#3.இலங்கை:
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி. தொடர்ந்து இத்தகைய வெற்றி நிலையை கையாண்டால் மட்டுமே இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு தகுதி பெற முடியும். பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை தோற்கடித்ததன் மூலம் நம்பிக்கையைப் பெற்று புதுத்தெம்புடன் விளங்கும் இலங்கை, இரு போட்டிகளில் மழை வந்து குறுக்கிட்டுள்ளது. ஆறு புள்ளிகளை கொண்டு புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடம் வகிக்கும் இலங்கை தனது வாய்ப்பை தொடர்ந்து நீடித்துக் கொள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றிகளை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அணியின் மூத்த வீரர்கள் தங்களது பங்கினை அளித்த வேளையில் இளம் வீரர்களும் தமது பொறுப்பை உணர்ந்தால் அணிக்கு நிச்சயம் வெற்றிதான்.
#4.வங்கதேசம்:
கடந்த சில ஆண்டுகளாக தொடர் வெற்றிகளை குவித்து வரும் வங்கதேசம், சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் கூட தொடரை வென்று அசத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி அதிக வெற்றிகளை குவித்த ஆசிய அணிகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது, வங்கதேசம். 2019 உலக கோப்பை தொடரின் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கூட தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது, வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் என்ற இலக்கை ஓரளவுக்கு எட்டி அதிர்ச்சியையும் அளித்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடம் வகிக்கும் வங்கதேசம், இன்னும் சில வெற்றிகளை குவித்தால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க முடியும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்று சாதித்தால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன.