2019 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற தென்னாப்பிரிக்கா தகுதியானதே என்பதற்கான 3 காரணங்கள்

2019wc: SA vs NZ
2019wc: SA vs NZ

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு மற்றொரு உலகக்கோப்பை தொடர் ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி உலக கிரிக்கெட்டில் ஒரு அதிர்ஷ்ட வசமில்லா அணியாக பல வருடங்கள் வலம் வந்து கொண்டுள்ளது.

உலகக்கோப்பை வரலாற்றில் பெரும்பாலான முறை கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணியாக தென்னாப்பிரிக்கா களமிறங்கும். ஆனால் அனைத்து முறையும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி தன்னை தானே வெளியேற்றிக் கொள்ளும் வழக்கத்தை தென்னாப்பிரிக்கா வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் உலகக் கிரிக்கெட்டில் இந்த அணிக்கு "ஷோக்கர்ஸ்" என்ற புனைபெயர் உண்டு.

1999 உலகக்கோப்பை தொடரில் லேன்ஸ்-க்ளுஸ்னர் தனி ஒருவராக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தடுமாறி வெளியேறியது. இதனை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 2003 உலகக்கோப்பை தொடரில் டக் வொர்த் லிவிஸ் விதிப்படி அதிர்ஷ்டமின்றி சொந்த மண்ணிலேயே வெளியேற்றத்தை சந்தித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இயலாமல் வெளியேறியது.

1996 உலகக்கோப்பை தொடரின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதியில் தென்னாப்பிரிக்கா வெளியேறியது, 1992ல் மழை விதிப்படி வெளியேறியது போன்றன பேரதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இதுவே தென்னாப்பிரிக்காவிற்கு "ஷோக்கர்ஸ்" என்ற பட்டத்தை தற்போது வரை நிலைத்திருக்க காரணமாக இருந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் மனநிலை மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் மோசமாக உள்ளது. ஆனால் மற்ற சுற்றுப்பயணத் தொடர்களில் பெரும் ஆதிக்கத்தை வெளிபடுத்தும்.

அடுத்தடுத்த இரு உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணியிடம் நாக் அவுட் சுற்றில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது தென்னாப்பிரிக்கா.

இருப்பினும் 2019 உலகக்கோப்பை தொடர்களில் கடந்த கால நிகழ்வை மறந்துவிட்டு ஐசிசி தரவரிசையில் ஒரு சிறந்த இடத்தில் திகழ்ந்து வந்தது தென்னாப்பிரிக்கா. நெருக்கடியை சமாளித்து சிறந்த ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா இவ்வருட உலகக்கோப்பையில் பங்கேற்று ஒரு பெரிய இடத்திற்கு செல்லும் என ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் இது தவறு என தற்போதுதான் ரசிகர்களுக்கு புரிந்துள்ளது. அனைத்து முன்னணி அணிகளுக்கு எதிராகவும் தோல்வியை தழுவி முதல் அணியாக உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய காரணத்தால் ரசிகர்களுக்கு அந்த அணியின் மீதுள்ள வெறுப்பு அதிகமாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா தற்போது வரை அணி நிர்வாக குழுவையும், தனது அணி வீரர்களை மட்டுமே குறை கூறி வருகிறது. ஆனால் அவர்கள் களத்தில் செய்த தவறை பார்க்க தவறுகிறார்கள். நாம் இங்கு தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையிலிருந்து வெளியேற தகுதியானதே என்பதற்கான 3 காரணங்களை காண்போம்.

#1 சொதப்பலான ஃபீல்டிங்

Poor fielding from SA
Poor fielding from SA

தென்னாப்பிரிக்க அணி 2019 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை ஃபீல்டிங்கில் தலைசிறந்து விளங்கியது. தற்கால ஃபீல்டிங் நுணுக்கங்கள் மற்றும் சிறப்பான செயல்திறனை கொண்ட ஒரே மனிதர் ஜான்டி ரோட்ஸ். தற்போது வரை உலகின் தலைசிறந்த ஃபீல்டராக இவர் வலம் வருகிறார்.

1999 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹேர்செல் கிப்ஸ், ஸ்டிவ் வாக்ஸின் கேட்சை தவறவிட்டு பெரும் சோதனைக்கு உள்ளாக்கி தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது தென்னாப்பிரிக்கா. இதே நிகழ்வைத்தான் 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராகவும் செய்து தொடர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண கேட்சுகள், சற்று கடினமாக கேட்சுகள், ரன் அவுட் என பலவற்றை தவறவிட்டு டேவிட் மில்லர் ஒரு பெரிய வில்லனாக இந்த போட்டியில் இருந்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் கேட்சை டேவிட் மில்லர் தவறவிட்டதன் காரணமாக அதே அந்த அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா இதனை பயன்படுத்தி கொண்டு சதம் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸியும் ரோகித் சர்மா கேட்சை 1 ரன்னில் தவறவிட்டார். தென்னாப்பிரிக்கா தனது ஆட்டத்தை பெரும் கிரிக்கெட் தொடர்களில் சொதப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது.

#2 திணறிய மனநிலை

2019 wc:SA vs Nz
2019 wc:SA vs Nz

தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்ய களமிறங்கும் போது போதிய நம்பிக்கை இல்லாமல் களமிறங்குகிறார்கள். குவின்டன் டிகாக் மற்றும் டேவிட் மில்லர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் தட்டுத் தடுமாறி பெரும் இக்கட்டான சுழ்நிலைக்கு தள்ளப்பட்டு தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறுகின்றனர். கேப்டன் டுயுபிளஸ்ஸி சுமாரண பங்களிப்பை அணிக்கு அளித்து வந்தாலும் மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்தை வெளிபடுத்த தவறுகின்றனர்.

நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹாசிம் அம்லா சிறப்பாக டாப் ஆர்டரில் பங்களிப்பை அளித்திருந்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒரு சரியான மனநிலையின்றி சொதப்பினர். வென் டேர் துஸன் மிடில் ஆர்டரில் நிலைத்து விளையாடினார். ஆனால் மற்ற வீரர்கள் அவருக்கு ஆதரவளித்து விளையாட தவறினர். ரன் அடிக்கும் நேரத்தில் சொதப்பி தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். குறைவான ரன் ரேட் மற்றும் குறைவான இலக்கை மட்டுமே தென்னாப்பிரிக்காவால் நிர்ணயிக்க முடிந்தது.

தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வென் டேர் துஸன் மற்றும் கிறிஸ் மோரிஸிடம் எவ்வாறு சுதந்திரமாக விளையாட வேண்டும் என கற்க வேண்டும். இவர்கள் இருவரும் நியூசிலாந்திற்கு எதிரான கடந்த போட்டியில் நிலையான ஆட்டத்தை விளையாடியது குறிப்பிடத்தக்கது.

#3 ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் தவறான முடிவுகள்

AB Dewilliers
AB Dewilliers

நீங்கள் தலைப்பை படிக்கும் போதே புரிந்திருப்பீர்கள். கடந்த கால உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஏபி டிவில்லியர்ஸை இவ்வருட உலகக்கோப்பை தொடரில் விளையாடததே தென்னாப்பிரிக்க அணி வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது.

ஏபி டிவில்லியர்ஸ் தற்கால கிரிக்கெட்டின் லெஜன்டாக வலம் வருகிறார். ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மோசமான முடிவு அவர்களுக்கு எமனாக அமைந்துள்ளது. கடைசியாக ஒரு உலகக்கோப்பையை ஏபி டிவில்லியர்ஸ் பங்கேற்க வேண்டும் என்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்திற்கு மாறாக 2018ன் மத்தியில் தனது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் 2019 உலகக்கோப்பையில் தான் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்த ஏபிடிவில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்தது அந்நாட்டு தேர்வுக் குழு.

இக்கட்டான சூழ்நிலையில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அணிக்கு எதிராக செயல்பட்டதற்கு அந்நாட்டு நிர்வாகம் எடுத்த முடிவு சரியானதுதான் என பல கிரிக்கெட் நிபுணர்கள் நம்பினர். இருப்பினும் சிலர் ஏபி டிவில்லியர்ஸின் உலகக்கோப்பையில் விளையாடும் முடிவை தென்னாப்பிரிக்கா நிராகரித்திருக்க கூடாது என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

அத்துடன் சில தென்னாப்பிரிக்க வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினர். இது அந்த அணிக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. பல விவாதங்கள் தென்னாப்பிரிக்க அணியில் நிலவியதன் காரணமாக பல தவறான எண்ணங்கள் ஏற்பட்டு வீரர்களின் மனநிலையை குலைத்தது.

தென்னாப்பிரிக்க நிர்வாகம் ஏபி டிவில்லியர்ஸை அணியில் சேர்க்காததற்கு மற்றொரு காரணமாக அந்த அணி ஏற்கனவே தயார் செய்திருந்த இளம் வீரர்களை கொண்ட உலகக்கோப்பை அணியும் ஒரு காரணம்.

டுயுபிளஸ்ஸி, ரபாடா மற்றும் தாஹீரை வைத்து சமாளித்து வருகிறார். ஃபீல்டர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்து கேட்சுகளை தவறவிடுகின்றனர். மற்றும் பேட்ஸ்மேன்களின் தவறான ஷாட் தேர்வு. டீகாக் ஒரு சரியான மனநிலையுடன் இல்லை. நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் கானே வில்லியசன் பேட்டில் பட்ட பந்தை கேட்ச் பிடித்தார் டிகாக். ஆனால் அதனை சரியாக கவனிக்காத டிகாக் மூன்றாவது அம்பையரிடம் முறையிடவில்லை. களநடுவரும் இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் கானே வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

மேற்கண்ட முடிவுகளினால் தென்னாப்பிரிக்கா தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்கா 2019 உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now