#5.விஜய் சங்கர்:

இந்திய அணியின் நான்காம் இடத்திற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுலுக்கு ஒரு போட்டியாளராக திகழ்ந்து வருகிறார், தமிழகத்தை சேர்ந்த விஜய். நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் 18/4 மற்றும் 75 /4 என்ற நிலையில் இருந்த இந்திய அணியை தனது பேட்டிங்கால் தூக்கி நிறுத்தினார். மேலும், பவுலிங்கிலும் தனது தாக்கத்தை அவ்வப்போது வெளிக்கொணர்ந்து வருகிறார். இங்கிலாந்தில் உள்ள ஆடுகள தன்மையை பொறுத்து அணியில் ஆறாவது பவுலராக இவர் செயல்படுவார். மேலும், இவரது பேட்டிங் ஆட்டத்திறன் இங்கிலாந்தில் சற்று எடுபடும் எனவும் எதிர்பார்க்கலாம். அணியின் ஒரு மாற்று ஆல்ரவுண்டராகும் இவர் செயல்பட கூடியதால் இவருக்கான வாய்ப்புகள் சற்று அதிகம்தான்.
#6.ரவிந்திர ஜடேஜா:

குறுகியகால போட்டிகளில் குல்தீப் மற்றும் சாஹலின் வருகைக்கு பின்னர், தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கருதிய நிலையில் ஆசிய கோப்பை தொடரில் மீண்டு வந்து அற்புதமாக செயல்பட்டு தற்போதைய இந்திய அணியின் ஒரு சிறந்த பீல்டராகவும் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராகவும் ஜொலிக்கும் திறமை இவரிடம் உள்ளது. மேலும், 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் தனது துல்லியமான பந்துவீச்சு தாக்குதலால் எதிரணி வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமல்லாது 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்களை கைப்பற்றி "தங்க பந்து" விருதையும் வென்றார். இதன் அடிப்படையிலேயே அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இவருக்கு பிரகாசமாகி உள்ளன உள்ளன.