உலகின் டாப் 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியல்

IPL
IPL

தற்பொழுது டி20 கிரிக்கெட் தொடர்கள் உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் தங்களுக்கென ஒரு டி20 தொடர்களை வைத்துள்ளது. முதன்முதலாக இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் என ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிக்பாஷ் லீக் என ஆரம்பிக்கப்பட்டது.நாளடைவில் மேற்கிந்தியத் தீவுகள் ( சீ.பி.எல்), ஆப்கானிஸ்தான் (ஏ.பி.எல்), வங்கதேசம் (பி.பீ.எல்), பாகிஸ்தான் (பி.எஸ்.எல்) என டி20 தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் நடைபெற்றுவருகிறது.

எம்ஜான்ஸி என்ற டி20 தொடர் தற்பொழுது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த டி20 லீக்குகள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை உலகிற்கு வெளிபடுத்தவும், குறிப்பாக அதிக பணம் சம்பாதிக்கவும் உதவுகிறது.சிறந்த ஆட்டத்திறன் உள்ள வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்படுகின்றனர்.கிரிக்கெட் வீரர்கள் டி20 தொடர்களை மிகவும் விரும்பி விளையாடுகின்றனர்.மேற்கிந்தியத்தீவுகள் நாட்டின் வீரர்கள் சர்வதேச போட்டிகளை விட டி20 லீக்குகளைதான் அதிகம் விரும்புகின்றனர்.ஏனேனில் அதிக பணம் சம்பாதிக்க டி20 தொடர் மட்டுமே சிறந்த வழியாகும்.

டி20 தொடர்களின் மூலம் அதிக வருவாயும் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவையும் பெற உதவுகிறது.டி20 தொடர்கள் அந்தந்த நாடுகளில் வருடத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்கப்பட்ட மாதங்களில் நடைபெறும்.பி.எஸ்.எல் , பி.பீ.எல் , பி.பி.எல் மார்ச் வரையிலும், ஐ.பி.எல் மே மாத வரையிலும் நடைபெறும்.ஐ.பி.எல்லிற்குப் பிறகு விட்டாலிட்டி டி20 பிளாஸ்ட் மற்றும் சி.பி.எல் நடைபெரும். சி.பி.எல் நிறைவடைந்த பிறகு ஏ.பி.எல், எம்ஜானஸி சூப்பர் லீக், யுஏஇ டி20 எக்ஸ் ஆகிய டி20 தொடர்கள் நடைபெறும்.

இன்னும் தெரியாத நிறைய டி20 தொடர்கள் உள்ளன அவற்றுள் சிறந்த 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியலை நாம் இங்கு காண்போம்.

#5.விட்டாலிட்டி டி20 பிளாஸ்ட்

Vitality t20 blast 2018
Vitality t20 blast 2018

இங்கிலாந்து நாடுதான் முதன்முதலில் டி20 தொடர்களை இந்த நுற்றாண்டில் ஆரம்பித்து வைத்தது.இது ஐ.பி.எல் டி20 போல ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனி உரிமையாளர்கள் கொண்டுள்ள தொடராக இருக்காது.வங்கதேச பிரிமியர் லீக் தோன்ற காரணமாக இந்த டி20 தொடர் இருந்தது.இந்த டி20 முதலில் இங்கிலாந்து நாட்டு உள்ளுர் வீரர்களை மட்டுமே வைத்து விளையாடப்பட்டது.

மொத்தமாக இந்த டி20 தொடரில் 18 அணிகள் பங்கேற்கின்றனர்.18 அணிகளும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமாக பிரிப்பர்.ஒவ்வொரு மாகனத்திலும் 9 அணிகள் இருக்கும்.ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளை எதிர்கொள்ளும்.ஒருமாகணத்தில் ஒரு அணி மற்ற 6 அணிகளுடன் விளையாடும்.மீதியுள்ள 2 அணிகளுடன் ஒரு போட்டியை மட்டும் எதிர்கொண்டு விளையாடும்.பிறகு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.இந்த வருடம் விட்டாலிட்டி டி20 தொடர் ஜுலை 4ல் தொடங்கி செப்டம்பர் 15ல் முடிவடைந்தது.

இவ்வருட சீசனில் இறுதிப்போட்டியில் சசெக்ஸ் ஷார்க்ஸை வீழ்த்தி வர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை வென்றது லீசெஸ்டர்ஷைர் ஃபாக்ஸ் அணி அதிகபடியாக 16 சீசனில் விளையாடி 3 முறை சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.சிறந்த வெளிநாட்டு டி20 நட்சத்திர வீரர்களான பிராவோ,ராஷித் கான்,முஜிப் ரகுமான், ஆரோன் ஃபின்ச் போன்ற புது யுக வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த டி20 நிறைய வெளிநாட்டு வீரர்களை கவர்ந்தது, மற்றும் இங்கிலாந்து நட்சத்திர நாயகர்களுடன் விளையாடும் வாய்ப்பையும் பெற முடிகின்றது.உலகின் டி20 தொடர் புள்ளி பட்டியலில் இந்த டி20 லீக் 5வது இடத்தில் உள்ளது.

#4.கரீபியன் பிரிமியர் லீக்

CPL
CPL

சி.பி.எல் ஒரு வண்ணமயமான அதிரடி டி20 தொடராகும். மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் சிறப்பான பேட்டிங் ஸ்டைல் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.இந்த டி20 தொடரில் சில வித்தியாசமான விதிமுறைகள் கையாளப்படுகிறது.சூப்பர் ஓவரில் டாஸ் போட்டுதான் யார் முதலில் பேட்டிங் (அல்லது) பௌலிங் செய்வது என தேர்வு செய்யப்படும்.இந்த விதிமுறை மற்ற டி20 தொடரில் கிடையாது.

மற்றோரு விதிமுறை ஒரு அணியின் நிகர ரன்ரேட்(நெட் ரன்ரேட்) அந்த அணியின் பந்து வீச்சில் அளித்துள்ள ரன்களுடனும் சேர்த்தே கணக்கிடப்படும்.ஆறு அணிகள் பங்கு பெரும் சி.பி.எல்லில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிருதிப்போட்டியை விளையாடும்.மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகள் எலிமேனேட்டர் சுற்றினை விளையாடும்.அரையிருதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.அரையிருதியில் தோற்ற அணி எலிமேனேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.அதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடும் அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும்.

இந்த சீசனில் டிரின்பாகோ நைட் ரெய்டர்ஸ் அணி இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி சேம்பியன் ஆனது. டிரின்பாகோ நைட் ரெய்டர்ஸ் அணி 6 சீசனில் 3 தடவை சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டிவ் ஸ்மித்,காலின் முன்றோ போன்றோர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உள்ளுர் வீரர்களுடன் இனைத்து விளையாடினர்.அவர்களுடன் அந்நாட்டு கிரிக்கெட் நாயகர்களான கெயில்,ரசல்,பிராவோ போன்றோரும் தங்கள் நாட்டு கிரிக்கெட் லீக்கில் விரும்பி விளையாடி அசத்தினர்.

#3.பாகிஸ்தான் சூப்பர் லீக்

PSL
PSL

பாகிஸ்தான் சூப்பர் லீக் மிக விரைவாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தம் கவணத்தில் ஈர்த்துள்ளது.3 சீசன் மட்டுமே நடைபெற்றுள்ள இந்த டி20 லீக்கில் ஏற்கனவே நிறைய அதிரடி ஆக்ஸன்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.6 அணிகள் இந்த டி20 லீக்கில் பங்குபெறும்.சி.பி.எல் டி20 லீக்கைப் போன்றே இறுதிப்போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படும். பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் 2-4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும்.

கடந்த சீசனில் ஸ்லாமபாத் அணி சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.3 சீசனில் 2 தடவை சேம்பியன் ஆகியுள்ளது. பெஷாவர் ஜால்மி இறுதி போட்டியில் தோற்று பின்னர் பி.எஸ்.எல் கோப்பையை தவறிவிட்டது.அடுத்த சீசனிற்கான ஏலம் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏ.பி.டிவில்லியர்ஸ், ஸ்டிவ் ஸ்மித், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த டி20 லீக்கில் வரும் சீசனில் விளையாட உள்ளனர்.இந்த டி20 லீக்கின் வளர்ச்சிக்கு இதுவே சான்றாகும்.

கடைசி சீசனில் ஜெஸன் ராய்,மெக்கல்லம் போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.வரும் சீசனில் இன்னும் சிறப்பாக இவர்களது ஆட்டத்திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#2.பிக் பேஸ் லீக்

BBL
BBL

இந்த டி20 லீக் இங்கிலாந்தின் டி20 பிளாஸ்டர் தொடரை போலவே அவ்வளவாக வெளிநாட்டு அணி வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்.ஆனால் கிரிக்கெடின் தறம் சிறப்பாக இருப்பதால் இந்த டி20 தொடர் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளது.சி.பி.எல் மற்றும் பி.எஸ்.எல் இல் சிறந்த வீரர்கள் இருப்பர்.பிக்பேஸ் டி20 லீக்கில் ஆட்டத்திறன் மற்றும் அதன் வெளிப்பாடு அற்புதமாக உள்ளுர் அணி வீரர்கள் வெளிப்படுத்துவார்கள்.ஒவ்வொரு போட்டியையும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் போட்டியை மிக சுவாரஸ்யமாக எடுத்து செல்வார்கள்.

இந்த டி20 லீக்கானது அனுபவமில்லா வீரர்களின் ஆட்டத்திறனை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி ஐ.பி.எல் போன்ற பெரிய டி20 லீக் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.உதாரணத்திற்கு டாரிசி ஷார்ட்,ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற பிபிஎல் டி20 லீக் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஐ.பி.எல்-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த டி20 லீக்கில் ஒரு அணியில் இரு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பங்குபெற முடியும்.ரஷீத் கான்,ஜெஸன் ராய், மெக்கல்லம்,பிராவோ போன்றோர் இந்த டி20 லீக்கின் முன்னணி வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் ஆவார்.

இந்த டி20 லீக்கிற்கு ஏலம் ஏதும் கிடையாது.தங்களுக்கு விருப்பமான வீரர்களை அந்தந்த அணிகள் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். 8 அணிகள் உள்ள இந்த டி20 லீக்கில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.கடந்த சீசனில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஹோபார்ட் அணியை வீழ்த்தி சேம்பியன் பட்டத்தை வென்றது.பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 8 சீசனில் 3 சீசனில் வெற்றி வாகை சூடியுள்ளது.அடுத்த சீசன் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

#1.இந்தியன் பிரிமியர் லீக்

IPL
IPL

உலகின் தலைசிறந்த டி20 லீக் ஐ.பி.எல் ஆகும்.ஐ.பி.எல் தொடரானது உலகில் உள்ள அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து ஈர்த்துள்ளது.இந்த டி20 தொடர் இந்திய இளம் வீரர்களை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது.தற்போதைய இந்திய நட்சத்திர வீரர்களான சகால், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா,பூம்ரா போன்றோரை கண்டறிய இந்த டி20 தொடர் பெரிதும் உதவியது.

ஐ.பி.எல் டி20 தொடரானது இந்திய ரசிகர்கள் 2 மாத திருவிழா போல் கொண்டாடுவர்.கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வது ஐ.பி.எல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.ஹதராபாத் அணி கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது.இந்த டி20 லீக்கில் ஒவ்வோரு சீசனிற்கும் வீரர்களை மாற்றிக்கொள்ளலாம்.

வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ், சுனில் நரைன்,கானே வில்லியம்சன் போன்ற வீரர்கள் ஐ.பி.எல் போட்டியை விரும்பி விளையாடுவர்.இந்த டி20 தொடரும் சி.பி.எல், பி.எஸ்.எல் போலவே இறுதிப்போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படும்.

அடுத்த சீசன் மார்ச் மாதத்தில் தொடங்கவிருப்பதால் டிசம்பர் மாதம் ஏலம் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஐ.பி.எல் அணிகள் ஏற்கனவே தாங்கள் தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.ஐ.பி.எல் 2019 திருவிழா தற்பொழுது முதலே களைகட்ட தொடங்கியுள்ளது.அது இன்னும் சில மாதங்களுக்கு அப்படியே இருக்கும்.

Quick Links

Edited by Fambeat Tamil