ஆஸ்திரேலியாவிற்கு எதிரான எதிர்பாரத ஓடிஐ மற்றும் டி20 தொடர் இழப்பினால் தற்போது மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. இதனால் 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய தேர்வுக்குழுவும் பெரும் தலைவலியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலிய தொடரின் மூலம் இந்திய அணிக்கு பலனை விட சோதனைகளே அதிகமாக இருந்தது. இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் 2019 உலகக் கோப்பைக்கு முன் கடைசி தொடர் என்பதால் அணியை எப்படி வடிவமைப்பது என்ற நிலைக்கு இந்திய தேர்வுக்குழு தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி 10 கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையில் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளனர். ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.
இவர்களை தவிர யுஜ்வேந்திர சகால் இந்த பட்டியலில் உள்ளார். ஆனால் கடந்த சில போட்டிகளாக இவரது ஆட்டத்திறன் அவ்வளவாக யாரையும் கவரவில்லை.
ஆஸ்திரேலிய தொடருக்கு பின் அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் கிட்டத்தட்ட அணியை விட்டு நீக்கப்படுவர். ஏனெனில் இவர்கள் இந்த தொடரில் சோபிக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் அம்பாத்தி ராயுடுவுக்கு நம்பர்-4 ல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர் நியூசிலாந்து தொடரை தவிர மற்ற எந்த தொடரிலும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அஜின்க்யா ரகானேவை மீண்டும் இந்திய ஓடிஐ அணியில் இடம்பெற செய்து நம்பர்-4ல் களமிறக்கலாம் என நிறைய பேச்சுகள் எழுந்துள்ளன. இந்திய அணிக்கு 4வது இடத்தில் செட்டிஸ்வர் புஜாரா சரியான வீரராக இருப்பார் என முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இவரது கருத்து கண்டிப்பாக ஏற்கும் வகையில்தான் உள்ளது. இதற்கு முன் இவரது பரிந்துரைகள் இந்திய அணிக்கு அதிக முறை சரியாக அமைந்துள்ளது.
கங்குலியின் கருத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று புஜாராவை இந்திய அணிக்கு தேர்வு செய்தால் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகாலிற்கு பதிலாக நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் ஷர்மாவை இந்திய அணியில் சேர்க்கலாம். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். உமேஷ் யாதவ் மற்றும் கலீல் அகமது பந்துவீச்சை ஒப்பிடுகையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் புஜாரா-வையோ அல்லது இஷாந்த் ஷர்மாவையோ இந்திய கிரிக்கெட் வாரியம் ஓடிஐ அணியில் சேர்ப்பது மிகவும் கடினம். ஆனால் இவர்கள் இருவரும் இந்திய ஓடிஐ அணிக்கு சரியாக இருப்பர்.
அஜின்க்யா ரகானே தொடக்க ஆட்டக்காரராகவும், மிடில் ஆர்டர் என இரண்டு இடங்களிலும் களமிறங்கும் திறமை உடையவர். தினேஷ் கார்த்திக்-கும் மிடில் ஆர்டருக்கு ஒரு போட்டியாளராக உள்ளார். இந்திய அணி தற்போது உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக் இந்த இடத்திற்கு சரியான வீரராக திகழ்வார். தினேஷ் கார்த்திக்கின் பணி ரகானேவை விட சற்று அதிகமாகவே உள்ளது. தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர்.
ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு பெரும் துயரத்தை அளித்திருந்தாலும் ஒரு சில நன்மைகளையும் அளித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்ட இரு வீரர்கள் ஆஸ்திரேலிய தொடரில் தங்களது ஆட்டத்திறனை நிறுபித்துள்ளனர். இந்த கட்டுரை அந்த இரு வீரர்களை பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கும்
#1 ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5ல் 4 ஒருநாள் போட்டி ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கியது. ஹைதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜாவின் சிறப்பான எகானமிக்கல் பந்துவீச்சின்(10-0-33-0) மூலம் 236 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை மடக்கியது இந்திய அணி.
நாக்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் அடித்தார். தோனியுடன் சேர்ந்து 67 ரன்கள் அடித்து இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார். கேதார் ஜாதவ் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்த பிறகு இந்திய அணி 200 ரன்களுக்கும் குறைவாகவே ரன்களை அடித்திருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜடேஜாவின் இன்னிங்ஸ் இந்திய அணிக்கு தேவைப்பட்டது. சிறிது நேரம் தனது கேப்டனுடன் கைகோர்த்து விளையாடினார் ஜடேஜா. இவர் 40 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை குவித்தார்.
பௌலிங்கில் 10 ஓவர்களை வீசி 48 ரன்களை அளித்து ஷான் மார்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். 2வது ஒருநாள் போட்டியில் ஃபில்டிங்கில் ஜடேஜா பங்களிப்பு அதிகமாக இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பீட்டர் ஹான்ட்ஸ்கோம்-ஐ ரன்- அவுட் செய்து அசத்தினார். இந்தப் போட்டியில் ஆட்டத்தின் நிலைமை மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா.
ராஞ்சியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இவரது பௌலிகில் அதிக ரன்கள் சென்றது. பேட்டிங்கில் 24 ரன்களை விளாசினார். 4வது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இவர் டெல்லியில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 10 ஓவர்களை வீசி 45 ரன்களை தன் பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவரது சீரான ஆட்டத்திறனால் இந்திய அணியில் ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் தனது பங்களிப்பை அளிக்கும் திறமை படைத்துள்ளார் ஜடேஜா.
#2 விஜய் சங்கர்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விஜய் சங்கர் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதால் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக்குழுவை பெரிதும் ஈர்த்துள்ளார்.
இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய இவர் 46, 32, 26 மற்றும் 12 ஆகிய ரன்களை குவித்தார். இவரது சிறப்பான இன்னிங்ஸ் நாக்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் வெளிப்பட்டது. 41 பந்துகளில் 46 ரன்களை குவித்து அசத்தினார். அத்துடன் கடைசி ஓவரை வீசி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மொகாலியில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 5 ஓவர்களை வீசி 29 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் கொடுத்தார். ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஃபீல்டிங்கில் பவுண்டரி லைனில் சிறப்பாக அசத்தினர். முதல் ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் உஸ்மான் கவாஜா-வின் கேட்ச் மிகவும் அற்புதமாக இருந்தது.
இந்திய அணிக்கு 4வது வேகப்பந்து வீச்சாளர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகிய இரு பணியையும் உலகக் கோப்பைக்கு முன் நடந்த இந்த தொடரில் சிறப்பாக செய்துள்ளார். விஜய் சங்கர் ஆஸ்திரேலிய தொடரில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறிது கூட தவறவிடவில்லை.
இந்த கட்டூரைக்கு முதல் பக்கத்தில் 11 வீரர்களை குறிப்பிடப்பட்டிருந்தது. ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் அவர்களுடன் சேர்க்கப்பட்டு 13 வீரர்களாக தேர்வு செய்யப்படலாம். 14வது வீரராக அஜின்க்யா ரகானே அல்லது தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
