கிரிக்கெட் வீரர்கள் களத்தில் அழுது மனதை உருக்கிய அந்த ஐந்து நிகழ்வுகள்

Enter caption

#5.யுவராஜ்சிங் & ஹர்பஜன் சிங்

<p>Enter caption

2011 உலகக்கோப்பையில் இந்தியா ஒரு சிறந்த அணியாகவும் ,நல்ல வழிகாட்டியுடனும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.களத்தில் அனல் பறக்கும் போட்டியாகும் அமைந்தது.இந்த நாளில் இந்தியா 28 வருடங்களுக்கு பிறகு 1996 சேம்பியன் இலங்கையை வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பையை மும்பை வான்கடே மைதானத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செயத இலங்கைக்கு ஆரம்பம் முதலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் இந்திய பந்துவீச்சாளர் ஜாஹிர் கான்.அவர் வீசிய முதல் 5 ஓவரில் 3 மெய்டன் மற்றும் உபுல் தரங்காவின் விக்கெட் ஆகியவற்றை செய்து அசத்தினார். ஜெயவர்த்தனே மட்டும் நன்றாக கணித்து விளையாடி சதத்தினை விளாசினார்.இறுதியில் இவர் மட்டுமே இலங்கை பக்கம் அதிக ரன்களை குவித்தார். இலங்கை 50 ஓவர் முடிவில் 274 ரன்களை குவித்தது.

இந்தியா 50 ஓவரில் 275 ரன்களை சேர்த்து தனது இரண்டாவது உலகக்கோப்பையை கைப்பற்றும் என்ற நோக்கில் அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.இந்திய தொடக்க ஆட்டக்காரரான சேவாக் தனது இரண்டாவது பாலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்த சில நிமிடங்களில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் தெண்டுல்கரும் தனது விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா 32ற்கு 2விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

சச்சின் விக்கெட்டிற்கு பிறகு கோலி மற்றும் காம்பீர் ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது.பிறகு தில்சான் வீசிய பந்தில் கோலி பொளரிடமே கேட்ச் ஆனார்.அதன் பின் இந்திய கேப்டன் அணி வரிசையில் 4வதாக களமிறங்கி காம்பிருடன் கைகோர்த்து 109ரன்களை சேர்த்தனர்.

காம்பிர் 97ல் தனது விக்கெட்டை பறிகொடுத்ததால் ஆட்டத்தை முடித்து வைக்கும் பொறுப்பு தோனி மற்றும் யுவராஜ் வசம் வந்தது.தோனி சவாலை ஏற்று கடைசி ஓவரின் முந்தைய ஓவரில் இரண்டாவது பாலை சிக்சர் அடித்து 2011 உலகக்கோப்பையை 28 வருடங்களுக்கு பிறகு இந்திய வசமாக்கினார்.

இந்திய வீரர்கள் பெரும் உற்சாகத்துடன் மைதானத்தை நோக்கி ஓடிவந்தனர்.அனைவரும் தமது உணர்வுகளை களத்தில் ஆனந்த கண்ணீராக வெளிப்படுத்தினர்.முக்கியமாக யுவராஜ் சிங் & ஹர்பஜன் சிங் களத்தில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது & தொடர் ஆட்ட நாயகன் விருதினை தங்களது அற்புதமான ஆட்டத்தால் வென்றனர்.இந்திய அணியின் வீரர்கள் அணியின் கூட்டு முயற்சி மற்றும் நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்கொண்டு கோப்பையை வென்றனர்.

Quick Links

App download animated image Get the free App now