உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக,  அணி தேர்வில் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு எடுத்த 3 தவறான முடிவுகள்

Indian Team Chief selector Mr.MSK.Prasanth
Indian Team Chief selector Mr.MSK.Prasanth

3. ரவீந்திர ஜடேஜாவின் நீக்கம்

Ravindra Jadeja
Ravindra Jadeja

2019 உலக கோப்பை நடைபெற உள்ள இங்கிலாந்து ஆடுகளம் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் உலகக் கோப்பை தொடரில் ஒரு முக்கிய வீரர்களாக அணியில் திகழ்வர். குறிப்பாக மிடில் ஓவரில் சுழற்பந்து வீச்சாளின் தேவை அனைத்து அணிகளுக்கும் இருக்கும். கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தங்களது சுழற்பந்து வீச்சை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். எதிரணி எந்த அணியாக இருந்தாலும் சரி, அந்த அணியின் பேட்டிங்கை நொறுக்கும் திறமை இவர்கள் பெற்றுள்ளதால் உலகக் கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலுமே இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்குழு இந்த இருவரை மட்டுமே நம்பாமல் மாற்று சுழற் பந்துவீச்சாளர்களை தேடி வருகின்றனர்.

இந்திய டெஸ்ட் அணியில் ஜடேஜா ஒரு வழக்கமான பந்துவீச்சாளராக அணியில் இடம்பெற்று வருகிறார். அதன்பின் 2018 ஆசிய கோப்பை தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடி தனது சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் ஜடேஜாவை இந்திய அணியிலிருந்து நீக்கி தவறான முடிவை எடுத்துள்ளனர் தேர்வு குழுவினர். அனுபவம் வாய்ந்த ஒரு சிறந்த வீரரை தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியிலிருந்து நீக்கி மிகப்பெரிய தவறை செய்துள்ளது இந்திய தேர்வுக்குழு.

பல திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தாலும், சில சமயங்களில் அவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படாமல் அணியிலிருந்து நீக்கியுள்ளது இந்திய தேர்வுக்குழு. இந்திய தேர்வுக்குழு தற்போது உலககோப்பை இந்திய அணிக்கு சில வீரர்களை மட்டுமே அடையாளம் கண்டுள்ளது. மற்ற வீரர்களை சரியாக தேர்ந்தெடுக்காமல் வீரர்களை மாற்றி கொண்டே வருகிறது. உலககோப்பை தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் இந்த மாதிரியான பிரச்சினைகள் அணியில் நிலவுவது மிகுந்த வருத்தத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அளித்துள்ளது.

உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியின் தேர்வில் தேர்வுக்குழு இன்றுவரை ஒரு சரியான முடிவை எடுத்ததாக தெரியவில்லை. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பிலே இதனை நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே உலகக் கோப்பை தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் அணியை நன்றாக சீரமைத்து அற்புதமான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு உலகக் கோப்பை தொடருக்கு அனுப்ப வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Quick Links

Edited by Fambeat Tamil