இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் செல்ல உள்ளது. இதில் முதல் தொடராக டி20 ஆகஸ்ட் 3 அன்று தொடங்க உள்ளது. இந்திய அணி குறிப்பிட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் வகைகளான ஓடிஐ மற்றும் டி20 தொடர்களில் சிறந்த ஆட்டத்திறனுடன் செயல்படும். இதற்கு சான்றாக சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இந்தியா வென்றதை கூறலாம். உலக கிரிக்கெட்டை ஆண்டு வரும் இந்திய அணி 2006ற்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததில்லை. இதற்கு காரணம் மேற்கிந்தியத் தீவுகளின் பெரும் கிரிக்கெட் வீரர்களாக வலம் வந்த பிரைன் லாரா, ராம்நரேஷ் சர்வான் மற்றும் சிவ்ரநைன் சந்தர்பால் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதுதான்.
மறுமுனையில் இந்திய அணி நிர்வாகம் புதிய மற்றும் திறமை மிக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அடையாளம் கண்டு அந்நிய நாடுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் நிலைநாட்டுகிறது. அத்துடன் 2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் தோல்வியடைந்து இந்திய வெளியேறிய காரணத்தால் அதனை மறைவுக்கு கொண்டு வர இந்திய அணிக்கு பல வெற்றிகள் தேவைப்படுகிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று முழு உத்வேகத்துடன் செயல்படுவார்கள் எனத் தெரிகிறது. கடந்த காலங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சில டாப் கிரிக்கெட் வீரர்கள் சதம் அடிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நாம் இங்கு ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளில் சதம் விளாசாத 4 டாப் பேட்ஸ்மேன்களைப் பற்றி காண்போம்.
#4 ரோகித் சர்மா
2019 உலகக்கோப்பை தொடரின் அதிரடி நாயகன் இந்தியாவின் "ஹீட்மேன்" ரோகித் சர்மா. இந்த தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்று 70 சராசரியுடன் 648 ரன்களை ரோகித் சர்மா விளாசினார். இதன்மூலம் அளவு கடந்த நம்பிக்கையை அவர் தன் மேல் கொண்டுள்ளார். இவர் கண்டிப்பாக எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்த அணியின் சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு மிகப்பெரிய தொடக்க ஆட்டக்காரராக உலகில் வலம் வரும் ரோகித் சர்மா இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் சதம் விளாசதது சற்று ஆச்சரியமாத்தான் உள்ளது.
இவர் 2007ல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பெற்று ஒரு சில போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் கரேபியன் மண்ணில் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளனர் ஆனால் பெரிய இன்னிங்ஸாக வெளிபடுத்த தவறியுள்ளனர். ரோகித் சர்மா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 14 போட்டிகளில் பங்கேற்று 54.33 சராசரியுடன் கிட்டத்தட்ட 500 ரன்களை நெருங்கியுள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். ரோகித் சர்மா மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் விளையாடி கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு மேலாக இருக்கும். எனவே கரேபியின் நாட்டில் ரோகித் சர்மாவின் முதல் சதம் கூடிய விரைவில் காணலாம்.