பின் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. வழக்கம் போல ராய் மற்றும் போர்ஸ்டோ துவக்க வீரர்களாக களமிறங்கினர். நியூசிலாந்தை போலவே இங்கிலாந்தும் ஆரம்பம் முதலே சரிவை சந்தித்தது. ராய் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஹேன்றி பந்தில் லாதம்-யிடம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய ரூட் பேர்ஸ்டோ உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 10 ஓவர்களை வரை நிலைத்து நின்றாலும் ரன்களை குவிக்க தடுமாறியது. இதன் முடிவில் ரூட் 7 ரன்களிலும், பேர்ஸ்டோ 36 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் மோர்கனும் 9 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் அணியின் நிலை உணர்ந்து சிறப்பாக ஆடினர். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடிய இருவரும் ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடத்துவங்கினர். சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். ஆனால் துர்தஷ்டவசமாக பட்லர் 59 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குயுசன் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்து வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இருந்தாலும் மறுமுனையில் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி அந்த அணிக்கு நம்பிக்கை சேர்த்தார். இறுதியில் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆடிய ஸ்டோக்ஸ் தனது அதிரடியால் 14 ரன்கள் குவித்து போட்டியை டிரா ஆக்கினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்திருந்தார். எனவே போட்டியின் முடிவினை காண சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது.
இதில் முதலில் களமிறங்கிய பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இணைந்து அந்த ஓவரில் 15 ரன்கள் குவித்தனர். பின்னர் 16 ரன்கள் எடுத்தால் உலககோப்பையை கைப்பற்றலாம் என்ற நோக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் நேஷம் மற்றும் கப்தில் களமிறக்கப்பட்டனர். அதிரடியாக ஆடிய நேஷம் 5 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் களத்திலிருந்த கப்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க போட்டி மீண்டும் சமனில் முடிந்தது. இருந்தாலும் பவுண்டரிகள் நியூசிலாந்தை காட்டிலும் இங்கிலாந்து அதிகமாக அடித்ததன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக இங்கிலாந்து அணி முதல் முறையாக உலககோப்பையை கைப்பற்றியது. சிறப்பாக ஆடி கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வாங்கித் தந்த ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்ந தெடர் முழுவதும் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடி 578 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார்.