கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே கதறி அழுத  தருணங்கள்!!!

4 instances when cricket players cried on the field
4 instances when cricket players cried on the field

#3) தென்னாபிரிக்க அணி

South Africa stumbles again
South Africa stumbles again

தென்னாபிரிக்க அணி தற்போதுவரை ஒரு ஐசிசி கோப்பைகளை கூட வென்றது கிடையாது. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இந்த அணியணியானது நாக் அவுட் போட்டிகள் வந்தால் மட்டும் சொதப்பி விடும். அந்த வகையில் 2015 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 281 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து அணி இறுதி கட்டத்தில் எலியட்டின் அபார ஆட்டத்தின் மூலம் போட்டியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும். இந்த போட்டியை பொறுத்தவரையில் தென்னாபிரிக்க அணியே வெற்றி பெரும் நிலையில் இருந்தாலும் கடைசில் ஏற்பட்ட இந்த தோல்வியினால் இம்முறையும் தங்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியாத சோகத்தில் தென்னாபிரிக்க வீரர்கள் அனைவரும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுது தங்களது ஏக்கத்தினை வெளிப்படுத்துவர். இது இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது.

#4) யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்

Indian Cricket team become World Champions
Indian Cricket team become World Champions

2011 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் 28 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதுவும் இறுதி போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த இலங்கை அணியை வீழ்த்தியது. கம்பிர் மற்றும் தோனியின் கூட்டு முயற்சியால் இந்த போட்டியை இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியினை இந்திய அணி மட்டுமல்லாமல் நாடே கொண்டாடியது. இந்த தருணத்தில் தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாத ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மைதானத்தில் அழுது தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

Quick Links