3டி பார்வையில் அம்பத்தி ராயுடு கடந்து வந்த பாதை 

Ambati Rayudu announced his retirement from international cricket today
Ambati Rayudu announced his retirement from international cricket today

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தகுந்த நம்பிக்கையுடனும் பக்குவத்துடனும் ஆந்திராவிலிருந்து கிரிக்கெட் களத்திற்கு கிளம்பினார், ஒரு இளம் வீரர். தமது பல அபாரம் ஆட்டங்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர், இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என பலரும் நினைத்த வேளையில், தொடர்ந்து இந்திய சீனியர் அணியில் இடம்பிடிக்க தவறினார். தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக கிரிக்கெட் களத்தில் பல்வேறு பரிணாமங்களில் விளையாடிய இவர், இறுதியாக 2019 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இவருக்கு மாறாக ஒரு 3டி வடிவங்களில் செயல்படும் மாற்று வீரர் அணியில் அறிவிக்கப்பட்டார். ஏன் இவருக்கு பதிலாக ஒரு புதிய ஆல்ரவுண்டர் இடம் பெற்றார் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் இந்திய தேர்வு குழுவினரை விமர்சித்தனர். உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காயம் காரணமாக அந்த 3டி வீரரும் விலகி அவருக்கு பதிலாக வேறொரு பேட்ஸ்மேன் தற்போது அணியில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்று ஏமாற்றம் அடைந்த பின்னர், ஒருவழியாக அனைத்துத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்து தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், இந்த வீரர். ஆம்! நான் கூறுவது அனைத்தும் அம்பத்தி ராயுடுவின் இந்த எதிர்பாராத முடிவை பற்றி தான். எனவே, தனது வாழ்வில் சந்தித்த பல ஏற்றத்தாழ்வுகளை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.

Rayudu was touted for greatness at a young age Enter caption
Rayudu was touted for greatness at a young age Enter caption

2002-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தால் 177 ரன்கள் குவித்து எதிரணியை மிரள வைத்தார். அதற்கடுத்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 698 ரன்களைக் குவித்து ஒட்டுமொத்த சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீர்ர்களில் மூன்றாமிடம் பிடித்து பெருமையும் பெற்றார், இந்த இளம் வீரர். அந்த சீசனில் ஒரே போட்டியில் ஒரு சதம், ஒரு இரட்டை சதம் என மொத்தம் இரு சதங்களை அடித்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். சில வருடங்களுக்குப் பின்னர், நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், ஆர்.பி.சிங், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் அந்த அணியில் இடம் பெற்றார், அம்பத்தி ராயுடு. தற்போது சர்வதேச போட்டிகளில் கொடிகட்டிப் பறக்கும் இவர்களுக்கு கேப்டனாகவும் அந்தத் தொடரை வழிநடத்தினார், அம்பத்தி ராயுடு. தொடரை ஓரளவுக்கு வழிநடத்தி தனது பேட்டிங் சராசரியை 24.83 என்றவகையில் கட்டமைத்தார். இருப்பினும், களத்தில் தனது கோபத்தினை வெளி காட்டியதால், முக்கியமான பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் சரமாரியாக இவரை விமர்சித்தனர். இருப்பினும், களத்திற்கு திரும்பி போதிய பாரம் உடன் விளங்கிய இவர் சில அரசியல் சூழ்ச்சிகளாலும் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

Rayudu played for the Mumbai Indians after returning from the ICL
Rayudu played for the Mumbai Indians after returning from the ICL

தமது 22 ஆவது வயதிலேயே போதிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இவர், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராகிய போது சற்று அதிர்ச்சி அளிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் இவர் விளையாட நேர்ந்தது. தலைசிறந்த எதிரிகளுக்கு எதிராக விளையாடி அற்புதமான சில இன்னிங்ஸ்களை அளித்தார். இருப்பினும், இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் மீண்டும் ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டது. 2009ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் 79 இந்திய வீரர்களை தெரிந்தெடுத்து உள்ளூர் அளவிலான போட்டியில் விளையாட செய்தது. எதிர்பார்த்த வகையில் இல்லாமல் மீண்டும் ஐதராபாத் அணிக்கு விளையாட தொடங்கினார், அம்பத்தி ராயுடு. அதன் பின்னர், உலகின் மிகப்பெரிய டி20 தொடரின் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று தமது ஆட்டத்திறனை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். இதனால் பல கோடி ரசிகர்களின் மனதை வென்றார். ஒருவழியாக இவரது உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச அறிமுகம் கண்டார். அதோடு மட்டுமல்லாமல், 2014-ம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்றிருந்தார். அதில் இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்து தனது ஆட்டத்திறனை நிரூபித்தார்.

Rayudu was left out of the Indian World Cup squad
Rayudu was left out of the Indian World Cup squad

2015 உலகக் கோப்பை தொடரில் இவர் இடம்பெற்ற போதிலும் ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இருப்பினும், நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 602 ரன்களைக் குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார். இதன்மூலம், மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். சில வாரம் இடைவெளியிலேயே மீண்டும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார், அம்பத்தி ராயுடு. எனவே, இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு தேடுதலுக்கு உள்ளான நான்காமிடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்பட்டார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு முழுவதும் இவர் அணியில் இடம் பெற்று இருந்தாலும் நடப்பாண்டில் இந்தியா விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் சோபிக்க தவறினார். இவரின் பார்ம் கேள்விக்குறியானதன் பேரில், 15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவர் புறக்கணிக்கப்பட்டார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் இவரது செயல்பாடுகள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தன. இருப்பினும், அணியின் காத்திருப்பு வீரராக இவர் அறிவிக்கப்பட்டார். உலக கோப்பை தொடரில் இவருக்கு பதிலாக இடம்பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயம் அடைந்து தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இடம்பெற்றது அம்பத்தி ராயுடுவின் ரசிகர்களுக்கு மேலும் கோபத்தைக் கிளப்பியது.

எவரும் எதிர்பார்த்திராத வகையில், இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி தனது ஓய்வு கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி அதிர்ச்சியளித்தார், அம்பத்தி ராயுடு. இத்தகைய எதிர்பாராத நிகழ்வு கிரிக்கெட் உலகில் இன்று பேசும் பொருளானது இது மட்டுமல்லாமல் இன்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அம்பத்தி ராயுடு வை தங்களது அணியில் இணையுமாறு உதவிக்கரம் நீட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Quick Links