இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம்.1983-இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் மிகவும் சிலரே ஆல்ரவுண்டர்களாக இருந்தனர்.கபில் தேவ், மொகிந்தர் அமர்நாத், மதன் லால், ரோஜர் பின்னி போன்ற வீரர்களின் இரு துறைகளுக்கான பங்கு ஏராளம்.
ஆனால், கடந்த இருபது வருடங்களாகத் தேர்வாளர்கள் ஆல்ரவுண்டர்களை அணியில் நிரப்ப எதிர்நோக்கினர், குறிப்பாக வேகப்பந்து ஆல்ரவுண்டர்களை. ஹர்திக் பாண்டியா ஒரு நட்சத்திரமாக இந்திய அணியில் குங்ஃபூ பாண்டியாவாக உருவெடுக்கும் முன்னர், தேர்வாளர்கள் சில ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பளித்தனர்.இந்திய கிரிக்கெட் ஒரு உலகத்தர ஆல்ரவுண்டரை உருவாக்கும் விஷயத்தில் தோல்வியுற்றது.
இந்திய கிரிக்கெட் அணி பல ஆல்ரவுண்டர்களை பயன்படுத்தி குறைந்தளவே வெற்றியைக் கண்டது.அப்படி வாய்ப்பைப் பயன்படுத்துவதில் தோல்வியடைந்த ஐந்து வீரர்களைக் காண்போம்.
5.ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny):
இவர் 1983-இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த ஆல்ரவுண்டரான ரோஜர் பின்னியின் மகனாவார் மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான மயந்தி லாங்கரே இவரது மனைவி. இவர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 6/4 என்ற இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சு சாதனையை செய்திருந்தாலும், பிற்காலத்தில் தன் திறமையை நிரூபிக்க தவறினார்.ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் இவரது பங்கு ஒரு போற்றத்தக்க வகையில் அமைந்தது.
இவரது பேட்டிங் ஆவரேஜ் 28-ஆகவும், பவுலிங் ஆவரேஜ் 21-ஆகவும் உள்ளது. மேலும், இவர் இந்தியாவிற்காக 14 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்துள்ளார். அணி நிர்வாகம் எதிர்பார்த்தபடி இவர் தன் திறனை நிரூபிக்க தவறினார். பேட்டிங்கிலோ அல்லது பவுலிங்கிலோ தன் பங்களிப்பை சிறிதளவு மட்டுமே கொடுத்தார். இதுபோன்ற குறைகளால், இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தவறினார்.
2.இர்பான் பதான் (Irfan Pathan):
![Irfan Pathan](https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/6b84f-15416928734428-800.jpg 1920w)
நீண்ட காலத்துக்கு முன்பு, இந்திய அணியில் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதானை அறிந்திராதவர் எவரும் இல்லை.இருப்பினும், அணியில் பதான் சகோதரர்களில் இளையவரான இர்பான் பதானின் திறன் மேன்மையாகவே கருதப்பட்டது. காயங்கள், பார்ம் இன்றி தவித்தல்,மெதுவான பந்துவீச்சு போன்றவைகள் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை சுருக்கியது.
இவரது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில், பாகிஸ்தானுக்கு எதிராக பனானா ஸ்விங்கில் (banana swing) ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது மறக்க முடியாத நிகழ்வாகும்.இவர் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் கூட, WACA- வில் 2007-08 டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற இவர் அடித்த 46 ரன்கள் மிகவும் உதவிகரமாக இருந்தது. காலப்போக்கில், இவர் பவுலிங்கை விட பேட்டிங்கில் ஜொலித்தார். ஆனால், ஏதேனும் ஒரு துறையில் தன்னை நிரூபிக்க தவறினார். இவர் ஷேன் வாட்சனை போன்ற ஒரு ஆல்ரவுண்டராக இல்லாமல், பின்வரிசை பேட்ஸ்மேனான டிம் பிரஸ்னன் மற்றும் டேவிட் வில்லே போன்றவர்களை போலவே இருந்தார்.
சர்வதேச போட்டிகளில் இவர் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்றே. இவரது தொழில் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தை கொண்டிருந்தார்,மேலும் இவர் மனம்கவர்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டராவும் திகழ்ந்தார்.இவர் ஐசிசியின் 2004-ஆம் ஆண்டிற்கான வளர்ந்துவரும் வீரர் என்ற விருதை வென்றபோதிலும் இவர் அணிக்கு திரும்புவதில் இன்னும் வெற்றி காணவில்லை.
3.ரிஷி தவான் (Rishi dhawan):
![Rishi dhawan](https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/411b7-15416880880977-800.jpg 1920w)
ஐபிஎல்-இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஒரு சிறந்த சாதனையை வைத்திருந்ததனால் இந்த இமாச்சல பிரதேச ஆல்ரவுண்டருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.இவர் ஹர்திக் பாண்டியாவின் வருகைக்கு முன்னர் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக அணியில் இடம் பிடித்தார்.இவர் 2013-14 காலக்கட்ட ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.அதனாலேயே, ஐபிஎல் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஒப்பந்தமானார்.
இவர் முதல்தர(First Class) போட்டிகளில் ஒரு சிறந்த பேட்டிங் ஆவரேஜ் 40.73 மற்றும் 59 போட்டிகளில் 248 விக்கெட்களையும், ஆரோக்கியமான 26 பவுலிங் ஆவரேஜையும் வைத்துள்ள போதிலும் வெறும் குறைந்த வாய்ப்புகளில் இவரது தேர்வை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை.
இவர் ஐபிஎல்-இல் கூடத் தற்போது இடம்பெறவில்லை.
4.பர்வேஷ் ரசூல் (Parvez Rasool):
![Parvez Rasool](https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/307c9-15416881128498-800.jpg 1920w)
காஷ்மீரில் பிறந்த இந்த ஆஃப் ஸ்பின்னர் (Off-Spinner), ரவீந்திர ஜடேஜா போன்றே பவுலிங் ஆல்ரவுண்டராகக் காணப்பட்டார்.2012-14 உள்நாட்டு தொடர்களில் இவர் தொடர்ச்சியாக விளையாடவில்லை.பின்பு மீண்டும், 2016-17 சீசனில் இருதொடர்களிலும் பங்குகொண்டு ஒவ்வொரு சீசனிலும் கிட்டத்தட்ட 600 ரன்களும் 60 பேட்டிங் ஆவரேஜும், கூடவே 30 விக்கெட்களையும் கைப்பற்றி ஒரு நல்ல ஆல் ரவுண்டராக விளங்கினார்.
2014-இல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும், 2017-இல் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டிகள் என இருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. இது ஒரு குறுகிய சர்வதேச போட்டி வாய்ப்பே ஆகும். மேலும் இவர் ஐபிஎல்-லும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
5. அக்ஸர் பட்டேல் (Axar Patel):
![Axar Patel](https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/0c960-15416882009347-800.jpg 1920w)
இந்தக் குஜராத்திய இடக்கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இடம்பிடிக்க காரணம் ஐபிஎல் தான். இவர் ஐபிஎல்-இல் பஞ்சாப் அணியில் சிறிதளவு பங்களித்தபோது இக்கட்டான நேரங்களில் தனது திறமையை நிரூபித்தபோது அனைவராலும் அறியப்பட்டார்.
ஆனால் இவர் சர்வதேச அளவில் 38 போட்டிகளில் வெறும் 45 விக்கெட்களையே எடுத்துள்ளார். கடலை விட்டு வெளியே நீந்தும் மீனைப் போன்று சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தன் பேட்டிங் திறனையும் நிரூபிக்கத் தவறினார். ஓரளவு அணியில் இடம்பிடித்து பந்துவீச்சு பணியையே பெரிதும் நம்பிய இவர் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இணை வருகைக்குப் பின்னர் நிரந்தரமாகவே அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்கள் இல்லாத தாக்கத்தினால் பல வீரர்களைப் பயன்படுத்தி பார்த்தும் வேறு வழியின்றி தவித்த காலத்தில் ஒரு சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்தியவரே ஹர்திக் பாண்டியா.இவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் கூறலாம். ஆனால், உண்மையில் இவர்கள் தங்கள் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தத் தவறினர் என்ற கருத்தே நிதர்சனமான ஒன்றாகும்.மேலும், இவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு அணியில் இனி கிடைக்கும் என்று கூறவும் முடியாது. இதனால் இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தைத் தக்கவைத்தும் உள்ளார்.மேலும், இது போன்ற தாக்கத்தினை ஏற்படுத்தாத காரணத்தினாலேயே ஹர்திக் பாண்டியாவை போன்று எவரும் நிரந்தரமாக அணியில் ஜொலிக்க முடியவில்லை. நிச்சயமாக ஹர்திக் பாண்டியா 2019 உலகக்கோப்பையை வெல்ல பெரும் பங்கினை அளிப்பார் என நான் நம்புகிறேன்.
எழுத்து:
ராகுல் ஜெயின்
மொழியாக்கம்:
சே.கலைவாணன்