மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை அணி!!

Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019
Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019

உலககோப்பை தொடரானது இங்கிலாந்து நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி கிட்டதட்ட லீக் சுற்று முடிவடையும் தருணத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்ரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தொடர் தோல்வி காரணமாக தங்களது அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி மட்டும் அரையிறுதி வாய்ப்பை உறுதி சேய்துள்ளது. அதுபோக இந்தியா, நியூசிலாந்து அணிகள் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுள் ஏதேனும் ஒரு அணி மட்டுமே தகுதி பெறும் நிலையில் உள்ளது. இந்த வேளையில் இன்று சீஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019
Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019

இதன் படி கருணத்னே மற்றும் குசால் பெரேரா அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து இலங்கை அணிக்கு நல்ல துவக்கத்தை தந்தனர். கருணத்னே நிதானமாக ஆட மறுமுனையில் குசால் பேரேரா அதிரடியாக ஆடினார். இதனால் ரன் வீதமானது குறையாமல் அதிகரித்து கொண்டே இருந்தது. கருணத்னே 32 ரன்களில் இருந்தபோது ஹோல்டர் பந்தில் ஹோப் இடம் கேட்ச் ஆனார். அதன் பின்னர் அவிஷ்கா பெர்னால்டோ களமிறங்கினர். இளம் வீரரான இவர் குசால் பெரேரா உடன் இணைந்து ஆடத் துவங்கினார். அரைசதத்தை கடந்த குசால் பெரேரா 64 ரன்களில் இருந்த போது ரன் அவுட் ஆனார்.

Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019
Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019

அடுத்து வந்த குசால் மெண்டிஸ் பெர்னால்டோ உடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தார். இந்த ஜோடி தேவைப்படும் பந்துகளை பவுண்டரிகளாக விளாசியும் அவ்வப்போது ரன்கள் ஓடியும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். சிறப்பாக ஆடி வந்த பெர்னால்டோ அரை சதத்தை கடந்தார். அணியின் ஸாகோர் 189 ஆக இருக்கும் போது குசால் மெண்டிஸ் 39 ரன்களில் ஆலன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய அணியின் மூத்த வீரரான மேத்யூஸ் ஆரம்பம் முதலே ஆதிரடியாக ஆடத்துவங்கினார்.

இவர்களும் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். இந்த ஜோடி நான்காம் விக்கெட்டுக்கு 57 ரன்கள் குவித்தனர். அப்போது மேத்யூஸ் 26 ரன்கள் ஹோல்டர் பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த அவிஷ்கா பெர்னால்டோ சர்வதேச அரங்கில் தனது முதலாவது சதத்தினை பதிவு செய்தார். சதமடித்து சில நிமிடங்களிலே இவரும் ஆட்டமிழக்க இறுதியில் திரிமண்னேவின் அதிரடியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்கள் குலித்தது.

Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019
Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019

பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பில் கிரிஸ் கெயில் மற்றும் அம்பிரிஷ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்களுக்கு துவக்கமே சரியாக அமையவில்லை. மூன்றாவது ஓவரிலேயே மலிங்கா வீசிய பந்தில் அம்பிரிஷ் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் ஹோப்-ம் நிலைத்து ஆடவில்லை. மலிங்காவின் பந்திற்கு அவரும் இறையாகினார். 5 ரன்களிலே அவரும் பெவிலியன் திரும்பினார். பின் களமிறங்கிய அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹெட்மேயர் கெயிலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் இழப்பை சற்று தடுத்து நிறுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன்கள் குவித்தது. அப்போது கெயில் 35 ரன்களில் ராஜிதா பந்தில் ஆட்டமிழக்க ஹெட்மேயரும் 29 ரன்களில் ரன் அவுட்டானார்.

Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019
Sri Lanka v West Indies - ICC Cricket World Cup 2019

அடுத்து வந்த பூரன் அணியின் நிலை உணர்ந்து வெற்றி இலக்கை துரத்த துவங்கினார். ஒருபுறம் இவர் சிறப்பாக ஆடிவர மறுபுறம் ஹோல்டர், ப்ராத்வேட் என அடுத்தடுத்து விக்கெட்டுகளும் விழுந்தன. இருந்த போதும் பூரன் தனது அதிரடியை காட்டி சதத்தினை கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆலன் அரைசதத்தையும் கடந்தார். இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியது. ஆனால் இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழக்க அடுத்து வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால் இறுதியில் 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 315 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. எனவே இலங்கை அணி இந்த போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்திய அவிஷ்கா பெர்னால்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links