ஆஸ்திரேலியா vs. இந்தியா : முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த மூன்று நகைச்சுவை தருணங்கள்

கோலியின் நகைச்சுவைத் தருணம்
கோலியின் நகைச்சுவைத் தருணம்

ஒரு வரலாற்று வெற்றியை இந்தியா அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் சுவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்றிருக்கும் டெஸ்ட் தொடர்களில் இந்தத் தொடரில் தான் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைக் கண்டுள்ளது. இந்த வெற்றியானது இந்த ஆண்டின் மூன்றாவது அந்நிய மண்ணில் கண்ட வெற்றியாகும். ஆசிய அணிகளில் இந்தியா அணி மட்டுமே ஒரே ஆண்டில் மூன்று வெளிநாட்டு வெற்றியைக் கண்ட அணியாக இவ்வெற்றியின் மூலம் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் போட்டியில் சொல்லிக்கொள்ளும் வகையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை. அணியின் தூணாக இருக்கும் விராட் கோலியும் விரைவில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். துணைக் கேப்டனாக இருக்கும் ரஹானேவும் சொதப்பியதால் ரன்களில் பின்தங்கி இருந்தது இந்திய அணி. ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா ஆகியோரின் பங்களிப்பு மற்றும் புஜாராவின் சதத்தால் இந்திய அணி மதிக்கத்தக்க ஸ்கோரான 235 ரன்களை எடுத்திருந்தது.

செகண்ட் இன்னிங்சை பொறுத்தவரை இந்திய அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் 50+ பார்ட்னர்ஷிப்பை எடுத்து நல்ல தொடக்கத்தை தந்தனர். பின்பு இருவரும் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் சதம் அடித்து இருந்த புஜாரா மற்றும் கேப்டன் கோலி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

கோலியும் அவுட்டாகப் பின்பு இறங்கிய துணை கேப்டன் ரஹானே அரை சதத்தைக் கடந்து ஆஸ்திரேலியாவுக்கு வலுவான இலக்கு அமையும்படி ஆடி இருந்தார்.

323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் சுருண்டது. ஆரம்பகட்டத்தில் விக்கெட்டுகளை இந்தியா வேகமாக எடுத்திருந்தாலும் கடைசி 4 விக்கெட்டுகளை எடுக்கத் திணறியது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வழியாகச் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியைச் சுவைத்தது.

#3. விராட் கோலியின் நடனம்

விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது நாம் அனைவரும் அறிவோம். அவர் தன் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வீரர். உலகில் எந்தப் பகுதியில் ஆடினாலும் கோலிக்கான தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கோலி களத்தில் இறங்கும்போது ஆரவாரமாக இருக்கும் ஷாட்களும் அனல் பறக்கும்.

அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியை 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினர், அதாவது இந்திய அணியின் ஸ்கோரை விட 15 ரன்கள் குறைவு.

இதையடுத்து இந்தியா பந்துவீச்சாளர்களின் பர்ஃபார்மன்ஸை கண்டு மகிழ்ச்சி அடைந்த கோலி ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தபோது தானாக நடனமாடினார். அவர் ஆடிய நடனம் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. பிடித்த பாடல்களை இந்த வீடியோவில் பதிவிட்டு ரசிகர்கள் இன்றளவும் பகிர்ந்து வருகின்றனர்.

கோலி நடனம் ஆடியதை ஒரு தொலைக்காட்சி பேட்டியின் நடுவே ஆஸ்திரேலியா ஜாம்பவானான ஷேன் வார்னே கூப்பிட்டு காண்பிக்கவே கோலி எல்லை இல்லாப் புன்னகையே வெளிப்படுத்தினார். இப்போட்டியில் கோலி ரன் எடுக்கத் தவறியிருந்தாலும், வெற்றியின் உத்வேகத்துடன் அடுத்த போட்டியில் ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

#2. ரவிச்சந்திரன் அஸ்வின் ரோஹித் ஷர்மாவை புறக்கணித்தது

தனது முதல் ஸ்பெல்லில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். 34 ஓவர்களில் 3 விக்கெட்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பான பங்களிப்பால் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு சுருண்டது.

பதினோராவது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச் ரிஷப் பன்டிடம் கேட்ச் ஆனார். மொத்த அணியும் அஸ்வினை பாராட்ட அவரை சூழ்ந்து இருந்தது. அந்த வெற்றிகரமான ஓவர் போட்டபின் அஸ்வினை பாராட்ட ரோஹித் ஷர்மா அவரை நெருங்கி வந்தார். அந்த சமயத்தில் அஸ்வின் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்க ரோஹித்தை கவனிக்கத் தவறினார்.

இந்த வீடியோவும் இணையதள வாசிகளால் வைரல் ஆனது.

#1. ரவி சாஸ்திரியின் நக்கலான கருத்து.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், போட்டியின் கடைசி தருணங்களில் ஆட்டம் களைகட்டியது என்றே கூறலாம். வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்குமே இருந்தது. இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை வெளியேற்ற மிகவும் போராட வேண்டியிருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஒன்பதாவது விக்கெட் விழும் தருவாயில், அவர்கள் 74 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது,மீதமுள்ள ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்தியா எளிதில் வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் திகைத்துப் போயினர். கடைசி விக்கெட்டில் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் நாதன் லியொன் ஜோடி 42 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை மேம்படுத்தியது. அஸ்வின், பும்ரா, இஷாந்த் என மாறி மாறி பந்து வீசினாலும் கடைசி விக்கெட் விடுபடாமல் இருந்தது. ஒருவழியாக அஸ்வின் வீசிய சூழலில் ஹேசல்வுட் சிக்கவே இந்திய அணி வெற்றியை கண்டது.

விருவிருப்பான ஆட்டம் முடிவடைந்தபின், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "ஸச் போலே தோ கோட்டி முஹ் மெஹ் ஆகயே தே" என்று ஹிந்தியில் கூறினார்

தமிழாக்கம் - "சிறிது நேரம் முன் (இந்தியா கடைசி விக்கெட்டை எடுக்க போராடிக் கொண்டிருந்தபோது), பந்துகள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்காமல் வாய்க்கே வந்துவிட்டது” என்று கூறவே அரங்கம் சிரிப்பலையில் மிதந்தது.

Quick Links

Edited by Fambeat Tamil