யாரும் அறிந்திராத இந்தியா மற்றும் வங்கதேசம் போட்டியில் நடந்த சாதனை துளிகள்...

KL Rahul returned to form on Tuesday
KL Rahul returned to form on Tuesday

2019 உலகக்கோப்பை தொடரின் 40வது ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மறுமுனையில் வங்கதேசம் இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. பௌலர்களுக்கு சிறிது உதவாத இம்மைதானத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டனின் முடிவை நிருபிக்கும் வகையில் 180 ரன்கள் பார்டனர் ஷீப் செய்து விளையாடினர்.

ரோஹீத் சர்மா தனது 25வது சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். அத்துடன் 2019 உலகக்கோப்பை தொடரில் 4வது சதத்தினை நிறைவு செய்தார். லோகேஷ் ராகுல் இவருக்கு ஆதரவளித்து 92 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். இருப்பினும் மிடில் ஓவரில் இந்திய பேட்டிங் மளுங்க, ரிஷப் பண்டின் 41 பந்துகளில் 48 ரன்களும், தோனியின் 33 பந்துகளில் 35 ரன்களும் இந்திய அணியின் இலக்கை 315ஆக உயர்த்தியது.

சேஸிங்கில் சிறப்பான இந்திய பந்துவீச்சை சமாளிக்க வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறி தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ராவின் ஆரம்ப ஓவர்களை எதிர்கொள்ள மிகவும் தடுமாறினார்கள் வங்கதேச வீரர்கள். ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சை சற்று சமாளித்து வங்கதேசம் மீண்டெழுந்தபோது சரியான பேட்ஸ்மேன்கள் இல்லா காரணத்தால், இந்திய அணியின் வசம் வெற்றி வாய்ப்பு மாறியது.

சிறு கால இடைவெளியில் வங்கதேச நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய காரணத்தால் அந்த அணியால் மீள இயலவில்லை. ஷகிப் அல் ஹாசன் 72 பந்துகளில் 66 ரன்களை குவித்திருந்தாலும், 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஜாஸ்பிரிட் பூம்ரா 10 ஓவர்களை வீசி 55 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாம் இங்கு இப்போட்டியில் யாரும் அறிந்திராமல் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் பற்றி காண்போம்.

#1 இவ்வுலகக் கோப்பையில் பவர் பிளே ஓவரில் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட்டது

The Indian openers showed their intent right from the beginning.
The Indian openers showed their intent right from the beginning.

பல்வேறு நகைப்பற்கு உள்ளாக்கப்பட்ட இந்திய அணியின் பவர்பிளே ரன்கள், தற்போது இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் மாற்றியமைத்து ஆரம்ப பந்திலிருந்தே அடித்து விளையாட ஆரம்பித்தனர். இரு தொடக்க ஆட்டக்காரர்களும் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு முதல் பவர்பிளை ஓவர்களான முதல் 10 ஓவரில் 69 ரன்கள் குவித்தனர். இதுவே இவ்வருட உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அதிகபட்ச பவர்பிளே ரன்களாகும். இப்பவர்பிளேவில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.

#2 ஒரு உலகக்கோப்பை தொடரில் 500+ ரன்களை விளாசிய இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன்

Rohit is currently leading run-scorer of this World Cup
Rohit is currently leading run-scorer of this World Cup

ரோஹீத் சர்மா இவ்வுலகக்கோப்பை தொடரில் தனது சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி தொடர் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நான்கு சதங்களிலும் இவருக்கு பெரும் அதிர்ஷ்டம் இவருக்கு அமைந்துள்ளது. ஏனெனில் ஆரம்பத்திலேயே இவரது கேட்சை எதிரணி ஃபீல்டர்கள் தவறவிட்டுள்ளனர்.

2015 உலகக்கோப்பை தொடரில் குமார் சங்கக்காரா 4 சதங்களை விளாசியுள்ளார். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு வீரரின் அதிகபட்ச சதங்களாகும். இந்த சாதனையை ரோஹீத் சர்மா சமன் செய்தார்.

அத்துடன் உலகக்கோப்பை தொடரில் 500+ ரன்களை அடித்த இரண்டாவது வீரர் ரோகித் சர்மா. இதற்கு முன் 1996ல் 523 ரன்களை சச்சின் டெண்டுல்கர் விளாசியுள்ளார். அத்துடன் 2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்களை சச்சின் குவித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா 544 ரன்களை உலகக்கோப்பை தொடரில் குவித்து அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

#3 ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவின் 50 விக்கெட்டுகள்

Hardik Pandya scalped three wickets against Bangladesh
Hardik Pandya scalped three wickets against Bangladesh

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவால் பேட்டிச்கில் ஜொலிக்க முடியவில்லை, ஆனால் பௌலிங்கில் ஜொலித்து அதனை ஈடுகட்டியுள்ளார்.

சற்று இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு இந்திய ரன் ரேட்டை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டபோது முஷ்டபிசுர் ரகுமான் வேகத்தில் டக் அவுட் ஆனார்‌.

இருப்பினும் 16வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் சௌம்யா சர்கார் வீழ்த்தப்பட்டார். இதன்மூலம் இவர் ஒருநாள் தொடரில் 50 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். மேலும் வங்கதேசத்தின் சிறப்பான பேட்ஸ்மேன் லிட்டன்ஸதாஸ் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹாசனின் விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் வெற்றி வாய்ப்பை பறித்தார்.

கேப்டன் விராட் கோலி இவரை சரியான முறையில் பயன்படுத்தி சிறு கால இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது ஷார்ட் பால் மற்றும் பவுண்ஸர் மூலம் எதிரணியின் விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்துவதில் வல்லவர். இவர் 52 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

#4 2019ல் விராட் கோலி மற்றும் ரோஹீத் சர்மாவின் 1000 சர்வதேச ஓடிஐ ரன்கள்

Virat Kohli and Rohit Sharma.
Virat Kohli and Rohit Sharma.

2019ல் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா தங்களது 1000 ரன்களை நிறைவு செய்துள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி 2019ல் 18 ஒருநாள் போட்டிகளில் 56.61 சராசரியுடன் 1019 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். இவ்வருடத்தில் கோலியின் அதிகபட்ச ரன்கள் 123 ஆகும்.

இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 57.89 சராசரியுடன் 1100 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் அடங்கும். இவ்வருடத்தில் இவரது அதிகபட்ச ரன்கள் 140 ஆகும்.

உலகக்கோப்பை தொடரில் இந்த இரு பேட்ஸ்மேன்களும் இந்திய அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர். மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலையில் சிறப்பான பேட்டிங் இல்லாத காரணத்தால் அந்த பொறுப்பையும் ஏற்று ரோஹீத் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடி வருகின்றனர். மிடில் ஓவரில் இவரது அதிரடி பேட்டிங் இந்திய அணிக்கு பெரும் பக்கபலமாக உள்ளது. இவர்களது விக்கெட்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் ரன் ரேட் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இவர்கள் இருவரும் இவ்வுலகக் கோப்பை தொடரின் முடிவில் பெரும் ரன்களை குவிப்பார்கள் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Quick Links

Edited by Fambeat Tamil