kapil Dev

இந்திய அணியின் அனைத்து கால சிறந்த ஆல்ரவுண்டர் என்று வர்ணிக்கப்படும் கபில்தேவ், பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் தனி ஒரு ஆளாக நின்று பலமுறை அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். பேட்டிங்கில் லோவர் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் இவர், சில அற்புத இன்னிங்ஸ்களை அளித்துள்ளார். பெரும்பாலான ஒருநாள் போட்டிகளில் 7வது இடத்திலேயே பேட்டிங் கண்டுள்ள கபில்தேவ், சிலமுறை டாப் ஆர்டர்களிலும் களமிறக்கப்பட்டுள்ளார். 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் ஸ்ரீகாந்துடன் இணைந்து தொடக்கம் கண்டார், கபில்தேவ். மலைக்கவைக்கும் சிக்சருடன் அமர்க்களப்படுத்திய கபில்தேவ், துரதிஷ்டவசமான 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆடும் லெவனில் இணைக்கப்பட்டு பேட்டிங்கில் நான்காம் கள வீரராக இறங்கி 81 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்க்சில் முதல் ஓவரை வீசிய கபில்தேவ் 4 ஓவர்களை மிகச்சிக்கனமாக வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மழை குறுக்கிட்டமையால் இந்திய அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Quick Links

Edited by Fambeat Tamil