#2: குல்தீப் யாதவ்

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 251 என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் ஃபின்சின் விக்கெட்டை வீழ்த்தினார் "சைனா மேன்" குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தார் குல்தீப் யாதவ். அலெக்ஸ் கேரே மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 47 ரன்கள் இருந்த போது அதனை நெருங்கும் விதத்தில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார் அலெக்ஸ் கேரே. இவர் மொத்தமாக 10 ஓவர்கள் பந்துவீசி தனது பௌலிங்கில் 54 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ் இந்திய அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளராகவும், அடுத்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் கடும் நெருக்கடியை ஆஸ்திரேலிய அணிக்கு தனது பந்துவீச்சில் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#3 ஜாஸ்பிரிட் பும்ரா

இந்திய அணியின் நட்சத்திர பௌலர் பும்ரா ஆஸ்திரேலிய பேட்டிங்கை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் வீசிய முதல் 8 ஓவரில் வெறும் 28 ரன்கள் மட்டுமே தனது பௌலிங்கில் அளித்திருந்தார். 9வது ஓவரில் முதல் 3 பந்துகளில் நாதன் குல்டர் நில் மற்றும் பேட் கமின்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 10வது ஓவரில் 1 ரன் மட்டுமே அளித்து ஆஸ்திரேலிய அணிக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தார் பூம்ரா.
இவர் வீசிய 10 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓடிஐ கிரிக்கெட்டில் தனது பலத்தை ஆஸ்திரேலிய அணிக்கு தெரிவித்தார். பும்ராவின் அதிரடி பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது.
உலகின் நம்பர் 1 ஓடிஐ பௌலர் பும்ரா மே-30 ல் நடைபெறவிருக்கும் மாபெரும் கிரிக்கெட் தொடரான உலகக் கோப்பையில் கடும் நெருக்கடியை எதிரணியினருக்கு அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.