சென்னை அணிக்கு குறைந்த தொகையில் அதிக பலனை ஈட்டிய 3 வீரர்கள்

TOP 3 smartest picks by chennai super kings in 2018 IPL
TOP 3 smartest picks by chennai super kings in 2018 IPL

2. அம்பத்தி ராயுடு :

Ambati Rayudu
Ambati Rayudu

ஐபிஎல் நட்சத்திர வீரர்களில் ஒருவர், அம்பத்தி ராயுடு. 2010 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடிய போதிலும் கடந்த முறை மும்பை அணி நிர்வாகம் இவரை விடுவித்தது. இதன் காரணமாக, ஐபிஎல் ஏலத்திற்கு வந்த இவர், சென்னை அணிக்காக 2.2 கோடிக்கு ஏலம் போனார். முதன் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய இவர், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வாட்சன் உடன் இணைந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தார். இந்த தொடக்க இணை, தொடர் முழுவதுமே எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து, அணிக்கு ரன்களை குவித்தது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு, 16 போட்டிகளில் விளையாடி மொத்தம் 602 ரன்களை குவித்து, 43 என்ற ஆவ்ரேஜ் உடன் 149.75 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்திருந்தார். அதிகபட்சமாக 100* ரன்களுடன் ஒரு சதம் மூன்று அரை சதங்கள் குவித்து அசத்தினார்.2019- ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலும் இவரது சாதனை தொடரும்.

1. ஷேன் வாட்சன் :

Watson
Watson

டி20 தொடரில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்றால் அவர் வாட்சன் தான். சர்வதேச அளவிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற தொடர்களில் 117 ஆட்டங்களில் பங்கு பெற்றுள்ள இவர், 4 சதங்கள் 16 அரைசதங்கள் உட்பட மொத்தம் 3177 ரன்களையும் 92 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார்.2017-ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக 9.5 கோடிக்கு ஏலம் போன இவர் அந்த அணியால் 2018-இல் விடுவிக்கப்பட்டார். அந்த ஏலத்தில் இவரை எடுக்க சென்னை, பெங்களூரு, டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.இறுதியில், சென்னை அணிக்காக 4 கோடிக்கு ஒப்பந்தம் ஆனார். அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு, மறக்கமுடியாத ஒரு தொடரை சென்னை அணி ரசிகர்களுக்கு அளித்தார். தொடரில் 15 போட்டிகளில் களமிறங்கி இரண்டு சதங்கள் இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தம் 555 ரன்களை குவித்தார். மேலும் பந்துவீசி ஆறு விக்கெட்களையும் எடுத்தார்.தொடரில் இவர் அளித்த மிகச் சிறந்த இன்னிங்ஸ் என்றால், இறுதிப்போட்டியில் சதம் அடித்து அணியை கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததே. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தன் திறமை குறையவில்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார், இந்த வாட்சன்.

எழுத்து: அஸ்வின் சீனிவாசா

மொழியாக்கம்: சே. கலைவாணன்