#3.ஹர்திக் பாண்டியா:
ஆட்டத்தை எந்நேரத்திலும் மாற்றக்கூடிய வீரராக சமீப நாட்களில் உருவெடுத்து வருகிறார், ஹர்திக் பாண்டியா. சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி மூன்றாண்டுகள் கடந்த நிலையில், 50 மற்றும் 20 ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், பாண்டியா. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பாக பங்காற்றிய யுவராஜ் சிங்கை போல இவரும் தனது ஆல்ரவுண்டு ஆட்டத்திறனை வெளிப்படுத்த உள்ளார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
#2. ஜஸ்பிரிட் பும்ரா:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் நம்பர்-1 பந்து வீச்சாளராக உள்ளார், ஜஸ்பிரிட் பும்ரா. இவர் இந்திய அணிக்கு அனைத்து தரப்பு போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடிய வண்ணம் வருகிறார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் உடன் இணைந்து தனது அபார பந்து வீச்சு தாக்குதல் எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லமை கொண்டவர். குறைந்த வேகப் பந்து மற்றும் யார்க்கர் பந்துகளால் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனை கூட தமது பந்துவீச்சால் வீழ்த்தி வருகிறார். இந்திய பந்துவீச்சில் முக்கிய தூணாக உள்ள இவர், மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லிலும் இவரது ஆட்டம் அபாரமாக உள்ளது.
#1.விராட் கோலி:
எந்த ஒரு சூழ்நிலையையும் கையாண்டு வெற்றி காண்பதில் சிறந்தவரான விராத் கோலி, அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறார். முதல் முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்த உள்ளார், விராத் கோலி. உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் சிறந்த ஃபில்டர் ஆகவும் திகழும் விராத் கோலி, மீண்டும் ஒரு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் மகேந்திர சிங் தோனிக்கு விருந்தளிக்கும் விதமாகவும் இம்முறை உலகக் கோப்பை தொடரை வென்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.