ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஓடிஐ அணிக்கு திரும்ப வாய்ப்புள்ள 5 வீரர்கள்

Bumrah & KL Rahul
Bumrah & KL Rahul

இந்திய அணி 2019 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் முன்னாள் உலக சேம்பியன் ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே இந்திய அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்திய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்று எளிதாக தொடரை கைப்பற்றியது. செடன் பூங்காவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30.3 ஓவர்களை எதிர்கொண்டு வெறும் 93 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெல்லிங்டனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என தொடரை கைப்பற்றியது. கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது.

இந்திய அணி நவம்பர் 2018ல் தனது சொந்த மண்ணில் விளையாடியது. அதன்பின் 2019 பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தனது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. இத்தொடர் 2019 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியில் உள்ள குறைகளை களைய இந்திய அணிக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாகும். இத்தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக இருப்பதால் இந்திய அணி நேரடியாக உலகக் கோப்பையில் தான் விளையாடும்.

நியூசிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2019 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய தொடரில் சில முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என கூறியுள்ளார். நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடருக்கு பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி கூறியதாவது : " தற்போது முகமது ஷமிக்கு ஓய்வு தேவைப்படுகிறது- டெஸ்ட், ஒருநாள் தொடர் என நிறைய கிரிக்கெட்டில் அவர் பங்கேற்று வருகிறார். அவருடன் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கும் ஓய்வு தேவை" என கூறியுள்ளார்.

நாம் இங்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் திரும்பவுள்ள 5 வீரர்களை காண்போம்.

#5.ரிஷப் பண்ட்

Rishabh Pant
Rishabh Pant

ரிஷப் பண்ட் இதுவரை மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இவர் இந்திய அணியில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அத்துடன் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரகாவும் திகழ்கிறார். இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே . பிரசாந்த் கூறியதாவது : "ரிஷப் பண்ட் 2019 உலகக் கோப்பை பிளானில் உள்ளார்", கடைசி ஒரு வருடத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இவர் உலகக் கோப்பை அணியில் இனைவது சந்தேகமில்லா உண்மையாகும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய- நியூசிலாந்து ஒருநாள் அணியில் இடம்பெறாத ரிஷப் பண்ட் நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 72 ரன்களை விளாசியுள்ளார். இவர் கடைசியாக 2018 அக்டோபரில்தான் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் தனக்கு அளிக்கப்பட்டவுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#4.கே.எல்.ராகுல்

KL Rahul
KL Rahul

உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி தொடக்க வீரர்களை தயார் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. தவான் மற்றும் ரோகித் சர்மா இந்திய அணியின் தொடக்க வீரர்கள் என்பது சந்தேகமில்லா உண்மையாகும். இருப்பினும் மாற்று தொட்க்க வீரர்களை இந்திய அணி தேடி வருகிறது. கே.எல்.ராகுல் இந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என பார்க்கப்பட்ட போது சமீபத்தில் அவரது ஆட்டம் மிகவும் மோசமாக காணப்பட்டது. தடைக்கு பிறகு இந்திய-ஏ அணியில் இடம் பிடித்த கே.எல்.ராகுல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான மூன்றாவது , நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளில் 13 , 42 மற்றும் 0 என மோசமான ரன்களை அடித்தார் .

பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் 192 பந்துகளுக்கு 89 ரன்களை அடித்தார்.இந்த போட்டி டிரா ஆனது. உத்தேச இந்திய உலகக் கோப்பை XI பற்றி இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாந்திடம் கேட்கப்ட்ட போது அவர் கூறியதாவது : "நிச்சயமாக தற்சமயம் அனைவரின் மனதிலும் இந்த கேள்வி எழும். நாங்கள் இன்னும் இதனை முடிவு செய்யவில்லை. இன்னும் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்குப் பிறகே இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும். ஆஸ்திரேலிய தொடரில் கர்நாடக பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு இறுதி வாய்ப்பாக அளிக்கப்படும். அத்தொடரில் அவருடைய ஆட்டத்திறனை பொறுத்தே உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை முடிவு செய்யப்படும்" எனக் கூறியுள்ளார்.

#3.உமேஷ் யாதவ்

Umesh yadhav might get into the Odi place. Against Australia after fantastic bowling from Ranji trophy
Umesh yadhav might get into the Odi place. Against Australia after fantastic bowling from Ranji trophy

2019 உலகக் கோப்பை அணிக்கு ஏற்கனவே இந்திய அணி சார்பில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் ( பூம்ரா , முகமது ஷமி , புவனேஸ்வர் குமார் ) தயராகி உள்ளனர். நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவ் பார்க்கப்பட்டு வருகிறார். 2015 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

2019 ரஞ்சி சீசனின் சேம்பியன் அணியான "விதார்பா"- வில் உமேஷ் யாதவ் இடம்பெற்று இருந்தார். மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் மூன்று 5-விக்கெட்டுகள் அடங்கும். 31 வயதான உமேஷ் யாதவ் செப்டம்பர் 2018ல் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசியாக பங்கேற்றார். ரஞ்சி சீசனில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தி உள்ளார். கடந்த வருடத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் உமேஷ் யாதவ் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட்டுகளையும் , 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் உமேஷ் யாதவின் பந்துவீச்சு சரியாகவும் , சிறப்பாகவும் இருக்கும். எனவே ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவிற்கும் வாய்ப்பளிக்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#2.அஜுன்க்யா ரகானே

Rahane
Rahane

இந்திய தொடக்க வீரர்களுக்கான பரிசோதனையில் இந்திய டெஸ்ட் துனை கேப்டன் ரகானேவும் ஒரு முக்கிய போட்டியாளராக உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த உலக கோப்பை தொடரில் ரகானே 8 போட்டிகளில் பங்கேற்று 34.66 சராசரியுடன் 208 ரன்களை அடித்தார். இத்தொடரில் அதிக பட்சமாக 78 ரன்களை ரகானே அடித்தார். 2018 சென்சுரியனில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசியாக ரகானோ விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் இவரது சீரான பேட்டிங்கால் டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார்.

தற்போது ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா மற்றும் தவானிற்கு ஓய்வளிக்கபோவதாக குறிப்பால் உணர்த்தியுள்ளார். எனவே ரகானேவை விரைவில் ஒருநாள் அணியின் தொடக்க ஆட்டக்காரராக காணலாம். மும்பை பேட்ஸ்மேன் ரகானே சமீபத்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய-ஏ அணியை வழிநடத்தினார். இதில் 59,91 மற்றும் 0 ஆகிய ரன்களை குவித்துள்ளார். நன்றாக தனது ஆட்டத்தை நிருபித்துள்ள ரகானேவிற்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளது. ரகானே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு மீண்டும் இந்திய ஓடிஐ அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#1.ஜாஸ்பிரிட் பூம்ரா

Jasprit Bumrah
Jasprit Bumrah

பூம்ரா 2018ல் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து தொடர்( 5 ஓடிஐ ,3 டி20) ஆகிய இரு தொடர்களிலும் வேலைப்பளுவை குறைக்க ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய பௌலிங்கில் பூம்ரா ஒரு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார். அத்துடன் 2019 உலக கோப்பை இந்திய அணியிலும் பூம்ரா சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு வெளிநாட்டு ஒரு நாள் தொடரிலும் விளையாடத பூம்ரா ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியில் இனைவார்.

கேப்டன் விராட் கோலியின் அதிரடியிலும் , பூம்ராவின் சிறப்பான பந்துவீச்சாலும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை கைப்பற்றி 2019 உலகக் கோப்பைக்கு முன் ஐசிசி ஒடிஐ தரவரிசையில் முதலிடத்தை இந்திய அணி வகிக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இத்தொடர் 2019 உலகக் கோப்பை மற்றும் 2019 ஐபிஎல்-ற்கு பூம்ரா தயராகுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் பூம்ரா பந்து வீச்சு அனல்பறக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now