#2 ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் வாரியம் வலிமையான அணியை 2019 உலகக் கோப்பையில் அணுப்பும் விதத்தில் மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்டிற்கும் பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளது.
டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்திய ரிஷப் பண்ட் ஓடிஐ போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர் சரியாக உபயோகப்படுத்தி கொள்ளாத காரணத்தால் 2019 உலக கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பிங் இடத்திற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பிசிசிஐ அனுபவ வீரர் தினேஷ் கார்த்திகை தற்போது தேர்வு செய்துள்ளது.
இளம் வயதில் சிறப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தை கடைநிலையில் களமிறங்கி ரிஷப் பண்ட் வெளிபடுத்தி வந்தார். ஆனால் ஒரு நீண்ட இன்னிங்ஸ் ஓடிஐ கிரிக்கெட்டில் இவரிடமிருந்து வெளிபடாத காரணத்தால் 2019 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார் ரிஷப் பண்ட். தினேஷ் கார்த்திக் கடந்த இரு வருடங்களாக இந்திய அணியின் ஃபினிஷராக உள்ளார். அத்துடன் தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் சிறந்த கடைநிலை பேட்ஸ்மேனாகவும் உள்ளார்.
வருங்காலத்தில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக திகழ ரிஷப் பண்ட்-டிற்கு அதிக வாய்ப்புள்ளது.