பின் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தனது வித்தியாசமான பந்துவீச்சால் பல விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் ஆறாவது பந்துவீச்சாளராக உருவெடுத்தார். அதன் பின் போக போக இந்திய அணியில் இவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இருந்தாலும் இவரை இன்றளவும் அணியில் வைத்துள்ளது நிர்வாகம். தற்போதைய உலககோப்பை தொடரை பொறுத்தவரை ஒரேயொரு போட்டியில் மட்டும் அரை சதம் அடித்தார். அதன் பின் இவரது தாக்கம் இந்திய அணியில் சுத்தமாக இல்லை. இந்த தொடரில் இவரது பந்துவீச்சும் எடுபடவில்லை. கடைசியாக இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இவரின் படுமோசமான ஆட்டம் ரசிகர்கள் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். எனவே உலககோப்பை தொடருக்கு பின் இவரை அணி நிர்வாகம் கழட்டி விட்டு அந்த இடத்திற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சிக்கும்.
#1) தினேஷ் கார்த்திக்
இந்த பட்டியலில் இவரின் பெயர் இடம் பெற்றிருப்பது பலருக்கு ஆச்சர்யமளிக்கலாம். இந்திய அணிக்காக 15 ஆண்டுகளாக விளையாடும் இவர் இந்த வருடம் தான் தனது முதலாவது உலககோப்பை போட்டியிலேயே அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே இவர் ஒரு சில போட்டிகளில் சொதப்பினால் இவரை அடுத்த தொடரின் இந்திய அணியில் இடம் பெறமாட்டார். தற்போதைய உலககோப்பை தொடரில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கேதார் ஜாதவ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியின் கடைசியில் களமிறங்கிய இவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதேபோல் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இவருக்கு களமிறங்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஏன் அரையிறுதி போட்டியில் கூட இவர் விளையாடுவது சந்தேகம் தான். எனவே இவரை உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணி கண்டிப்பாக கழட்டி விடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இது ஒன்றும் இவருக்கு புதிதல்ல. இதிலிருந்து மீண்டு வருவதும் இவருக்கு கடினமல்ல.