சொந்த மண் என்பது அனைத்து விளையாட்டிலும் அந்தந்த அணியனருக்கு மிகவும் சாதகமான ஒன்றாகும். அதிகளவு ரசிகர்கள் தங்களது மண்ணின் மைந்தர்களின் ஆட்டத்திறனை காண ஆடுகளத்திற்கு படையெடுத்து அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுவர். இது சொந்த மண் அணிக்கு மிக்க சாதகமாக இருக்கும்.
கிரிக்கெட்டில் இந்த ஊக்கம் கண்டிப்பாக ஒரு அணிக்கு தேவையான ஒன்றாகும். ஒவ்வொரு நாட்டிலுள்ள மைதானங்களிலும் வெவ்வேறான காலநிலை மற்றும் ஆடுகள தன்மை வேறுபடும். வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், ஆடுகளத்தின் இயற்கை தன்மை, ஆடுகள அளவீடுகள் ஆகியவை வெவ்வேறு நாடுகளில் உள்ள மைதானங்களில் வேறுபட்ட தன்மையுடன் காணப்படும். உதாரணமாக இந்திய கண்டங்களில் உள்ள மைதானங்களில் சற்று இலகிய நிலையில் ஆடுகளங்கள் காணப்படும். எனவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முழுவதும் சாதகமாக இருக்கும். அதிக பவுண்சி ஆடுகளமாக திகழும் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்களில் ஸ்விங் ஃபிட்சாக இருக்கும் என்பதால் பந்து பெரும்பாலும் பேட்ஸ்மேன்களை விட்டு சற்று அகல திசையில் செல்லும். பெரும்பாலும் மற்ற நாடுகளில் இவ்வாறு இருப்பது மிகவும் குறைவு.
இதுவே உலகக் கோப்பை தொடரில் சொந்த மண் அணிகள் உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்திருக்கும். கடந்த காலங்களில் வரும் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடுகள தன்மையை சொந்த மண் வீரர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பர். ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை நடந்த 11 சீசனில் 3முறை சொந்த மண்ணில் களம் கண்ட அணிகள் உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளன. நாம் இங்கு அந்த அணிகளைப் பற்றி காண்போம்.
#1 இலங்கை (1996)
1996 உலகக் கோப்பை தொடரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இனைந்து நடத்தின. அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இரண்டாவது முறை உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. ஆனால் இலங்கை மண்ணில் முதல் முறையாக உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு லாகூர்-ரில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. தற்போது வரை இந்த ஒரு உலகக் கோப்பை மட்டுமே இலங்கை வசம் உள்ளது.
இலங்கை அணிக்கு குழு தகுதிச் சுற்றில் மிகவும் சாதகமான நிகழ்வு ஒன்று நடந்தது. ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பாதுகாப்பின்மையால் கொலும்பு-வில் சென்று லீக் போட்டிகளில் பங்கேற்க மறுத்தது. இதனால் இலங்கை அணி இரு போட்டிகளிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை அரையிறுதியில் இந்தியாவை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொண்டது. இலங்கை வீரர்கள் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் தங்களது ஆதிக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினர். ஈடன் மைதானம் இந்திய அணியினருக்கு சிறிது கூட உதவவில்லை. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 252 ரன்களை குவித்தது. இந்திய அணி சேஸிங்கில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்களை விளாசி அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார், அதேபோல் அணில் கும்ளே 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.