ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் அடையவுள்ள புதிய மைல்கற்கள்.

Virat Kohli
Virat Kohli

இந்திய அணி தனது ஒருநாள் கிரிக்கெட் அணியில் கிட்டத்தட்ட வலிமையான அணியாக தற்போது தயார் செய்து வைத்துள்ளது. இந்த அணியை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. அத்துடன் உலகக் கோப்பை அணியிலும் தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களே இடம்பெறுவர். உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை பொறுத்து வேண்டுமானால் ஒருசில இடங்கள் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பையில் பங்குபெறும் ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் தங்களது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்தும் விதமாக அணியை தற்போது தயார் செய்து கொண்டுள்ளது. அத்துடன் ஸ்டார் பிளேயர்களுக்கு எவ்வித காயம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாய் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாதுகாக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய அணி : ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), ராயுடு, கேதார் ஜாதவ், ஜடேஜா, தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால், கலீல் அகமது.

இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் மற்றும் அடையவுள்ள மைல்கற்களை பற்றி நாம் காண்போம்.

#5 ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100வது விக்கெட்டை வீழ்த்தவுள்ள முகமது ஷமி

Mohammed shami
Mohammed shami

முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓடிஐ பந்துவீச்சாளராகவே களமிறங்கினார். பின்னர் நாளடைவில் தன்னை டெஸ்ட் பந்துவீச்சாளராக மாற்றிக் கொண்டார் ஷமி. இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக முதலில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். பின்னர் காயம் காரணமாக அணியில் இடம்பெற இயலவில்லை.

முகமது ஷமி 2013ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக 52 ஒருநாள் போட்டிகளில் பங்குகொண்டார். முகமது ஷமி-க்கு ஓடிஐ தொடரில் குறைந்த வாய்ப்புகளே வழங்கப்பட்டுள்ளது.

இவர் சமீபத்தில் தான் இந்திய ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்திய அணி தேர்வாளர்கள் இந்திய அணிக்கு ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் நோக்கில் இவரை தேர்ந்தெடுத்துள்ளது. புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா-வுடன் சேர்ந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது ஷமி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 100வது விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

#4 ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா 2000 ரன்களை கடக்க போகிறார்.

Jadeja
Jadeja

ரவீந்திர ஜடேஜா தற்போது பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகிறார். ஓடிஐ கிரிக்கெட்டில் இவரது வருகையினால் இந்திய அணிக்கு பின்வரிசை பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார். அத்துடன் பின்வரிசை பேட்டிங்கை உலகக் கோப்பை அணியில் சற்று மெருகேற்றும் விதமாகவும் அமையும். ஜடேஜா இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 80 ரன்களை குவித்து தனது ஆட்டத்திறனை நிருபித்ததால் ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார். பின்னர் நடந்த ராஜ்கோட்டில் நடந்த மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது முதல் டெஸ்ட் சதத்தினை அடித்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பௌலிங்கில் தனது ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார்.

இடதுகை பேட்ஸ்மேன் ஜடேஜா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பேட்டிங்கிலும் சரி , பௌலிங்கிலும் சரி சிறப்பாக செயல்பட்டு அசத்தியுள்ளார்.

இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை அடைய இன்னும் 16 ரன்கள் அடிக்க வேண்டும். பௌலிங்கில் 169 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

#3 ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100 வது விக்கெட்டுகளை வீழ்த்தவுள்ள புவனேஸ்வர் குமார்

Bhuvaneshwar kumar
Bhuvaneshwar kumar

புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஆகிய இரு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தங்களது 100 வது சர்வதேச ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்த உள்ளனர். புவனேஸ்வர் குமார் தற்போது 99 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட்டினை எடுத்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 வது விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறுவார்.

இவர் ஒரு மெதுவாக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டு வருபவர் ஆவார். இவர் இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 99 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஓடிஐ-யில் இவரது சராசரி 38 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 45 ஆகவும் உள்ளது. இது ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு உகந்தது அல்ல. புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் ஒரு முக்கியமான பந்துவீச்சாளராக உள்ளார். ஆனால் அவ்வளவாக இவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களிடம் தாக்குதலை ஏற்படுத்துவதில்லை.

புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சாளராக தற்போது இந்திய அணியில் உள்ளார். இவர் டெத் ஓவர்களில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை உடையவராக உள்ளார். இவர் மெதுவாக விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தாலும் அவ்வளவாக எதிரணிக்கு ரன்களை விட்டுக்கொடுப்பதில்லை. மிகவும் ரன்களை கட்டுப்படுத்தி பந்துவீசும் திறனை பெற்றுள்ளார். அத்துடன் பேட்டிங்கிலும் தற்போது கலக்கி வருகிறார். எனவே கண்டிப்பாக உலகக் கோப்பையில் இவர் விளையாடுவார்.

#2 ஷிகார் தவான் ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடக்க உள்ளார்.

Shikar Dhawan
Shikar Dhawan

"கபார்" என்று கிரிக்கெட் உலகில் அழைக்கப்படும் ஷிகார் தவான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் ஒரு புதிய மைல்கல்லை அடையவிருக்கிறார். தவான் 114 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று பிரம்மிக்க வைக்கும் 46 என்ற சராசரியுடனும் , 15 சதங்களுடனும் 4935 ரன்களை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். இன்னும் 65 ரன்கள் அடித்தால் 5000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்தவர் என்ற பெருமையை பெறுவார்.

இவர் இன்னும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை அடைந்தால் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த உலகின் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆம்லா 101 போட்டிகளில் 5000 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். விவ் ரிச்சர்ட் , விராட் கோலி ஆகியோர் 114 போட்டிகளில் 5000 ரன்களை கடந்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்திறனுடன் ஷிகார் தவான் செயல்பட்டு வருகிறார். 2018-ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்தோர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் இந்த வருடத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஷிகார் தவான் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பாகவும் , ஒரு ஆர்வத்துடனும் அருமையாக விளையாடி வருகிறார்.அத்துடன் 2019 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா-வுடன் தவான் தான் களமிறங்க வேண்டும் என ரசிகர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

#1 ஒருநாள் கிரிக்கெட்டில் 50 அரைசதங்களை வீழ்த்த போகிறார் விராட் கோலி

Virat Kohli
Virat Kohli

சாதனை முறியடிப்பு என்றால் அனைவருக்கும் தற்போது நியாபகத்திற்கு வருபவர் விராட் கோலி .முக்கியமாக ஓடிஐ கிரிக்கெட். இவர் தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வென்று பெரும் வரலாற்று உலகச்சாதனையை படைத்துள்ளார். அத்துடன் முதல் இந்திய கேப்டன் மற்றும் முதல் ஆசியக் கேப்டனாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார்.கடந்த 33 வருடங்களில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட்டில் ஃபாலோ ஆன் பெற வைத்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. டெல்லியை சேர்ந்த இளம் இந்திய கேப்டன் அனைவராலும் புகழக் கூடியவராக தற்போது விளங்குகிறார் .

ஒரு கிரிக்கெட் வீரராக மற்றொரு மைல்கல்லை தற்போது அடையவிருக்கிறார் விராட் கோலி . இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 2 அரைசதங்களை வீழ்த்தினால் ஓடிஐ கிரிக்கெட்டில் 50 அரைசதங்களை அடித்தவர் என்ற பெருமையை பெறுவார் . விராட் கோலி 214 ஓடிஐ போட்டிகளில் பங்கேற்று 38 சதங்கள் மற்றும் 48 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்த சாதனையை நிறைய வீரர்கள் நிகழ்த்தியது இல்லை. விராட் கோலி இந்த சாதனையில் 6வது இந்தியராக இணைய உள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இவருக்கு ரன்களை விளாச ஒரு பிடித்த மற்றும் சாதகமான அணியாகும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தி பெருமை மேல் பெருமையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links