இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த தொடர் ஒவ்வொரு ஆட்டக்காரர்களுக்கும் குறிப்பாக பேட்ஸ்மென்களுக்கு தங்களின் கால்தடத்தை பதிப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பாகும்.
இன்றைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப விளையாடுவது ஒவ்வொரு பேட்ஸ்மென்களுக்கு பெரும் சவாலாக உள்ளது .குறிப்பாக, இவ்வாறான சூழ்நிலையில் ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் திறமையானது சோதிக்கப்படுகிறது. இருப்பினும், 2015 உலகக் கோப்பைக்கு பின்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மேலும் ஐசிசி கருத்துக்கணிப்பு குழுவானது கூறுகையில், தற்போது இங்கிலாந்தின் சீதோஷ்ன நிலையை பொருத்தவரையில் ஏறக்குறைய 90 ஓவர்கள் ஆட்டம் நீடிப்பது என்பது எளிதான விஷயம் ஆகும் .மேலும் ,பெரிய இலக்குகள் மட்டுமே அரங்கேற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். 2015 உலகக் கோப்பை முதல் இதுவரை இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் அதிக ரன்களை குவித்து இந்த 2019 உலகக் கோப்பையிலும் அதிக ரன்களை குவிக்கவுள்ள ஐந்து பேட்ஸ்மேன்கள் பற்றி காணலாம்.
#1. ஷிகர் தவான்:
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான தவான் ஆட்டத்தின் போக்கை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு முன்னணி பேட்ஸ்மேன் ஆவார் .இவர் இதுவரை இங்கிலாந்தில் 976 ரன்களை குவித்துள்ளார். மேலும், இதற்கு சான்றாக இவர் அதிரடியாக விளையாடிய இரண்டு சாம்பியன்ஸ் ட்ராபியை குறிப்பிடலாம்.இந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபி லீக்கில் (2013 மற்றும் 2017 )அதிக ரன்களை விளாசிய ஆட்டக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்முறையும் இவருடைய பங்களிப்பு இந்தியாவிற்கு நிச்சயம் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.
கடந்த 2015 உலகக் கோப்பையில் தவான் 458 ரன்களும் 56.25 என்ற ஆவரேஜயும் கொண்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி அவருடைய பேட்டிங் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அப்போது இவர் நிகழ்த்திய சதமானது இந்தியாவின் வெற்றியை நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது .காலச்சூழலுக்கு ஏற்ப விளையாடுவது என்பது கடினமான ஒரு விஷயமாகும். ஆனால், தவான் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கையாளத் தெரிந்த ஒரு நல்ல ஆட்டக்காரர் ஆவார்.
#2. விராத் கோலி:
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர், விராத் கோலி. எனவேதான் ,ரசிகர்கள் இவரை "ரன் மெஷின்" என்று அழைக்கின்றனர் . சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இவர் இங்கிலாந்திலும் தொடர்ந்து 54.56 என்ற ஒரு நல்ல ஆவரேஜ் கொண்டுள்ளார். இருப்பினும் 2015 முதல் இவருடைய ஆவரேஜ் 89.80 ஆக வெறும் எட்டே இன்னிங்சில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஆச்சரியமூட்டும் விதமாக இவர் ஒரு சதத்தைக்கூட நிகழ்த்தவில்லை என்றாலும் , அதிகபட்சமாக 96 ரன்களை பங்களாதேஷ் எதிரான போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி 2017 -இல் இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 81 ரன்களை 68 பந்துகளில் விளாசினார். அப்போது இந்தியாவானது 319 என்ற பெரிய இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. எனினும் ,இறுதிப் போட்டியில் அவர் முகமது அமீர் வீசிய பந்தில் தன் விக்கெட்டை இழந்தார். எனவேதான் ,இது பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்புக்கு விதை போட்டது. இதனை ஈடுகட்டும் விதமாக கோலி, நிச்சயம் ஒரு நல்ல ஆட்டத்தை ஜுன் 16-ஆம் தேதி நடைபெற்றவுள்ள போட்டியில் வெளிப்படுத்தி கடினமான ஒரு இலக்கை நிர்ணயிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.