ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் அணியினைப் பொருத்தவரையில் சுழல்பந்து வீச்சு தான் அந்த அணியின் பலமாக கருதப்படும். ரஷீத் கான், முஜீப் ரகுமான் மற்றும் முகமது நபி என உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது அந்த அணி. அதுமட்டுமின்றி ரஷீத் கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் இன்றைய போட்டியை பொருத்தவரையில் இவர்கள் மூவரும் இணைந்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.
ரஷீத் கான்:
ரஷீத் கான் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சிறப்பாக பந்துவீசினாலும் இன்று இவரின் பந்து வீச்சு இங்கிலாந்து அணியிடம் எடுபடவில்லை. இன்று 9 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய இவர் 110 ரன்களை வாரி வழங்கிவிட்டார்.
இந்த போட்டியில் இவரது பந்து வீச்சில் மட்டும் 11 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார் இவர்.
அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர் 100-க்கும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுப்பது ஒருநாள் போட்டிகள் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
110 ரன்கள் இன்றைய போட்டியில் வழங்கியதன் மூலம் அதிக ரன்கள் வழங்கிய வீரரர் என்ற பட்டியலில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது இடத்தையும், உலககோப்பை வரலாற்றில் முதலிடத்தையும் பிடித்தார் இவர்.
இன்று இவரின் பந்து வீச்சை மட்டும் குறிப்பிட்டு விளாசினார் மோர்கன். அதாவது இவரின் பந்தில் மட்டும் 7 சிக்ஸர்கள் விளாசினார் அவர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் பந்து வீச்சாளரின் பந்தில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவே.