SummerSlam வார இறுதியில் WWE -ல் நிகழ்த்தப்பட்ட தவறுகள்!!!

They could have done great things
They could have done great things

2019 SummerSlam போட்டிகளானது வார இறுதியில் நடத்தப்பட்டன. அதே வாரத்தின் சனிக்கிழமை NXT போட்டியானது நடத்தப்பட்டது, ஞாயிறு அன்று SummerSlam போட்டிகள் நடத்தப்பட அதற்கடுத்த நாளே திங்கள் அன்று இரவு ராவ் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதாவது ஓய்வின்றி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற WWE போட்டிகள் மூலம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இதில் பல எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகளும் நிகழ்ந்தன. பிரே வாட் இம்முறை பைன்ட் கதாபாத்திரத்தை பின் போலருக்கு எதிரான போட்டியில் கொண்டு வந்தார். அதே போல NXT நிகழ்ச்சியில் ஷிராரி மற்றும் காண்டீஸ் லீரே-வுக்கு இடையே WWE-ன் சிறந்த பெண்கள் போட்டி நடத்தப்பட்டது. SummerSlam நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்த பிராக் லெஸ்னர் மற்றும் சேத் ரோலிங்ஸ்-க்கு இடையேயான போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இப்படி இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து முடிந்தாலும் இந்த வார இறுதியில் WWE-ல் மூன்று முக்கிய தவறுகள் நிகழ்த்தப்பட்டன. அதை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

#1) தி கபுக்கி வாரியர்ஸ் அணி பெண்களுக்கான டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்லாதது

It was time
It was time

தற்போது மகளீர் போட்டிகளும் WWE போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் பெண்கள் போட்டிகளை பொறுத்தவரையில் சார்லோட் பிளேர் மற்றும் சாஷா ஆகியோர் லீக்கில் இல்லை என கருதினர். இறுதியில் வார இறுதியில் பெண்களுக்கான டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டியை நிக்கி கிராஸ் மற்றும் அலெக்சா ப்ளிஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடத்தியது. நிக்கி அணியானது இவ்வகை போட்டிகளில் சிறந்து விளங்கினாலும், அலெக்சா அணியே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேசமயம் ரெஸ்டில்மேனியாவுக்குப் பிறகு கைரி சானே அழைக்கப்பட்டதிலிருந்து கபுக்கி வாரியர்ஸ் அணி பெரிதாக எதுவும் செய்யவில்லை. இப்படியே போனால் இவர்கள் கூடிய விரைவில் ரசிகர்களால் மறக்கப்படுவர். எனவே தற்போதைய நேரத்தில் அவர்களுக்கான போட்டிகளை நடத்தி மக்கள் மத்தியில் அவர்களை மீண்டும் நிலைநிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதனை WWE நிறுவனம் செய்யவில்லை. இது இந்த வாரத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தவறாக கருதப்படுகிறது.

#2) ராண்டி ஆர்டன் vs கோபி கிங்ஸ்டன் போட்டியின் நிறைவு

A very bad finish
A very bad finish

இந்த SummerSlam போட்டியில் ராண்டி ஆர்டன் மற்றும் கோபி கிங்ஸ்டன் இருவரும் WWE சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்கொண்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது விரைவில் நிறைவடைந்தது. இந்த போட்டியின் இறுதியில் ராண்டி களத்திற்கு வெளியே இருக்கும் போது கோபி கிங்ஸ்டனின் குழந்தை ரசிகர்களின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பதை கண்டார். அவர்களுக்கு முன்பாக ராண்டி தனது ஆர்கேஓ வை வெளிப்படுத்துவது சிறந்தது இல்லை என கருதப்படுகிறது. ஏனென்றால் அந்த குழந்தைக்கு வயது வெறும் 5 தான். மறுபுறம் இந்த போட்டியானது விரைவில் முடிவுக்கு வந்தது. இதனை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இது கடந்த ஆண்டு நடைபெற்ற SummerSlam-ல் AJ ஸ்டைல்ஸ் மற்றும் சமோ ஜோ-வுக்கு இடையே நடைபெற்ற போட்டி போலவே ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. எனவே விரைவில் இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது மீண்டும் நடத்தப்படுவது சிறந்தது என கருதப்படுகிறது.