நேற்று மான்செஸ்டரில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய போட்டியில் இந்திய அணி 125 என்ற அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது 2019 உலகக் கோப்பையின் 34வது போட்டியாகும்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி எவ்வித மாற்றமின்றியும், மேற்கிந்தியத் தீவுகளில் ஈவன் லீவிஸீற்கு பதிலாக சுனில் ஆம்ரீஸும், ஆஸ்லி நர்ஸிற்கு பதிலாக ஃபேபியன் ஆலனும் களமிறக்கப்பட்டனர். ஆரம்பத்திலேயே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கேமர் ரோச் வீசிய பந்தில் ஷை ஹோப்-டம் கேட்ச் ஆனார். பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி இனைந்து பார்டனர்ஷீப் அமைத்து விளையாடினர். கே.எல்.ராகுல் 48 ரன்கள் இருந்த போது ஜேஸன் ஹோல்டர் வீசிய வேகத்தில் வீழ்ந்தார்,
பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் சொற்ப ரன்களில் வெளியேறினர். மகேந்திர சிங் தோனி விராட் கோலியுடன் கைகோர்த்து நிலையான ஆட்டத்தை இந்தியாவிற்கு அளித்தார். விராட் கோலி 72 ரன்களின் தன் விக்கெட்டை இழந்த பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தினார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. கேமார் ரோச் 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர், காட்ரேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷை ஹோப் ஆரம்பத்திலே முகமது ஷமியின் வேகத்தில் வீழ்த்தப்பட்டனர். பொறுப்பான ஆட்டத்தை மேற்கொள்வார்கள் என எண்ணிய ஹட்மைர், பிராத்வெய்ட், ஜேஸன் ஹோல்டர் அனைவரும் ஏமாற்றினர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் 34.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் யுஜ்வேந்திர சகால் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் & ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
விரிவான ரன் விவரம்: இந்தியா 268/7 (50), ( விராட் கோலி 72, தோனி 56*, கேமார் ரோஜ் 3/36)
மேற்கிந்திய தீவுகள் 143/10 (34.2), ( சுனில் ஆம்ரீஸ் 31, நிக்கலஸ் பூரான் 28, முகமது ஷமி 4/16)
முடிவு: இந்தியா 125 ரன் வித்தியாசத்தில் வெற்றி
நாம் இங்கு இப்போட்டியில் நிகழ்ந்த சில புள்ளி விவரங்களைப் பற்றி காண்போம்:
அணிகளின் புள்ளி விவரங்கள்:
இந்தியா:
இந்திய அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. இதுவே உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாகும். 2011 உலகக்கோப்பை தொடரில் சென்னையில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான குழு சுற்றில் இந்தியா 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவே இந்திய அணியின் ஓடிஐ வரலாற்றில் அந்நிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் இந்திய அணியிடம் 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதுவே இந்திய அணிக்கு எதிராக உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது குறைவான ரன்களாகும். 1983 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ஓவர்கள் முடிவில் 140 ரன்களுக்கு மேற்கிந்திய தீவு ஆல்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.