#3.ராஸ் டெய்லர்:
நியூசிலாந்தை சேர்ந்த ஒரு அசாத்தியமான ஆட்டக்காரர், ராஸ் டெய்லர். மேலும், கேள்விக்கிடமின்றி அதிக ரன்களை குவிக்க கூடிய இவர் 2015 உலகக் கோப்பையில் சரியாக விளையாடவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்,அதற்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2892 ரன்களும் 64.8 ஆவரேஜயும் கொண்டு தான் ஒரு அசாத்தியமான ஆட்டக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 523 ரன்களையும் 74.21 என்ற ஆவரேஜயும் கொண்டுள்ள இவர் ,2015-இல் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி தொடர்ச்சியாக சதங்களை விளாசியுள்ளார். முதல் போட்டியில் 83 பந்துகளில் சதத்தை விளாசிய இவர், அடுத்த போட்டியில் கேன் வில்லியம்சன் உடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கொண்டு 398 என்ற பெரிய இலக்கையும் நிர்ணயித்தனர்.
அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியான அடுத்தடுத்த போட்டிகளிலும் டெய்லரும் கேன் வில்லியம்சன் சேர்ந்து இரட்டைச் சதங்களை விளாசி மற்ற அணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தனர் .மேலும், அந்தப் போட்டியில் அந்த அணியானது 303 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
#4. ரோகித் சர்மா:
இந்தியாவின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான இவர், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ச்சியான தன்னுடைய சிறப்பான ஆட்டங்கள் மூலமாக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். 2015 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக தொடர்களில் 458 ரன்களை விளாசிய இவர், 76.33 ஆவரேஜயும் கொண்டுள்ளார். மேலும், இவரது அசாத்தியமான 2 சதங்களை விளாசியதில் ஒன்று இங்கிலாந்துக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-வங்காளதேசுக்கு இடையேயான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் சரியாக விளையாடிய ரோஹித் சர்மா தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங்கம்மில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 137 ரன்கள் விளாசியுள்ளார், ரோஹித் சர்மா. இவ்வாறாக அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான பல்வேறு போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இவ்வாறாக, தன்னுடைய அசாதாரணமான ஆட்டத் திறன்களை வெளிப்படுத்தும் ரோகித் சர்மா இந்த உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியாவிற்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#5. கேன் வில்லியம்சன்:
உலகின் நான்கு திறமையான இளம் ஆட்டக்காரர்களில் ஒருவர், கேன் வில்லியம்சன். எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஆட்டத்தின் போக்கை தன் வசப்படுத்தும் தன்னிகரில்லா ஆட்டக்காரர். இவர் நியூசிலாந்தின் முக்கிய துருப்பு சீட்டு என்றும் கூறலாம். கேன் வில்லியம்சன் இதுவரை இங்கிலாந்தில் 640 ரன்களை விளாசியுள்ளார். மேலும் இவருடைய ஆவரேஜ் 80-ஆகஉள்ளது. 2015 உலகக் கோப்பையில் இருந்து தொடர்ச்சியாக ரன்களை குவித்துவரும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
எடுத்துக்காட்டாக, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டியில் இவர் அடித்த 93 ரன்கள் நியூசிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதுமட்டுமல்லாது, 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இவருடைய தொடர்ச்சியான சதங்களும் இதில் அடங்கும். இங்கிலாந்தின் சீதோசன நிலைக்கு ஏற்ப விளையாடுவதில் மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் கேன் வில்லியம்சன் சிறந்து விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவேதான், 2019 உலகக் கோப்பை போட்டியில் கேன் வில்லியம்சனின் பங்களிப்பு நியூசிலாந்து அணிக்கு பெரும் வெற்றி வாய்ப்பைத் தரும் என்றே கூறலாம்.