தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவங்கிய இங்கிலாந்து!!!

England v South Africa - ICC Cricket World Cup 2019
England v South Africa - ICC Cricket World Cup 2019

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலககோப்பை தொடரின் முதல் போட்டி இன்று இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இதில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான பியர்ஸ்டவ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர்.

England v South Africa - ICC Cricket World Cup 2019
England v South Africa - ICC Cricket World Cup 2019

ஆட்டத்தின் முதல் ஓவரை தென்னாப்ரிக்க அணியின் இம்ரான் தாகீர் வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டவ் ஆட்டமிழந்தார். இது இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்கினார். இருவரும் இணைந்து அணியின் சூழ்நிலை உணர்ந்து சிறப்பாக ஆடினர். அவ்வபோது கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகள் விளாசியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசி அசத்தினர். அரைசதத்தை கடந்த நிலையில் ராய் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஃபிக்லிவாயோ பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரூட்டும் அடுத்த ஓவரிலேயே ரபாடா பந்திற்கு இரையானார்.

England v South Africa - ICC Cricket World Cup 2019
England v South Africa - ICC Cricket World Cup 2019

அதன் பிறகு அணியின் கேப்டன் மோர்கன் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடத் துவங்கினர். தென்னாப்ரிக்க பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தனர். ரூட் மற்றும் ராய் ஜோடியைப் போன்றே இவர்களும் அடுத்தடுத்து அரைசதம் குவித்தனர். மோர்கன் 60 ரன்கள் குவித்த நிலையில் தாகீர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லர், மொயின் அலி மற்றும் ஓக்ஸ் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் ஸ்டோக்ஸ் ரன் வேட்டையில் ஈடுபட்டார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 89 ரன்னில் நிகிடி பந்தில் தன் விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. தென்னாப்ரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளும், தாகீர் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

England v South Africa - ICC Cricket World Cup 2019
England v South Africa - ICC Cricket World Cup 2019

பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்ரிக்க அணி களமிறங்கியது. டீ காக் மற்றும் ஆம்லா தென்னாப்ரிக்க அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆம்லா ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமாகி ரிடையர்டு ஆனார். எனவே அடுத்து களமிறங்கிய மார்க்ரம் 11 ரன்னிலும், கேப்டன் டூ பிளசிஸ் 5 ரன்னிலும் ஆர்ச்சர் பந்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய வான் டர் துஸ்ஸன் டீ காக் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தனர். அதிரடியாக ஆடிய டீ காக் 68 ரன்களில் இருந்தபோது ப்ளங்கட் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அரைசதம் அடித்த துஸ்ஸனும் ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.

England v South Africa - ICC Cricket World Cup 2019
England v South Africa - ICC Cricket World Cup 2019

அஅன் பின்னர் களமிறங்கிய எந்தவொரு வீரரும் நிலைத்து ஆடவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஒருகட்டத்தில் மீண்டும் வந்து களமிறங்கிய ஆம்லா அணியை காப்பாத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் வந்த வேகத்தில் தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் தென்னாப்ரிக்க அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்த போட்டியை இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டையும், ப்ளங்கட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் பேட்டிங் , பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்திய ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil