#4: விஜய் சங்கர்

விஜய் சங்கர் தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது பங்களிப்பை பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் செய்து அசத்தினார். அம்பாத்தி ராயுடுவின் விக்கெட்டிற்குப் பிறகு களமிறங்கிய இவர் 42 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்களை அதிவேகமாக குவித்தார். கோலி மற்றும் விஜய் சங்கரின் 4வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பில் 81 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது.
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்துவீச வந்த விஜய் சங்கர் 51 ரன்களுடன் சிறப்பாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸின் விக்கெட் மற்றும் ஆடம் ஜாம்பாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இவரது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறனால் 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவரது பெயர் கண்டிப்பாக இடம் பெறும் என்பது சந்தேகமில்லை. இவரது சிறப்பான பங்களிப்பு இந்திய அணிக்கு ஒரு புது நம்பிக்கையை அளித்துள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இடம்பெற்றிருந்த விஜய் சங்கர், அப்போட்டியில் இந்திய அணி 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இவரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#5: ரவீந்திர ஜடேஜா

பின்வரிசையில் களமிறங்கிய ஜடேஜா, 21 ரன்களை ஆஸ்திரேலிய பௌலிங்கிற்கு எதிராக அடித்தார். இவரது ஆல்-ரவுண்டர் திறனால் ஷான் மார்ஸின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்டிங் லைன்-அப்பை சிதைத்தார். இவர் 10 ஓவர்களில் பந்துவீசி 48 ரன்களை தனது பந்துவீச்சில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹான்ட்ஸ்கோம்பை ரன் அவுட் செய்தார் ஜடேஜா. இதனால் ஆட்டம் முழுவதுமாக மாறியது. இந்திய அணியின் ஃபில்டராக இவரது பணி மிகவும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது. அத்துடன் ஜடேஜா ஒரு சிறப்பான பந்துவீச்சாளர் மற்றும் இக்கட்டான சமயங்களில் இவரது பேட்டிங் இந்திய அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை முழுவதும் மேம்படுத்தி வருகின்றனர். ஜடேஜா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஓடிஐ தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது சிறப்பான ரன்-அவுட்டினால் இந்திய அணி வெற்றி பெற உதவியாக இருந்து தன்னை சிறந்த வீரராக நிறுபித்துள்ளார்.
3 ஒருநாள் போட்டிகள் மீதமுள்ள நிலையில் ஜடேஜா வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.