6.2013 மற்றும் 2014 ஆண்டுகளில் ஏற்பட்ட போராட்டம் :
சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்த யுவராஜ் சிங் முன்பு இருந்தது போல் பெரிதும் அணியில் ஜொலிக்கவில்லை. 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் 77 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்த போதிலும் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினார். 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 60 ரன்களை குவித்து அந்த லீக் ஆட்டத்தில் அணியை வெற்றி பெறச் செய்தார். பின்னர் இலங்கைக்கு எதிரான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 64 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது இந்திய அணி. 11-வது ஓவரில் களம் புகுந்து, இந்த போட்டியில் 21 பந்துகளை சந்தித்த இவர், எந்த ஒரு பவுண்டரியுமின்றி 11 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுக்க நேர்ந்தது.யுவராஜ் சிங்கின் ஆமை வேக ஆட்டத்தினால் இந்திய அணி இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
7. தேர்வாளர்களால் ஓரங்கட்டப்படும் யுவராஜ் சிங் :
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறார், யுவராஜ் சிங். ஒரு காலத்தில் இவர், இந்திய அணிக்கு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றியைத் தேடி தரக்கூடிய வீரராக திகழ்ந்தார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யுவராஜ் சிங் மீண்டும் இணைந்தார், அணி தடுமாறிய வேளையில் எம்எஸ் தோனியுடன் இணைந்து 256 ரன்கள் என்ற மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பில் 150 ரன்களை குவித்தார். அதே ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 56 ரன்கள் குவித்த போதிலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் ரன்களை சேர்க்க தடுமாறினார். மேலும் அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய யுவராஜ் சிங் தொடர் முழுவதும் ரன்களை குவிக்க தவறினார்.
மனதளவில் போராடும் குணம் இருந்தாலும், வயது மற்றும் உடல் தகுதி காரணத்தினால் அணியில் இடம் பிடிக்க இவரால் இயலவில்லை.அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தை கருத்திற்கொண்டு பஞ்சாப் அணி இவரை சமீபத்தில் விடுவித்தது, இவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. மேலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இவர் எந்த அணியில் இணையப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்தாண்டு ஐபிஎல் மட்டுமின்றி உலகக்கோப்பையிலும் மீண்டு வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.அதனை நிறைவேற்றிடும் வகையில் யுவராஜ் சிங் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.