ஒரே ஒரு போட்டியின் மூலம் ரசிகர்கள் அனைவரையும்  கவர்ந்த டாப்-5 கிரிக்கெட் வீரர்கள்...

Dinesh karthik
Dinesh karthik

தற்போதைய காலகட்டத்தில் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் மாறியுள்ளது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்ப்பட்ட நாடுகள் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இதுவரை பல வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தாலும் விராத்கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற அனைத்து வீரர்களும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதிலும் ஒரு சில வீரர்கள் ஒரே ஒரு போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#5) ஸ்டீவன் ஓ கபே

Steve O'Keefe
Steve O'Keefe

ஸ்டுவன் ஓ கபே வீசிய 12/70 என்ற சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2017-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றது. இவரின் இந்த பந்து வீச்சு இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த ஒரே தொடரில் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் இவர். ஆனால் அதன்பின் சில காரணங்களால் இவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்கவில்லை.

இருந்தாலும் இவர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் காயமான ஹேஸல்வுட்-காகு பதிலாக மீணாடும் அணியில் இடம்பிடித்தார். இவரின் அந்த ஓரே போட்டி தான் ரசிகர்கள் மனதில் இன்னும் இவரை நீங்கா இடம்பிடிக்க வைத்துள்ளது.

#4) கருண் நாயர்

Karun Nair
Karun Nair

இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த வீரர் தான் கருண் நாயர். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை மைதானத்தில் குவித்த 303* ரன்கள் இந்திய ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. முச்சதம் அடித்த இரண்டே இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். ஆனால் தற்போது இவர் என்ன ஆனார் என பலருக்கு தெரிந்திரிக்க வாய்ப்பில்லை. அந்த போட்டிக்கு பின்னர் இவரே இந்திய டெஸ்ட் அணிக்கு நிரந்தர நம்பர் 4 வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தெடரில் சொதப்பியதன் மூலம் இவரால் அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பிடிக்கவே முடியாமல் போனது.

இருந்தாலும் தற்போது அணியில் இடம்பிடிப்பதற்காக முதல்தர மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார் இவர். தற்போதைய டெஸ்ட் அணியில் ரஹானே மற்றும் விஹாரி நிரந்தர இடத்தினை பிடித்ததால் கருண் நாயர் அணிக்கு திரும்புவது மிகக் கடினமே.

#3) முகமது இர்பான்

Mohammad Irfan
Mohammad Irfan

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது இர்பான் டி20 போட்டியில் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். கடைசியாக 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த கரீபியன் லீக்கில் இவர் டி20 வரலாற்றில் வேறு எந்த வீரரும் படைக்காத சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அந்த போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய இவர் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுவும் கெயில் மற்றும் லீவிஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை கொண்ட அணிக்கு எதிராக. இவர் இந்த சிறப்பான சாதனையை படைத்தாலும் இவருக்கு தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடமில்லை.

#2) ராபின் பீட்டர்சன்

Robin Peterson
Robin Peterson

இடது கை சுழல் பந்து வீச்சாளரான ராபின் பீட்டர்சன் தென்னாப்ரிக்க அணி 2011 உலககோப்பை தொடரில் பல போட்டிகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அதிலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இவரின் அதிரடி ஆட்டத்தாலேயே ஆந்த அணி இந்தியாவை வீழ்த்தியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராபின் பீட்டர்சன் 4,6,2 மற்றும் 4 என ரன்கள் விளாசி நான்கே பந்துகளில் அணிக்குவெற்றியை தேடித்தந்தார். இதன் மூலம் அவர் தென்னாப்ரிக்க அணியில் நீண்ட நாள் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்ரான் தாகீரின் சிறப்பான பந்து வீச்சினால் அதன் பின் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

அந்த 2011 உலககோப்பை தொடருக்கு பின் இவர் ஐபிஎல் தொடரிலும் நல்ல ஏலத்திற்கு போனார். மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் 2016 ஆம் ஆண்டில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வினை அறிவித்தார்.

#1) தினேஷ் கார்த்திக்

Dinesh Karthik
Dinesh Karthik

இவரைப் பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டே அறிமுகமானாலும் அணியில் தனக்கென சரியான இடம் கிடைக்காமல் தவித்தார் தினேஷ் கார்த்திக். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஷ் டிராபி தோடரின் இறுதிப் போட்டியில் இவரது ஆட்டத்தை எவராலும் மறக்க முடியாது. கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய இவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைப்பார். அதிலும் அந்த கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையைக் கைப்பற்றி கொடுத்ததன் மூலம் இவர் இந்தியாவில் பெருமளவு ரசிகர்களை கவர்ந்தார்.

இருந்தால் தற்போதைய உலககோப்பை தொடரில் இடம்பிடித்துள்ள இவரால் ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

Quick Links

Edited by Fambeat Tamil