இந்திய டி20 கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்

Umesh Yadav gave away 14 runs in the final over in the first T20
Umesh Yadav gave away 14 runs in the final over in the first T20

டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை சாதரணமாக நினைத்த இந்திய அணியை துவம்சம் செய்து டி20 தொடரை இந்திய மண்ணிலேயே வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றோர் இந்திய அணியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் என்பது இந்த தொடர் இந்திய அணிக்கு புரிய வைத்தது. உள்ளுர் கிரிக்கெட்டில் நன்றாக ஆட்டத்திறன் வெளிபடுத்தும் சில வீரர்களுக்கு ஆஸ்திரேலிய டி20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டு நன்றாக விளையாடும் பட்சத்தில் 2019 உலகக் கோப்பையில் மாற்று வீரர்களாக களமிறக்கலாம் என இந்திய தேர்வுக்குழு திட்டமிட்டிருந்தது.

உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் உலகக் கோப்பை இந்திய அணியில் தங்களது இடத்தை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் பட்சத்தில் உலகக் கோப்பையில் அவர்களது இடம் உறுதி செய்யப்படலாம் என தேர்வுக்குழு கூறியிருந்தது. அவ்வாறு பார்த்தால் குறைந்த வீரர்கள் மட்டுமே நன்றாக விளையாடியுள்ளனர், அதிக வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே இந்த இரு டி20 தொடரில் அளித்துள்ளனர்.

முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த இரண்டாவது டி20யிலும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. சில் வீரர்களின் மோசமான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

இந்திய தேர்வுக்குழு 2019 ஓடிஐ உலகக் கோப்பைக்கும், ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பைக்கும் இந்திய அணியை தேர்வு செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய டி20 தொடரை இழந்ததன் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி காண்போம்.

#3.சித்தார்த் கவுல்

Kaul hasn't been able to replicate his IPL form at international level
Kaul hasn't been able to replicate his IPL form at international level

சித்தார்த் கவுல் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரு முக்கியமான பந்துவீச்சாளராக சிறப்பாக விளையாடியுள்ளார். இவரது பௌலிங் டெத் ஓவரில் மிகவும் அதிரடியாக இருக்கும். கவுல்-ன் சிறப்பான பந்துவீச்சு எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை சாய்க்கும் வகையில் இருக்கும். இருப்பினும் சர்வதேச டி20யில் இவரது பௌலிங் மிகவும் மோசமானதாக உள்ளது.

கவுல் கடந்த வருடத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார். ஆனால் அவரது மோசமான ஆட்டத்தால் இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். இருப்பினும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார். இரண்டாவது டி20யில் உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கவுலிற்கு ஆடும் XI-ல் வாய்ப்பும் கிடைத்தது.

கவுல் தான் வீசிய முதல் ஓவரை சிறப்பாக வீசி மார்கஸ் ஸ்டாய்னிஸின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்களை தன் பௌலிங்கில் ஆஸ்திரேலிய அணியிடம் அளித்தார். இவர் 3.4 ஓவரில் 45 ரன்களை தன் பௌலிங்கில் கொடுத்ததால் சர்வதேச இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#2.ரிஷப் பண்ட்

Pant needs to work on his temperament and shot selection & also control fear while though Batting Situation
Pant needs to work on his temperament and shot selection & also control fear while though Batting Situation

இளம் வீரரான ரிஷப் பாண்ட் ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் சொதப்பி வருவது இந்திய தேர்வுக்குழுவிற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கும். ஆனால் ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக உள்ளது.

இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவரது ஐபிஎல் சாதனைகளால் இந்திய ஓடிஐ/டி20 அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் இன்னும் 2019 உலகக் கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்யவில்லை. அத்துடன் டி20யில் மோசமான ஆட்டத்தால் டி20 அணியிலும் இவரது இடம் ஊசலாடிக் கொண்டுள்ளது.

மிகப்பெரிய ஷாட்களை ஆடும் திறமையுள்ள விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-டின் ஆட்டத்திறன் சீராகவும் இல்லை. அத்துடன் இக்கட்டான சூழ்நிலையில் விளையாட மிகவும் பயப்படுகிறார்.

ரிஷப் பண்ட் முதல் டி20யில் தேவையில்லாமல் ரன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தன்னை தானே அவுட் ஆக்கிக் கொண்டார். அதேபோல் இரண்டாவது டி20 போட்டியிலும் முதல் 3 பந்துகளை டாட் வைத்து விட்டு அடுத்து மெதுவாக வந்த பந்தை சாதரணமாக கையாண்டு எதிரணி வீரரிடம் கேட்ச் ஆனார். எனவே அவர் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெறுவதற்கு முன் உள்ளுர் டி20யில் சற்று கவணம் செலுத்துமாறு இந்திய தேர்வுக்குழு அறிவுறுத்துவர்.

#1.உமேஷ் யாதவ்

How many more chances for Umesh Yadav in T20s and ODIs?
How many more chances for Umesh Yadav in T20s and ODIs?

இந்திய டி20 அணியில் உமேஷ் யாதவின் தேர்வு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. விதர்பா வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய டி20 அணியின் வழக்கமான பௌலர் கிடையாது. இவர் கடைசியாக விளையாடிய டி20 தொடர் இங்கிலாந்து டி20 தொடராகும். உமேஷ் யாதவின் மோசமான பௌலிங்கில் ரன்கள் சற்று அதிகமாக சென்றதால் டி20 அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.

உமேஷ் யாதவ் இந்திய ஓடிஐ அணியின் வழக்கமான பந்துவீச்சாளர் கிடையாது. கடந்த வருடத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடினார், அதன்பின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஓடிஐ தொடரில் கழட்டிவிடப்பட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இவரது ஆட்டத்திறனை பொறுத்து 2019 உலகக் கோப்பை இந்திய அணியில் இவரது இடம் உறுதி செய்யப்படும் என தேர்வுக்குழு தெரிவித்திருந்தது. முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணி குறைந்த ரன் இலக்கை துரத்தி கொண்டிருந்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வந்தனர். ஆனால் உமேஷ் யாதவ் பவர்பிளே ஓவரில் தனது பௌலிங்கில் அதிக ரன்களை அளித்ததால் பேட்ஸ்மேன்கள் பிரஸர் இல்லாமல் விளையாடினர்.

இந்திய அணியின் மற்ற பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெத் ஓவரில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வந்தனர். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற கடைசி 6 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச வந்தார். இவரது மோசமான பந்துவீச்சின் காரணமாக ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் 14 ரன்களையும் அடித்து வெற்றி பெற்றது.

இவரது இந்த மோசமான ஆட்டத்தால் இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் இவரது உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் கனவும் தகர்ந்தது.

Quick Links