#7 93 பந்துகளில் 83 ரன்கள் vs இங்கிலாந்து, மொகாலி, 2013
சில காரணங்களால் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வில் இது ஒரு சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது. ரோகித் சர்மா நம்பர்-4ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே சமயத்தில் அஜீன்காயா ரகானே தொடர்ந்து டாப் ஆர்டரில் சொதப்பி வந்தார். இந்நிலையில் கேப்டன் எம்.எஸ்.தோனி ரோகித் சர்மாவை அவரது கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 83 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்து 3-1 என்ற தொடரை இந்தியா வசம் மாற்றினார். இப்போட்டியில் ஒரு முக்கியமான பங்களிப்பை ரோகித் அளித்தார். பின்னர் களமிறங்கிய ரெய்னா, தோனி ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தனர்.
#6 153 பந்துகளில் 202 ரன்கள் vs இலங்கை, 2017, மொகாலி
இந்திய அணி இத்தொடரில் தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே இனிவரும் போட்டியில் இந்திய அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா மொகாலியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் பாதி இன்னிங்ஸ் வரை ரோகித் சர்மா பேட் செய்ய மிகவும் சிரமப் பட்டார். சற்று நிலைத்து விளையாடி விட்டு மிடில் ஓவர் மற்றும் டெத் ஓவரில் தனது அதிரிடியை வெளிபடுத்த தொடங்கினார் ரோகித். இப்போட்டியில் தனது 3வது ஓடிஐ இரட்டை சதத்தினை விளாசினார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். 10 சிகஸர்கள் கடைசி 6 ஓவர்களில் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இன்னிங்ஸில் மிகச் சிறப்பான நிகழ்வு என்னவென்றால் ரோகித் சர்மா 115 பந்துகளில் 100 ரன்கள் அடித்திருந்தார். அடுத்த 100 ரன்களை வெறும் 38 பந்துகளில் விளாசினார். இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு ரோகித் சர்மாவிவை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று தெரியாமல் மிகவும் தடுமாறினர்.