இந்தியாவின் அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாடுவாரா?

India may have to face England without Bhuvneshwar Kumar, who was injured in their dominant win over Pakistan.
India may have to face England without Bhuvneshwar Kumar, who was injured in their dominant win over Pakistan.

நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 5-வது ஓவரை வீச வந்த ஒரு புவனேஸ்வர் குமார் 4 பந்துகளை வீசி வேளையில் இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இருப்பினும், நேற்றைய போட்டியில் தற்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ரோஹித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்து இருந்தது. அதன் பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து மழை வந்து ஆட்டத்தை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தப்பட்டது.

இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஏற்பட தசைப்பிடிப்பு காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் அவரது ஓவரை பூர்த்தி செய்தார். ஐந்தாவது ஓவரின் 5வது பந்தில் வீச முற்பட்ட விஜய் சங்கரின் முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தது. இந்திய அணியின் அடுத்த இரு ஆட்டங்களான ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கடுத்து விளையாடும் பலம் மிகுந்த இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ள போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை என்றால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான்.

"I'm happy playing that role for the team, the other guys are doing their role perfectly. It's going really nicely." - Kohli

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு புவனேஸ்வர் குமாரின் காயத்தை பற்றி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில்,

"பந்துவீச வந்தபோது தவறாக காலை வைத்ததனால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் பிடிப்பு. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள அவசியமில்லை. அவருக்கு சில காலம் ஓய்வு அளிக்க விரும்புகிறோம். இன்னும் சில போட்டிகளுக்கு பின்னர், அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை அப்படி இல்லை என்றால், அதிகபட்சமாக மூன்று போட்டிகள் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இவர் இந்திய அணியின் முக்கிய காரணியாக விளங்குவதால் விரைவிலேயே குணமடைவார் என நம்புகிறோம் எங்களுக்கு தற்போது முகமது சமி தயாராக உள்ளார். எனவே, நாங்கள் இது போன்ற சூழ்நிலைகளை பெரிதும் கவலைப்படுவதில்லை. பந்துவீச்சாளர்கள் தமது பொறுப்பினை அருமையாக செய்து இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். சிறிது காலம் ஓய்வுக்கு பின்னர், அவர் நிச்சயம் குணமடைவார்"

என்றார்.

நேற்றைய போட்டியில் 140 ரன்களை குவித்த ரோஹித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த நான்காவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதுமட்டுமல்லாது, ராகுலுடன் இணைந்து 136 ரன்களை முதல் விக்கெட்டை பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கினார், ரோகித் சர்மா.

மேலும், நேற்றைய போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 11000 ரன்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கரை விட 54 இன்னிங்சில் முன்னரே விராட் கோலி இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.

மேலும் விராட் கோலி கூறிய வார்த்தைகள்,

"முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது அருமையாக உள்ளது. ரோஹித் சர்மா தனியாளாக நின்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் ஆஸ்டிரேலியாவுக்கு எதிராகவும் தனது பேட்டிங் முயற்சியினை வெளிப்படுத்தியுள்ளார். 335 முதல் 350 ரன்களை எட்டுவதற்கு ரோகித் சர்மா போன்ற ஆட்டங்கள் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாகும். ரோகித் சர்மா உடன் இணைந்து ராகுலும் நல்லதொரு தொடக்கம் பார்ட்னர்ஷிப்பில் அமைத்தார். 75 ரன்களில் தாண்டிவிட்டால் ரோகித் சர்மா எவராலும் தடுக்க முடியாத வீரராக திகழ்கிறார். ஹர்திக் பாண்டியா தமது பொறுப்பினை உணர்ந்து அற்புதமாக விளையாடினார். இதன்மூலம், மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று வலுவடைந்துள்ளது. இது மாதிரி விளையாடுவது போதிய மகிழ்ச்சி அளிக்கின்றது. மற்ற வீரர்களும் தங்களது திறமையினை பயன்படுத்தி பொறுப்பாக விளையாடினர். இப்படியே தொடர்ந்தால் அற்புதமாக இருக்கும்".

தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஓய்வில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயத்தால் வெளியேறிய புவனேஷ்வர் குமார் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது. எனவே, இத்தகைய இன்னல்களையும் கடந்து இந்திய அணி இனிவரும் போட்டிகளில் தனது ஆதிக்கத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Quick Links

Edited by Fambeat Tamil