2019 ஆம் ஆண்டு சர்வதேச அணி வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள்  

ஜேசன் சங்கா
ஜேசன் சங்கா

#2 ஜோ கிளார்க்

ஜோ கிளார்க்
ஜோ கிளார்க்

இங்கிலாந்து அணியின் அடுத்த இளம் வீரர் ஜோ கிளார்க். கவுண்டி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி உள்ள இவர், இங்கிலாந்து அணியின் சர்வதேச வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 19 வயதில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக முதல் தர போட்டியில் 2015 ஆம் ஆண்டு வாய்ப்பை பெற்றார். இதுவரை கவுண்டி அணிக்காக 12 சதங்களை விளாசியுள்ளார். ஹஸீப் ஹமீது மற்றும் பென் டுக்கேட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் வாய்ப்பை அதிகம் எதிர் நோக்கியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்து வரும் கிளார்க் இங்கிலாந்து அணியின் உத்தேச அணியில் எப்போதும் இடம் பிடித்து வருகிறார்.

22 வயதான கிளார்க் அடுத்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதி வருகின்றனர்.

#1 ஜோப்ஃரா ஆர்ச்சர்

ஜோப்ஃரா ஆர்ச்சர்

2018 ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர் ஜோப்ஃரா ஆர்ச்சர். ஐ.பி.எல், பிக் பேஷ் லீக் என்று கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி கொண்டார். மேற்கிந்திய தீவை பூர்வீகமாக கொண்ட ஆர்ச்சர் இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக கவுண்டி போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒரு சிறந்த பௌலிங் ஆல்ரவுண்டரான இவர், 23 வயதிலேயே T20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

140kph மேல் பந்து வீசக்கூடிய ஜோப்ஃரா ஆர்ச்சர் இறுதி ஓவர்களில் யார்கர் வீசி எதிரணி ரன்கள் சேர்ப்பதை தடுப்பதில் வல்லவர். தற்போதைய விதி மாற்றத்திற்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். சென்ற ஆண்டின் பிக் பேஷ் லீக் தொடருக்கு பிறகு 7.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அனைவரும் எதிர்பார்ப்பது போல் 2019 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வாய்ப்பை ஜோப்ஃரா ஆர்ச்சர் பெறுவார் என நம்பலாம்.

Edited by Fambeat Tamil