இந்தியாவின் தேசிய விளையாட்டாக கிரிக்கெட் இல்லையென்றாலும் ஒரு மதமாகவே இங்கு போற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை விட மிகுந்த பிரபலமான போட்டியாக கிரிக்கெட் கருதப்படுகிறது.1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முதன்முதலாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற பிறகு, இந்த போட்டி மிகவும் பிரபலமடையத் துவங்கியது.
இன்று உலக அளவில் தங்களது சொந்த நாட்டிற்காக விளையாட பல லட்சம் இந்திய இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், கடுமையான உழைப்பு, போற்றக்கூடிய அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான பங்களிப்பு போன்ற காரணங்களால் வெகு சிலரே இந்திய சீனியர் அணியில் இடம் பெறுகின்றனர். நவீன சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. இருப்பினும், பல திறமையான பேட்ஸ்மேன்கள் இந்திய சீனியர் அணியில் நெடுநாட்களுக்கு இடம்பெற முடியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு இந்திய அணியில் சிறப்பாக விளையாடி திடீரென தங்களது முடிவை கண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ராபின் உத்தப்பா:
இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 86 ரன்கள் அடித்து இந்திய அணி ரசிகர்களை கவர்ந்தவர், ராபின் உத்தப்பா. அந்த காலகட்டத்தில் இவர் பல பந்துவீச்சாளர்களுக்கு அபாரமான பேட்ஸ்மேனாகவே தெரிந்தார். கர்நாடக சேர்ந்தவரான இவர். 2006-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பின்னர் சில காலம் தொடர்ந்து நீடித்து வந்தார். 2007ஆம் ஆண்டில் உலகக்கோப்பை தொடரில் இவர் இடம்பெற்றிருந்தார். இந்திய அணியின் மோசமான உலகக்கோப்பை தொடராகவே அது அமைந்தது. இதன் பின்னர், அதே ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணிவெல்ல இவரும் ஒரு காரணமாய் அமைந்தார். அந்த தொடரில் நடைபெற்ற சில ஆட்டங்களில் மறக்கதக்க முடியாத அளவிற்கு தமது பங்களிப்பினை அளித்துள்ளார். அணியின் எந்த ஒரு பேட்டிங் ஆர்டரிலும் களமிறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை கலங்கடித்தார். எதிர்பாராத விதமாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இவரது ஃபார்ம் கேள்விக்குறியாகியதால் அதன் பின்னர் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த போதிலும் ஒரு அரை சதம் மட்டுமே கண்டு, அதன் பின்னர் நடைபெற்ற 7 போட்டிகளில் மிகுந்த ஏமாற்றம் அளித்தார். எனவே, இந்திய அணியிலிருந்து இவர் நிரந்தரமாக நீக்கப்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இருப்பினும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 934 ரன்களை குவித்துள்ளார்.