#1) சேவாக்
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நம் அனைவருக்கும் தெரிந்த நமது இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக். சேவாக் என்றாலே தனி ரசிகர் பட்டாளமே அவருக்கு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் இவரின் திறமைக்கு தான். அதுமட்டுமின்றி முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கும் வல்லமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் முச்சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரண்டாவதாக இரட்டை சதத்தை விளாசிய வீரர் இவர்தான். முதன் முதலில் இரட்டை சதம் விளாசிய வீரர் சச்சின் ஆவார். ஒரு காலகட்டத்தில் சச்சினும் சேவாக்கும் பேட்டிங் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கும் பொழுது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பல ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்து வந்ததற்கு முக்கியக் காரணம் சேவாக்கும் சச்சினும் தான்.
அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக பவுண்டரிகளை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை முதன்முதலில் படைத்தவர் இவர் தான். ஆனால் அந்த சாதனையை தற்போது ரோகித் சர்மா முறியடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவரது ரசிகர்களின் மனதில் இன்றுவரை நிலைத்து இருக்கிறார். எனவே இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் சேவாக்.