2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் தோல்வியினால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்

Virat Kohli has a couple of issues to sort out
Virat Kohli has a couple of issues to sort out

#2 அணியின் சற்று தடுமாறிய கட்டமைப்பு

Rishabh Pant's bat flying after a reckless shot
Rishabh Pant's bat flying after a reckless shot

இந்திய அணி சற்று அதிக இலக்கை சேஸிங் செய்ய களமிறங்கிய போது லோகேஷ் ராகுல் ரன் ஏதும் அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 138 ரன்கள் பார்டனர் ஷீப் அமைத்து சிறந்த அடித்தளமிட்டனர்‌. ஒரு பெரிய இலக்கங்களில் இந்திய அணியை தோல்வி அடைய விடாமல் மீட்டு கொண்டு வந்தவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

இந்திய அணி நிர்வாகம் 2019 உலகக்கோப்பையில் அறிமுகப்படுத்திய லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டத்தின் தன்மைக்கேற்ப தங்களை அற்பணித்துக் கொள்வார்கள் என்ற விளக்கங்களை கூறியே அவர்களை இந்திய அணியில் தேர்வு செய்தது. இவர்கள் மூவருமே ஐபிஎல் தொடரில் தாங்கள் விளையாடும் அணிக்காக அதிக ரன்குவிப்பில் ஈடுபட்டு அதிக இலக்கினை தாங்கள் விளையாடும் அணிக்காக நிர்ணயித்திருந்தனர்.

லோகேஷ் ராகுல் பல முறை ஏமாற்றி விட்டார். ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டங்களை வெளிகொணர்ந்தனர். இருப்பினும் இந்த ஆட்டத்திறன் இந்திய அணிக்கு போதும் வகையில் இல்லை. ஹர்திக் பாண்டியா அதிரடி தொடக்கத்தை இந்திய அணிக்கு அளிக்கிறார். ஆல்ரவுண்டரான இவர் ஆட்டத்தின் இறுதி வரை நின்று விளையாட வேண்டும்.

அதிக நெருக்கடியை தாங்கிய உலகக்கோப்பையில் அனுபவமில்லாத வீரர்களுக்கு சில சமயங்களில் நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் இந்தியா போன்ற அதிக அனுபவ வீரர்களை கொண்ட அணியில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த மூன்று சிறப்பான கிரிக்கெட் வீரர்களிடம் அதிகபடியான கிரிக்கெட் நுணுக்கங்கள் உள்ளன. இவர்கள் எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் திறமை கொண்டவர்கள். அணி நிர்வாகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கவலை வீரர்களின் மனநிலையில் ஏதாவது மாற்றும் ஏற்பட்டிருக்குமோ என்பதுதான். இதனால் இனிவரும் போட்டிகளில் தவறான மனநிலை இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ளது.

Quick Links