உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஐசிசி-யின் மிகப்பெரிய தொடரான 2019 உலகக் கோப்பை தொடருக்கு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே உலகக் கோப்பை போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் தங்களை சிறப்பான முறையில் தயார் செய்து வருகின்றனர். உலகக் கோப்பை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எந்த நேரத்திலும் உலககோப்பை போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட தங்கள் அணியினை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவுக்க வாய்ப்புள்ளது.
இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாந்த், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் சேர்ந்து சரியான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளித்து ஒரு சிறந்த இந்திய அணியை உலக கோப்பைக்காக உருவாக்கி வைத்துள்ளனர். சில சமயங்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்துக்களுக்கு இணங்க சில வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்பபளிக்கப்படும். இது சிலசமயம் சரியாக அமையும் , சில சமயம் மிகவும் தவறானதாக அமையும்.
இருப்பினும் இந்த முறை நிறைய தடவை இந்திய அணிக்கு சரியாக அமைந்து நிறமை வாய்ந்த வீரர்களை அடையாளம் காணப்பட்டு, உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். பெரும்பாலும் அணியில் நீண்ட நாட்களாக தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தும் வீரர்கள் தான் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இந்திய தேர்வுக்குழு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய அணியை அறிவித்தது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த இந்திய அணியில் சில எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் சில எதிர்பாரத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் 2019 ஐசிசி உலக கோப்பைக்கு சரியான 15 வீரர்களை அறிவிக்க மேற்கொண்ட மாற்றங்கள் என தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தற்போதைய இந்த மாற்றத்தினால் உலகக் கோப்பை அணியில் சில மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளது.
இந்த மாற்றங்களினால் இந்திய உலகக் கோப்பை அணிக்கு இடையூறு நிகழ அதிக வாய்ப்புள்ளது.
1. கே.எல்.ராகுல் தேர்வு
கே.எல்.ராகுலுக்கு இந்திய தேர்வுக்குழு மற்றொரு வாய்ப்பை ஆஸ்திரேலிய தொடரில் வழங்கியுள்ளது. இவரை இந்திய அணியில் மாற்று தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது நம்பர்-4 பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் அந்த இடத்திலோ உலகக்கோப்பை அணியில் விளையாட வைப்பதற்காக, தற்போது நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் ஒரு இறுதி வாய்ப்பாக வழங்கியுள்ளது அணி நிர்வாகம். கர்நாடக தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 2018ல் இவரது ஆட்டத்திறன் மிக மோசமாக இருந்தது. டி20,டெஸ்ட்,ஓடிஐ என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 2018ல் மொத்தமாக 2 சதங்களே இவரிடமிருந்து வந்தது. இதனால் இவர்மீது இருந்த நம்பிக்கை தற்போது முழுவதுமாக நீங்கியுள்ளது. எனவே ஆஸ்திரேலிய தொடரில் இவரது ஆட்டத்திறனை வைத்து உலகக் கோப்பை அணியில் இவரை சேர்த்தால் அது சரியாக வர வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.