நாக்பூரில் நேற்று நடந்த (மார்ச் 5) நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி மிகவும் சிறப்பான ஓடிஐ-போட்டியாக விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணிக்கு இருந்தது. கடைசி ஓவரில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். விராட் கோலி அதிரடியில் 114 ரன்களும், விஜய் சங்கரின் அதிவேக பேட்டிங்கால் 41 பந்துகளில் 46 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 48.1 ஓவரில் 250 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி பதிலடி தரும் விதமாக தொடக்க பார்ட்னர் ஷிப்பில் 83 ரன்கள் வந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த பார்ட்னர் ஷிப்பை உடைத்தனர்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒரு முக்கியமான பார்ட்னர் ஷிப்பை பீட்டர் ஹான்டஸ்கோம்ப் மற்றும் அலெக்ஸ் கேரே-வுடன் சேர்ந்து செயல்படுத்தினார். ஜாஸ்பிரிட் பூம்ராவின் மின்னல் வேக பந்துவீச்சில் 3 பந்துகளில் நாதன் குல்டர் நில், பேட் கமின்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜய் சங்கர் தனது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை நிறுபிக்கும் விதமாக முக்கிய விக்கெட்டுகளான மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தார்.
நாம் இங்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற 5 இந்திய வீரர்களை காண்போம்.
#1: விராட் கோலி
முதல் ஓவரில் ரோகித் சர்மாவின் விக்கெட்டிற்குப் பிறகு விராட் கோலி களமிறங்கினார். தொடக்க விக்கெட்டுகள் சரிந்ததால் விராட் கோலி சற்று ஆட்டத்தை கணித்து விளையாட ஆரம்பித்தார். ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு அழுத்தம் தரும் விதமாக 55 பந்துகளில் தனது சர்வதேச 50வது ஓடிஐ அரைசதத்தை விளாசினார் விராட் கோலி.
விஜய் சங்கர் மற்றும் விராட் கோலியின் பார்ட்னர் ஷிப்பில் 84 ரன்கள் சேர்த்து இந்திய அணியை நிலை நிறுத்தினர். ஒருபுறம் இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் சரியத்தொடங்க, விராட் கோலி மட்டும் நிலைத்து விளையாடி 107 பந்துகளில் தனது 40வது சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். இறுதியாக 116 ரன்களில் பேட் கமின்ஸால், விராட் கோலி விக்கெட் வீழ்த்தப்பட்டார்.
இவரது சிறப்பான இன்னிங்ஸால் 48.2வது ஓவரில் இந்திய அணி 250 ரன்களை கடந்தது. சீறிய இடைவெளியில் இவர் எடுத்த பவுண்டரிகள் மற்றும் 1 ரன்கள் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. உலகின் நம்பர் 1 ஓடிஐ பேட்ஸ்மேனின் மற்றொரு சிறப்பான ஆட்டம் இந்த போட்டியில் வந்தது. இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மீதமுள்ள நிலையில் இவரது அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.