ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதை தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி உலகின் நம்பர்-1 ஓடிஐ அணியாக இந்தியா நிகழும் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான ஆட்டத்திறனால் ஆஸ்திரேலியா 32 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்திய கேப்டன் கோலி ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வீரர்கள் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியில் நாதன் குல்டர் நில்-ற்கு பதிலாக ஜெ ரிச்சர்ட்சன் களமிறங்கினார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாட ஆரம்பித்தனர். கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய ஆரோன் ஃபின்ச் தனது பழைய ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்தார். க்வாஜா மற்றும் ஆரோன் ஃபின்ச் சரியாக ஸ்ட்ரைக் மாற்றி நிறைய பவுண்டரிகளை விளாசினர். இந்திய அணியின் மிடில் ஓவர் பந்துவீச்சை பார்த்தபோது ஆஸ்திரேலிய அணி எளிதாக 350 ரன்களை கடந்து விடும் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலிய அணி 193 என்ற அதிக பார்ட்னர் ஷிப்புடன் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஒரு முனையில் இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிய, விராட் கோலி வழக்கம்போல தனது சிறப்பான ஆட்டத்தை விளையாடி வந்தார். தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோர் விராட் கோலியுடன் சிறிது நேரம் பார்ட்னர் ஷிப் செய்தாலும், முழு பங்களிப்பை வெளிபடுத்தாமல் ஆட்டமிழந்தனர். மற்றுமொரு சேஸிங்கை செய்யும் நோக்கில் விளையாடி வந்த இந்திய கேப்டன் விராட் கோலி தனது 41வது சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். இவரின் சிறப்பான முயற்சி இருந்தும் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாம் இங்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான 3 காரணங்களை காண்போம்.
#3 ஆஸ்திரேலியாவின் சிறப்பான தொடக்க பார்ட்னர் ஷிப்
![Usman khawaja & Aaron finch](https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/03/8e753-15521040989092-800.jpg 1920w)
கடைசி சில மாதங்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எதிரணியின் தொடக்க ஆட்டக்காரர்களை முதல் பவர்பிளே ஓவரிலே வீழ்த்தி விடுவர். களத்தில் நீண்ட நேரம் அவர்களை விளையாட விடாமல் குறைந்த ரன்களிலே அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்தி வெளியேற்றி விடுவர். ஆனால் இன்றைய போட்டியில் முகமது ஷமி-ஜஸ்பிரிட் பும்ரா இதனை சரியாக செய்யவில்லை.
கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த ஆரோன் ஃபின்ச் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஃபின்ச் மற்றும் உஸ்மான் க்வாஜா சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. சரியாக ஸ்ட்ரைக் செய்து எளிதாக வந்த பந்தை மட்டும் அதிரடியாக விளையாடி வந்தனர்.
வேகப்பந்து வீச்சில் விக்கெட் எடுக்க தவறினாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தனர். ஆனால் குல்தீப் யாதவ், ஜடேஜா, கேதார் ஜாதவ் ஓவரிலும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் எவ்வித இடர்பாடின்றி ரன்களை குவித்து சிறப்பாக விளையாடினர். இந்திய பந்துவீச்சும் சரியாக சோபிக்கவில்லை.
#2 இந்திய தொடக்க வீரர்களின் தொடர் சொதப்பல்
![Shikar dhawan worst Shot selection. Last 15 Innings he scored only 1 half century. He is now Bad Batting Form](https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/03/bec61-15521044888449-800.jpg 1920w)
இந்திய அணியின் மிகுந்த பலமே தொடக்க ஆட்டக்காரர்கள் தான். இந்திய அணியின் கடந்த கால வெற்றிகளை பார்க்கும் போது இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும். முக்கியமாக சேஸிங் செய்யும்போது டாப்-3 பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் தற்போது ஷிகார் தவான் அல்லது ரோகித் சர்மா இரண்டில் ஏதேனும் ஒருவர் தான் விராட் கோலி-யுடன் சேர்ந்து சிறிது நேரம் விளையாடுகின்றனர்.
கடந்த சில போட்டிகளில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களுமே மோசமான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வருகின்றனர். ரோகித் சர்மா தற்போது வரை ஒரு குறைவான ரன்களையாவது அடிக்கிறார், ஆனால் தவான் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறுகிறார்.
ராஞ்சியில் நடந்த போட்டியிலும், தவானின் சொதப்பல் தொடர்ந்தது. முதல் சில பந்துகளில் பவுண்டரிகள் ஏதும் விளாசாமல் தடுத்து விளையாடினார் தவான். தனது வழக்கமான ஆட்டத்திறனை இழந்துள்ள டெல்லி தொடக்க ஆட்டக்காரர் தவான் தவறான ஷாட் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் ரோகித் சர்மா சிறந்த தொடக்கத்தை அளித்து பவுண்டரிகளை விளாசி வந்தார். ஆனால் முதல் 4 ஓவர்களிலே பேட் கமின்ஸின் இன்-ஸ்விங்கை கணிக்க தவறி தனது விக்கெட்டை இழந்தார் ரோகித் சர்மா.
#1 இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர்
![Ambati Rayudu Bad form Continued Last few Innings. His world cup spot is now Doubt.](https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/03/c48a8-15521046355687-800.jpg 1920w)
ஒரு கிரிக்கெட் அணி தனது தொடக்க வீரர்களை முன்னதாக இழந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். விராட் கோலி-யை தவிர வேறு யாரும் இந்த பங்களிப்பை இந்திய அணிக்கு அளிக்கவில்லை. இந்திய கேப்டன் விராட் கோலியை தவிர வேறு யாருமே 50 ரன்களை கூட தாண்டவில்லை. அம்பாத்தி ராயுடு களத்தில் தொடர்ந்து தனது தடுமாற்றத்தை வெளிபடுத்தி வந்தார். மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த ராயுடுவை பேட் கமின்ஸ் தனது வேகத்தில் வேகத்தில் முதல் 8 ஓவர்களிலேயே வீழ்த்தினார்.
எம்.எஸ்.தோனி தனது சொந்த மண்ணில் சிறப்பான தொடக்கத்தை அளித்து சில பெரிய ஷாட்களை விளாசி வந்தார். நேராக ஷாட் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோனி தனது விக்கெட்டை இழந்தார். கேதார் ஜாதவும் இதேப்போல் சற்று நிதானமாக விளையாடி வந்தார். நிதானமாக விளையாடி வந்த கேதார் ஜாதவ் மோசமான ஷாட் தேர்வால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
விஜய் சங்கர் விராட் கோலியுடன் இனைந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை உயர்த்தினார். கோலி அதிக ரன்களை அடிக்கும் நோக்கில் விளையாடி வந்தார். மிகுந்த நெருக்கடியில் விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலி, எதிர்பாரா சமயத்தில் தனது விக்கெட்டை இழந்தார்.