அதுமட்டுமின்றி சமீப காலமாக பினிஷராக விளங்கும் இவர் தனது அனுபவத்தின் மூலம் அணியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் தன்மை கொண்டவர். இவரின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவும். எனவே அடுத்து நடைபெறவிருக்கும் 5 லீக் போட்டிகளில் இந்த இருவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடுவர். இருந்தாலும் அடுத்து நடைபெறவிருக்கும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் எந்த வீரர் களமிறங்குவார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 50-50 வாய்ப்புள்ளது.
#3 ரிஷப் பண்ட்
தற்போதைய உலககோப்பை அணியில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ரிஷப் பண்ட். ஆனால் கடைசியாக விளையாடிய தொடரில் அவர் தடுமாறியதால் அவருக்கு பதிலாக அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். தற்போதைய உலககோப்பை இந்திய அணியில் ஷிகர் தவானைத் தவிர வேறு எந்த இடது கை பேட்ஸ்மேனும் இல்லை. எனவே இவர் அணியிலிருந்தால் அணிக்கு கூடுதல் பலம் சேரும். அதிரடி ஆட்டக்காரரான இவர் 40வது ஓவருக்கு பின் களமிறங்கினால் தனது அதிரடியால் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தும் தன்மை கொண்டவர் இவர். தற்போது ஷிகர் தவானுக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரையும் தேர்வு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது பிசிசிஐ. இருந்தாலும் தவானுக்கு காயம் குணமடையாத பட்சத்தில் இவரே உலககோப்பை அணியில் சேர்க்கப்படுவார். அதுமட்டுமின்றி இவர் அணியில் இருக்கும் பட்சத்தில் இவரை நான்காவது இடத்நிற்கு களமிறக்கும் அணி நிர்வாகம். என்னதான் அதிரடி வீரராக இருந்தாலும் இவர் அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது பொறுப்புடன் விளையாடாமல் தேவையற்ற ஷாட்களை ஆடி தனது விக்கெட்டை இழந்து விடுகிறார் இவர். இன்னும் அனுபவம் வரும் போது அதனை உணர்ந்து அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கட்டாயம் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் இவர்.