சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மிகத்தீவிர வறுமையை சந்தித்த ஐந்து புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

வலது புறத்தில் இருப்பவர் தட்த்ராம் ஹிட்லேகர்
வலது புறத்தில் இருப்பவர் தட்த்ராம் ஹிட்லேகர்

கிரிக்கெட் விளையாட்டானது சில நாடுகளில் மிகமுக்கிய விளையாட்டாக விளையாடப்பட்டு வருகிறது.கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டின் ரசிகர்களால் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.ஒரு கிரிக்கெட் வீரர் அவர் விளையாடும் காலத்தில் நன்றாக வருமானம் ஈட்டி எதிர்காலத்தில் உதவும் வகையில் வைத்திருப்பர்.சர்வதேச போட்டிகளில் வரும் வருமானத்துடன் சில உள்ளுர் டி20 போட்டிகளில் தங்கள் கிரிக்கெட் திறமையை வெளிக்கொணர்ந்து பெரும் தொகையை ஈட்டுகின்றனர்.வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் வருமானம் ஈட்ட நிறைய வழிகள் உள்ளது.

இருப்பினும், சில சகாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரர்களின் நிலைமைகள் முற்றிலும் வேறுபட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் மிக உயர் மட்டத்தில் ஜொலித்த பல வீரர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் ஓய்வுக்குப் பின்னர் மிகக் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்

கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றபிறகு கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்ட ஐந்து வீரர்களைப் பற்றி நாம் இங்குக் காண்போம்.

#5.தட்த்ராம் ஹிட்லேகர்

தட்த்ராம் ஹிட்லேகர் இந்தியாவின் புகழ்பெற்ற வீரரான விஜய் மன்ஜ்ரேகரின் மாமா ஆவர்.இவர் 1936-46 வரை இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடியுள்ளார்.1936ல் லார்ட்ஸ் மைதானத்தில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விரலில் காயத்துடன் பார்வை குறைபாடும் கூடவே வர, முடிவில் அவர் இந்திய அணிக்கு அதற்கு மேல் விளையாட முடியாமலேயே போனது.

சில மாதங்கள் மும்பை துறைமுகத்தில் மாதம் 800 சம்பளத்திற்கு வேலைசெய்து வந்தார் தட்த்ராம் ஹிட்லேகர்.முடிவில் வறுமையின் காரணமாக முறையான மருத்துவ வசதி இல்லாமையாலும் தட்த்ராம் தனது 40 வயதில் இயற்கை எய்தினார்.அவரது மறைவிற்குப் பிறகு தட்த்ராம் பணிபுரிந்த நிறுவனத்தின் வேலையாட்கள் அவரது மனைவி (மற்றும்)7 குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் கேபரட் நடனம் ஏற்பாடு செய்தனர்.

#4.ஹேரபர்ட் சாங்

1982-83ல் மேற்கிந்தியத் தீவுகள் கிளர்ச்சி கிரிக்கெட் அணி. ஹேர்பர்ட் சாங் வலது புறத்திலிருந்து மூன்றாவதாக நின்றுக்கொண்டிருக்கிறார்.
1982-83ல் மேற்கிந்தியத் தீவுகள் கிளர்ச்சி கிரிக்கெட் அணி. ஹேர்பர்ட் சாங் வலது புறத்திலிருந்து மூன்றாவதாக நின்றுக்கொண்டிருக்கிறார்.

ஹேர்பர்ட் சாங் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்.இவர் மேற்கிந்திய கிளர்ச்சி அணியில் விளையாடுவதற்கு முன்னர் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கெதிராக 1979ல் விளையாடியுள்ளார்.பின்னர் அவர் மேற்கிந்திய கிளர்ச்சி கிரிக்கெட் அணியில் விளையாடச் சென்றார்.இந்த அணி 1982-83ல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடச் சென்றது.

சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தென்னாப்பிரிக்க அணியினை சில காரணங்களால் 23 வருடங்கள் சஸ்பென்ட் செய்தது. அச்சமயம் அங்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மேற்கிந்திய கிளர்ச்சி அணியில் இருந்த அணைத்து வீரர்களையும் சேர்த்து சஸ்பென்ட் செய்தது.இதனால் மேற்கிந்திய கிளர்ச்சி அணியில் விளையாடிய எந்த வீரர்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடக் கூடாது என அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கூறியது.

சஸ்பென்ட்டிற்குப் பிறகு சாங்கால் முதல்தர கிரிக்கெட் போட்டி மட்டுமே விளையாட முடிந்தது.பின்னர் நிலக்கரி பதுக்கும் குழிகளில் சிலகாலம் பணிபுரிந்தார்.அதன்பின் ஜமைக்காவில் கிம்ஸ்டன் தெருவில் ஒரு அனாதை வாழ்க்கை வாழ்ந்தார்.

#3.ஃப்ரைன் ஸ்டதம்

ஃப்ரைன் ஸ்டதம்
ஃப்ரைன் ஸ்டதம்

ஃப்ரைன் ஸ்டதம் 1950களில் இங்கிலாந்தின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவராவார்.அத்துடன் ஸ்டதம் ஒரு சிறந்த தடகள வீரரும் ஆவர்.ஸ்டதம் 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் நியூசிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி,70 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்தியுள்ளார்.இவர்தான் உலகில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆவார்.பின்னர் இவருடைய கூட்டாளி ஃப்ரேட் ட்ருமேனும் இம்மைல்கல்லை அடைந்தார்.

கிரிக்கெட்டில் இவருடைய அற்புதமான பங்களிப்பின் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஆல் ஆஃப் ஃபேம் விருதினை வென்றார்.

அவரது இறுதி காலத்திற்கு தேவையான பணத்தை அவரால் ஈட்ட முடியவில்லை.அவரது நண்பர் ஃப்ரேட் ட்ருமேன் இவருக்காக நிதி திரட்ட 1980ல் சான்று விருதினை ஏற்பாடு செய்தார்.ஸ்டதம் லியுகேமியா நோயினால் தன்னுடைய 70தாவது பிறந்தநாளிற்கு ஒரு வாரமுள்ளபோது இறந்துவிட்டார்.

#2.ஜனார்தன் நாவ்லே

1930ல் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள். ஜனார்தன் நாவ்லே வலது-ப் புறத்தில் முதலாவதாக நின்றுக் கொண்டுள்ளார்
1930ல் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள். ஜனார்தன் நாவ்லே வலது-ப் புறத்தில் முதலாவதாக நின்றுக் கொண்டுள்ளார்

ஜனார்தன் நாவ்லே இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் ஆவார். அத்துடன் கிரிக்கெட்டில் தனது முதல் பந்தை இங்கிலாந்துடன் 1932ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கினார். நாவ்லே 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். இவர் 65 முதல்தர போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் 45உடன் மொத்தம் 1976 ரன்களை குவித்துள்ளார்.

1950ல் கிரிக்கெட்டில் தனது ஓய்விற்குப் பிறகு சர்க்கரை ஆலையில் பாதுகாவலராகப் பணிபுரிந்தார். அவர் ஒரு சிறிய வீட்டில் பூனாவில் வசித்து வந்தார். சில ஆதாரங்களில் அவர் தீவிர வறுமையில் இறந்துவிட்டதாகவும், அவரது கடைசி நாட்களில் பம்பாய்-பூனா நெடுஞ்சாலையில் பிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

#1.வாலி ஹேமண்ட்

வாலி ஹேமண்ட்
வாலி ஹேமண்ட்

வாலி ஹேமண்ட் 1927 முதல் 1947வரை இங்கிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக 85 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.1930களில் சிறந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாகவும், சிறந்த ஸ்லிப் ஃபில்டராவும் இருந்தார். இவர் 7249 ரன்களை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசித் தள்ளியதுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர் 1970ல் காலின் சௌத்ரி என்பவரால் இச்சாதனை முறியடிக்கப்பட்டது. இவருடைய 22டெஸ்ட் சதங்கள் 73 வருடங்களாக இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிக சதங்களாகக் கருதப்பட்டது. பின்னர் 2012ல் ஆலஸ்டர் குக் டிசம்பர் 2012ல் இச்சாதனையை முறியடித்தார். அத்துடன் 1933ல் இங்கிலாந்து கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் இவருடைய அதிகபட்ச ரன்கள் 336(ஆட்டமிழக்காமல்) ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். பின்னர் இச்சாதனை லென் ஹட்டோன் என்பவரால் ஐந்து ஆண்டுகள் கழித்து முறியடிக்கப்பட்டது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தென்னாப்பிரிக்கா சென்று ஒரு ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் திவாலானது. பின்னர் நடால் பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். ஆனால் அந்த வருமானம் அவருக்குப் போதுமானதாக இல்லை.1965ல் அவர் மாரடைப்பால் இறந்த பின் கிரிக்கெட் ஃபோர்டிலிருந்து அவருக்கு நினைவு நிதி திரட்டப்பட்டு அவருடைய மனைவி மற்றும் 3குழந்தைகளுக்கு தரப்பட்டது.

Quick Links